வியாழன், 14 அக்டோபர், 2010

தலையங்கம்: மெய் "சிலி'ர்க்கிறது!

கனிமச் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டு கடந்த 69 நாள்களாக மண்ணுக்குள் புதையுண்டு கிடந்த 33 பேரை மீட்கும் பணியை சிலி நாட்டின் அரசு வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. முதல்நாளில் 13 பேர் மீட்கப்பட்டனர். ஒவ்வொருவரும் குழல்உறையிலிருந்து வெளிப்பட்டபோது, மக்களின் ஆனந்தக் கண்ணீர் சுரங்கத்தின் உள்ளே அடுத்ததாகக் காத்திருக்கும் நபர்களையும் தொட்டிருக்கும்!  இந்த மீட்புப் பணியில் மிகவும் பாராட்டுக்குரிய விஷயம், ஒரு சிறிய நாடான சிலி, இந்த 33 பேரை மீட்பதில் காட்டிய அக்கறைதான். ஒரு நாடு முழுவதும் இவர்களது மீட்புக்காகக் காத்திருந்தது என்றால் மிகையில்லை. சுரங்கத்திலிருந்து குழல்உறை மூலம் முதல் சுரங்கத் தொழிலாளி ஃபிளோரன்சியா அவலோஸ் வெளியே வந்தபோது, அங்கே காத்துநின்ற அந்நாட்டின் அதிபர் கட்டித் தழுவி வரவேற்றார். உலகம் முழுவதும் சிலி நாட்டின் விடா முயற்சியைப் பாராட்டாமல் இல்லை.  ஆகஸ்ட் 5-ம் தேதி தாமிரக் கனிமச் சுரங்கத்தில் 700 மீட்டர் ஆழத்தில் இவர்கள் இருந்தபோது சுரங்கம் முழுதுமாக மூடிக் கொண்டது. சுரங்கத் துறை அமைச்சரே இவர்கள் இறந்துவிட்டிருப்பார்கள் என்று அறிவித்த பிறகும், அவர்கள் உயிருடன் இருப்பதாகத் தனது உள்ளுணர்வு சொல்கிறது என்று பல இடங்களில் சிறுதுளை போட்டுப் பார்த்த அதிபர் செபாஸ்டின் பினேராவை எத்தனை பாராட்டினாலும் தகும்.  சிறுதுளைக் குழல்களை பல இடங்களிலும் உட்செலுத்திப் பார்த்துக்கொண்டிருந்தபோது, 17-வது நாளில் அதன் முனையில், ரப்பர் பேண்டு சுற்றப்பட்ட ஒரு தகவல் கடிதம் வந்தது: நாங்கள் 33 பேரும் உயிருடன் இருக்கிறோம் என்று.  அதன் பிறகு சிலி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அற்புதமானவை. அந்தச் சிறுதுளை வழியாக அவர்களுக்கு குடிநீர், திரவ உணவு, மருந்து மாத்திரைகள், உறவுகளின் அன்புக் கடிதங்கள், மனம் தளராமல் இருக்கும் உளவியல் ஆலோசனைகள் என எல்லாவற்றையும் உள்ளே அனுப்பி வைத்து, நம்பிக்கை அளித்து, மீட்புப்பணிகளை முடுக்கி விட்டார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய அளவிலான ஆழ்துளைகள் போட்டனர். அந்தத் துளைகள் வழியாக இவர்களை வெளியே கொண்டுவர தனித்துவமான குழல்உறைகள் செய்தனர். மிகப்பெரும் செலவை எதிர்கொண்டுள்ளது சிலி அரசு.  இதில் பாராட்டுக்குரிய மற்றொரு விஷயம், சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்ட 33 பேரின் மனஉறுதி. தாங்கள் உள்ளே உயிருடன் இருக்கிறோம் என்ற தகவலை அனுப்பி, தங்களுக்கு நீரும் உணவும் கிடைக்கும் வரை அவர்கள் அனைவரும் தங்களிடம் இருந்த உணவு, நீரை ரேஷன் முறையில் சாப்பிட்டு, உயிரைக் காத்து வந்துள்ளனர்.  வெளியேறும்போது யார் முதலில் என்ற கேள்விக்கு, தங்களில் திறமையானவரும், எந்தச் சிக்கலிலும் மனஉறுதி தளராதவருமான ஃபிளோரன்சியா அவலோûஸ தேர்வு செய்துள்ளனர். ஏனென்றால், 700 மீட்டர் ஆழத்திலிருந்து குழல்உறை மேலே செல்லும்போது மீண்டும் மண்சரிவு, அல்லது பாறை அழுத்தத்தில் சிக்கிக் கொள்ள நேரிட்டால் அந்தச் சூழலில் மனம் தளராமல் இருப்பார் என்பதால் அவரைத் தேர்வு செய்துள்ளனர்.  இந்தச் சம்பவம் இரண்டு விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது. ஓர் அரசு நினைத்தால், களத்தில் இறங்கி நின்றால் யாரையும் காப்பாற்ற முடியும். இரண்டாவதாக, நாம் பயன்படுத்தும் பல்வேறு கனிமப் பொருள்களுக்காக எத்தகைய துயரங்களை பெயர்தெரியாத மனிதர்கள் சந்திக்க நேர்கிறது என்பதும் எத்தனை பேர் இறக்கிறார்கள் என்பதும்தான்.  நெய்வேலி போன்ற திறந்தவெளிச் சுரங்கங்களில் விபத்துகளும் உயிரிழப்புகளும் மிகக் குறைவு. ஆனால் மண்ணைக் குடைந்து செல்லும் சுரங்கங்களில்தான் விபத்துகள் மிக அதிகம். திடீரென மண்சரிவு அல்லது பாறை விழுந்து வழிஅடைத்தல், அல்லது விஷவாயு வெளிப்படுதல் என சுரங்கத் தொழிலாளர்கள் பல விபத்துகளுக்கு ஆளாகின்றனர்.  என்னதான் பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கைக் கருவிகள் இருந்தாலும் சுரங்கங்களில் இத்தகைய விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை.  2010-ம் ஆண்டில் இதுவரை 59 சுரங்க விபத்துகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் பெரும் விபத்து வெர்ஜீனியாவில் நடந்தது. 27 பேர் இறந்தனர். சிலி, சீனா, அமெரிக்கா, ரஷியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இத்தகைய சுரங்கங்கள் அதிகமாக இருக்கின்றன.  1907-ம் ஆண்டு அமெரிக்க சுரங்க விபத்துகளில் இறந்தோர் எண்ணிக்கை 3,242 ஆக இருந்தது. 2009-ம் ஆண்டு 18 ஆகக் குறைந்துள்ளது. இத்தகைய விபத்துகள் சீனாவில் அதிக அளவில் நடைபெறுவதாகவும் ஆனால் அந்த மரணங்கள் பதிவு செய்யப்படுவது மிகவும் குறைவு என்றும் கூறப்படுகிறது. சென்ற ஆண்டு சீன அரசு அறிவித்த சுரங்க விபத்து மரணங்கள் 2000-க்கும் அதிகம்.  இன்றைய தொழிலாளர்கள் சாலைகளில் இறப்பதைக் காட்டிலும், குறைந்த எண்ணிக்கையில்தான் தொழிற்சாலை மற்றும் சுரங்க விபத்துகளில் இறக்கின்றனர் என்பது படிப்பதற்கு ஆறுதலாக இருக்கலாம். ஆனால், உயிருக்கு விலை உண்டா என்ன? ஒரு தொழிலாளிக்கு ஒரு நாடு கொடுக்கும் மிகப் பெரும் மரியாதை, அவனைக் காப்பாற்றுவதற்காக எதையும் செய்யத் துணிவுகொள்ளும் மனநிலைதான். சிலி, நம்மை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது.
கருத்துக்கள்

சிலி அரசின் சீரான பணியைச் சிறப்பாகப் பாராட்டியமைக்கும் 'சிலி'ர்க்கும் தலைப்பைச் சூட்டியமைக்கும் பாராட்டுகள். நல்ல தகவலை நினைவுகூர்ந்த திரு சாலமனுக்கு மிகுந்த பாராட்டுகள். 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன் (யோவ் எடிசா என்றும் கேட்கிறியேப்பா என்றும் ஒருமையில் எழுதுவதைத் தவிர்க்க வேண்டுகிறேன்.)
By Ilakkuvanar Thiruvalluvan
10/14/2010 12:34:00 PM
My best wishes to Mr. President & Workers
By Sudhakaran
10/14/2010 12:30:00 PM
I feel proud and happy to read this one.we congatulate the efforts of that President.Andalso He is like GOD.I pray that gentle man.
By balasubramani.a
10/14/2010 12:04:00 PM
This is the identification of the Good Government and the ruler......no words to explain..... they only know how to respect to poors.
By bala
10/14/2010 11:33:00 AM
நேற்று இந்த செய்தியுடன் ஒரு விளக்கபடமும் வந்திருந்தது .அப்போது நம் தாய்த்திருநாட்டில் இந்தசெதியை யாரேனும் பார்க்க மாட்டர்கள தினமணியில் இதை பற்றி ஒரு தலை அங்கம் வரலாமே என்று நினைதேன் வாழ்க .ஆங்கில படங்களில் எல்லாம் சில கட்சிகள் வரும் ஒரு தனி மனிதனை காப்பதற்காக ஒரு அரசாங்கத்தின் எல்லா துறைகளும் செயல் பட்டு அவன் காப்பற்றபடுவான்.அப்போது தோன்றும் சினிமா படத்திற்காக இப்படி எடுக்கிறார்கள் மற்றும் அவையெல்லாம் பணக்கார நாடுகள் என்று தோன்றும்.ஆனால் தனிமனித நலத்திற்காக மேற்கத்திய நாடுகள் நிறைய செலவு செய்கின்றனஆனால் நம் நாட்டில் நிறைய பணம் இருந்தும் சரியான தலைமை இல்லாததால் தனி மனித சுதந்திரமும் பாதுகாப்பும் குப்பையில் இருக்கின்றன .எங்கு பார்த்தாலும் காட்டுமிரண்டிதனமான தனிமனித கட்டுபாட்டில் கொத்தடிமைகள.உடல் உயிர்,உடமை எதற்கும் பாதுகாப்பு இல்லாத பொதுமக்கள் .கொள்ளை அடிப்பதை தவிர வேறு ஒன்றுமே அறியாத அதிகாரிகள் அரசியல் தலைவர்கள்.ஆப்பரிக்க நாடுகளை மிஞ்சும் வகையில் சுகாதார சீர்கேடு..இநிலையில் வெளிச்சம் போடும் பத்திரிகைகள் மட்டுமே இந்திய மக்களுக்கு துணை i .
By r.kannan
10/14/2010 10:57:00 AM
I lova Chili - I hate the blody INDIA
By mannur
10/14/2010 10:48:00 AM
சிலி மட்டுமல்ல தங்களின் தலையங்கமும் மெய் சிலிர்க்க வைத்தது
By fact
10/14/2010 10:43:00 AM
சிலி மட்டுமல்ல தங்களின் தலையங்கமும் மெய் சிலிர்க்க வைத்தது
By fact
10/14/2010 10:42:00 AM
Just by becoming an IAS or IPS or Politican is not big.. Should have humanity by nature and should love to be honest. Should fight shy in being an example for a goodness. But what we see in India is, most of them are filthy guys, holding such offices and oiling each other survive.
By jayvee
10/14/2010 10:28:00 AM
Am happy to see only Dinamain have social responsibility and giving importance to these kind of issue.Keep the momentum up..
By unmai
10/14/2010 10:22:00 AM
சிலி நாட்டு அரசிற்கும் மனநிலை குன்றாத தொழிலாளர்கழுக்கும் எமது பாராட்டுகள்.மேற்கு வங்காளத்தில் உடனடியாக செயல்பட்டு பல உயிர்களை மீட்ட எஞ்ஜினியர் ஜஸவந்த் சிங் கில் மிக மிக பாராட்டுக்குறியவர். அதேநேரம் நமது அரசுகள் எப்போதும் நமது நாட்டு மக்களின் உயிரை பெரிதாக மதிக்கிறதா என்பது சந்தேகமே. உதாரணமாக போபால் விஷ வாயு விபத்தில் இழப்பீடு கொடுப்பதில் நடந்த அரசின் குழறுபடிகள். வெளிநாட்டு வாழ இந்தியர்கள் பால் அரசு காட்டும் அக்கறை இன்மை, நமது தமிழகக் கடற்கரையோரம் அடிக்கடி காணாமல் போகும் மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கடத்தி சென்று துன்ன்புறுத்துவது அல்லது கொல்லப்படுதல், இவைகளில் அரசின் நெடுநாளைய மெத்தனப்போக்கு நாம் அறிந்ததே.ஆகவே ஒரு நாடு அரசியலில் முதிற்சி பெற்ற நாடாக கருதவேண்டுமென்றால் மக்கள் தங்க்களது மகத்தான உரிமையெய் தெரிந்திருக்க வேண்டும். அதற்காக தீவிரமாகப் போராட வேண்டும்.அரசு தனது கடமையெய் உனர்ந்து சேவை செய்கிற அரசாக இருக்க வேண்டும். இதுதான் அரசியல் நாகரீகம் என்பது.நமது பிரதமர்கழும் முதல்வர்கழும் விமானத்திலிருந்தபடியே துயரங்களை பாரதது செல்லக்கூடியவர்களே.நேரடியாக மக்களை சந்தித்து துயர் துடைப்ப
By Kumar
10/14/2010 10:21:00 AM
"சில நாட்களுக்கு முன்பு மஸ்கட் விமான நிலையத்தில் பாஸ்போர்டை துளைத்த குற்றத்துக்காக ஒரு இந்திய பெண்ணை 5 நாட்கள் காக்கவைத்து சாகடித்த இந்திய தூதரக அதிகாரியின் கொடும் செயலு. இந்திய அரசும் அதன் அதிகாரிகளும் தனது மக்களின் உயிருக்கு கொடுக்கும் மரியாதையை இந்த சிலி நாட்டு அதிகாரிகளிடமிருந்து எப்போ படிக்கப்போகின்றார்களோ?. வெளிநாட்டு தூதரக அதிகாரிகளின் மீது இதுபோன்ற தவற்றிக்கு இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். சில அரசே காவிபயங்கரவாதத்தின் பிடியில் இருந்து சிறுபான்மையினர்களை கொல்வதையே தொழிலாக செய்கின்றது.
By pichai
10/14/2010 9:47:00 AM
"Will our politicians read this news atleast? Each and every one of India must understand that the value of human life and is to be given the first priority than anything else" R.Hariharan
By R. Hariharan
10/14/2010 9:36:00 AM
migavum paratakuriyathu
By jainath
10/14/2010 9:15:00 AM
சில நாட்களுக்கு முன்பு மஸ்கட் விமான நிலையத்தில் பாஸ்போர்டை துளைத்த குற்றத்துக்காக ஒரு இந்திய பெண்ணை 5 நாட்கள் காக்கவைத்து சாகடித்த இந்திய தூதரக அதிகாரியின் கொடும் செயலும் ஞாபகத்திற்கு வந்தது.
By Pichai
10/14/2010 9:13:00 AM
The SILI government has taken great responsibility. We should appreciate the effort taken by the chief of the coutry. The life of human is very important. but the srilankan did not under stand and the world allowed many people to die. Just compare the chief of SILI and the chief (chaep) of srilangan.
By Dr.S.Thamizhmanii
10/14/2010 8:52:00 AM
400 தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை கொன்றபோதும் கண்டு கொள்ளாத மத்திய மாநில அரசுகளுக்கு இந்த தலையங்கம் நல்ல சவுக்கடியாக இருக்கும்.
By Unmai
10/14/2010 8:50:00 AM
Tamil fisherman and India??????!!!!!
By Lenin
10/14/2010 8:39:00 AM
இவ்விபத்து ஏற்பட்ட நாளில் இருந்தே நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். இதற்காக தலையங்கம் தீட்டிய தினமணியை பாராட்டலாம். /ஓர் அரசு நினைத்தால், களத்தில் இறங்கி நின்றால் யாரையும் காப்பாற்ற முடியும்./ உண்மை. உங்களுடன் நானும் சிலியை வாழ்த்துகிறேன். தொழிலாளர் தோழர்களின் மனவுறுதியைப் பாராட்டுவோம்.
By மணிவர்மா.
10/14/2010 8:04:00 AM
By this act, they made the whole world to look at them with respect. Leaders are to be like that. Priorities are to be made properly. We bow to them with reverence. And we???
By gopalan
10/14/2010 7:58:00 AM
சிறப்பான தலையங்கம். வாழ்த்துக்கள் தினமணி.. 33 பேரும் மீட்கப்பட்டதாக தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன..
By பாலா
10/14/2010 7:56:00 AM
oh! I'm sorry! மிக்க நன்றி எடிசன்!
By Solomon
10/14/2010 7:48:00 AM
I really appreciate the chile government. It shows how they are respecting the people life. Also it shows their determination. Viva chile.
By Raj
10/14/2010 7:33:00 AM
ஒரு தொழிலாளிக்கு ஒரு நாடு கொடுக்கும் மிகப் பெரும் மரியாதை, அவனைக் காப்பாற்றுவதற்காக எதையும் செய்யத் துணிவுகொள்ளும் மனநிலைதான். நமது நாட்டிலே இது நடந்திருந்தால் சில லட்சங்களை கருணை தொகையாக கொடுத்து கதையை முடித்திருப்பார்கள்.
By Deena
10/14/2010 7:26:00 AM
சிலி நாட்டு அதிபர் தன் நாட்டு மக்களின் உயிர் மீது கொண்ட அக்கறை உங்களை மட்டுமில்லை எங்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. அதுவும் மற்றவர்களெல்லாம் மீட்கமுடியாது இறந்து விட்டிருப்பார்கள் என்றபோதும் என் உள்மனது சொல்கிறது அவர்கள் உயிருடன் இருப்பார்கள் என்று அதீத செலவையும் பொருட் படுத்தாமல் மனிதத்தின் உயிர் விலைமதிப்பற்றது என்பதை உணர்ந்து செயல்பட்ட அந்த அதிபர் உண்மையான தலைவன், மாமனிதன். இதை படித்தபோது எனது கண்களில் கண்ணீர் வந்தது. அப்படிப்பட்ட தலைவன் நமக்கு எப்போது கிடைப்பான் என்ற ஏக்கமே மிஞ்சியது! சில நாட்களுக்கு முன்பு மஸ்கட் விமான நிலையத்தில் பாஸ்போர்டை துளைத்த குற்றத்துக்காக ஒரு இந்திய பெண்ணை 5 நாட்கள் காக்கவைத்து சாகடித்த இந்திய தூதரக அதிகாரியின் கொடும் செயலும் ஞாபகத்திற்கு வந்தது.
By ரிஷி
10/14/2010 7:14:00 AM
சிலி, அதிபர் செபாஸ்டின் பினேராவை எத்தனை பாராட்டினாலும் தகும் ஓர் அரசு நினைத்தால், களத்தில் இறங்கி நின்றால் யாரையும் காப்பாற்ற முடியும். ஒரு தொழிலாளிக்கு ஒரு நாடு கொடுக்கும் மிகப் பெரும் மரியாதை, அவனைக் காப்பாற்றுவதற்காக எதையும் செய்யத் துணிவுகொள்ளும் மனநிலைதான். சிலி, நம்மை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது.
By கிரி...அனகை....
10/14/2010 7:11:00 AM
Excellent.No need to read.Heading is enough.Good Editorial
By Rangiem N Annamalai
10/14/2010 6:52:00 AM
MR .சாலமன் எனக்கு ரொம்ப நாளா கேட்கணும் போல இருந்தது அதுக்குதான் கேட்டேன் வேறு உல் குத்து ஏதும் இல்லை . உங்கள் கருத்துகளை தொடர்ந்து எழுத கேட்டு கொள்கிறேன், உங்கள் எழுத்துகள் பத்திரிகை ஆசிரியர் போல் உள்ளது அதுக்குதான் கேட்டேன் .
By ஆல்வா எடிசன்
10/14/2010 6:10:00 AM
MR .சாலமன் எனக்கு ரொம்ப நாளா கேட்கணும் போல இருந்தது அதுக்குதான் கேட்டேன் வேறு உல் குத்து ஏதும் இல்லை . உங்கள் கருத்துகளை தொடர்ந்து எழுத கேட்டு கொள்கிறேன், உங்கள் எழுத்துகள் பத்திரிகை ஆசிரியர் போல் உள்ளது அதுக்குதான் கேட்டேன் .
By ஆல்வா எடிசன்
10/14/2010 6:10:00 AM
1989 ஆண்டு! அறுபதுக்கும் மேற்பட்ட சுரங்க தொழிலாளர்கள் மேற்கு வங்காளத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவித்தபோது ஒரு சீக்கிய பொறியாளர் தலைமையில் விரைவாக செயல்பட்டு பிரத்தியோக லிப்ட் தயாரித்து ஒவ்வொருவராக வெளியில் கொண்டு வரப்பட்டார்கள். அவர் முதன்முதலாக செய்த அந்த சாதனையை, உண்மையில் இந்தியரின் கண்டுபிடிப்பை பயன்படுத்திதான் இப்போது சிலி நாட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நம்முடைய மீடியா இப்போது கூட அதனை நினைவு கூற மறந்து விட்டது. பி ஜே பி பற்றி ஏதாவது கேவலமாக செய்தி கிடைக்குமா என அலையும் நேரத்தில் இது போன்ற நினைவு கூறல் நாம் உலகிற்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை தெரியப்படுத்தும். நாமே இதனை மறந்து விட்டு அந்நியனை கண்டு வாய் பிளந்து நிற்க வேண்டியதுதானா?அந்த மேற்கு வங்க சம்பவத்தில் தொழிலாளர்கள் மாட்டிக்கொண்ட பகுதியை நோக்கி தண்ணீர் பாய்ந்து எந்நேரமும் சாகலாம் என்றிருந்த ஆபத்தான நிலையில் இரண்டே நாட்களில் அவர்கள் மீட்கப்பட்டனர். இப்போது சிலியில் நடந்திருப்பது இரண்டு மாத கால வேலை.தினமணி கூட எந்திரன் படத்தை பற்றி ஏதாவது செய்தி மற்றும் கார்டூன் போட்டுக்கொண்டிருக்கிறதே தவிர இந்த நிகழ்ச்சியை மறந்து
By Solomon
10/14/2010 6:01:00 AM
யோவ்! எடிசா! நான் தினமணி யை விமர்சித்து எழுதிய பின்னும் தினமணி ஊழியரான்னு கேக்கிரியேப்பா?
By Solomon
10/14/2010 5:59:00 AM
vunmaithan
By asharaf
10/14/2010 5:58:00 AM
தமிழ் நாட்டை விட்டு வெகு தொலைவில் இருந்தாலும் ஒரு சிறந்த பத்திரிகையை வாசிக்கின்றோம் என்ற பெருமை கொண்டேன். நன்றி தினமணி.அரசின் பார்வைக்குச் செல்லட்டும் இத்தலையங்கம்.
By வாதிரியார், சாஹிப்கஞ்ச்,ஜார்க்ஹண்ட்.
10/14/2010 5:41:00 AM
MR .சாலமன் நீங்கள் தினமணி ஊழியர?
By ஆல்வா எடிசன்
10/14/2010 5:23:00 AM
அந்த காட்சி cnn நேரடியாக ஒளிபரபியது , பார்க்கும் பொது நமக்கே வியப்பாக இருந்தது , அந்த 33 பெரும் மன உறுதியோடு இருந்ததுதான் அவர்கள் வெளிய வந்ததுக்கு, அவர்களுக்கு மறு வாழ்வு அளித்த அந்த இறைவனுக்கு பல நன்றிகள் .
By யூசுப் சாஹிப்
10/14/2010 4:52:00 AM
its great achievement, The President has given great pleasue to that people. His inner soul given hope still they are living that's what now they are living now, Great Salute to that Person (President)
By R.Sathiyamoorthy
10/14/2010 4:39:00 AM
yes.long live chile.blessings to all
By asaithambi
10/14/2010 4:26:00 AM
yes.long live chile.blessings to all
By asaithambi
10/14/2010 4:26:00 AM
yes.long live chile.blessings to all
By asaithambi
10/14/2010 4:26:00 AM
yes.long live chile.blessings to all
By asaithambi
10/14/2010 4:26:00 AM
அந்த மதிப்பிற்குரிய பஞ்சாப் என்ஜினீயர் பெயர் ஜஸ்வந்த் சிங் கில். பின்னாளில் மத்திய அரசு விருது வழங்கப்பட்டது அவரது உயரிய சேவைக்காக!
By Solomon
10/14/2010 4:23:00 AM
அந்த மேற்கு வங்க சம்பவத்தில் தொழிலாளர்கள் மாட்டிக்கொண்ட பகுதியை நோக்கி தண்ணீர் பாய்ந்து எந்நேரமும் சாகலாம் என்றிருந்த ஆபத்தான நிலையில் இரண்டே நாட்களில் அவர்கள் மீட்கப்பட்டனர். இப்போது சிலியில் நடந்திருப்பது இரண்டு மாத கால வேலை.தினமணி கூட எந்திரன் படத்தை பற்றி ஏதாவது செய்தி மற்றும் கார்டூன் போட்டுக்கொண்டிருக்கிறதே தவிர இந்த நிகழ்ச்சியை மறந்து விட்டது!
By Solomon
10/14/2010 4:19:00 AM
1989 ஆண்டு! அறுபதுக்கும் மேற்பட்ட சுரங்க தொழிலாளர்கள் மேற்கு வங்காளத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவித்தபோது ஒரு சீக்கிய பொறியாளர் தலைமையில் விரைவாக செயல்பட்டு பிரத்தியோக லிப்ட் தயாரித்து ஒவ்வொருவராக வெளியில் கொண்டு வரப்பட்டார்கள். அவர் முதன்முதலாக செய்த அந்த சாதனையை, உண்மையில் இந்தியரின் கண்டுபிடிப்பை பயன்படுத்திதான் இப்போது சிலி நாட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நம்முடைய மீடியா இப்போது கூட அதனை நினைவு கூற மறந்து விட்டது. பி ஜே பி பற்றி ஏதாவது கேவலமாக செய்தி கிடைக்குமா என அலையும் நேரத்தில் இது போன்ற நினைவு கூறல் நாம் உலகிற்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை தெரியப்படுத்தும். நாமே இதனை மறந்து விட்டு அந்நியனை கண்டு வாய் பிளந்து நிற்க வேண்டியதுதானா?
By Solomon
10/14/2010 4:09:00 AM
இப்படி மனிதாபிமான செயள்களுக்கு தினமணி தலையங்கம் எழுதுவதர்க்கு வாழ்த்துக்கள். சிலி ஒரு சின்ன நாடு. மக்கள் தொகை 17 மில்லியன்.ஆதாவது சிங்கார செனையை விட 4 மடங்கு சிறிது. இப்படி இருந்தும் 33 சுரங்க தொழிளாலர்களை மீட்டார்கள். இந்த தொழிளாலர்களுக்கு இது ஒரு மறுபிரவி. சுரங்கம் இடிந்தவுடன் எல்லோரும் அவர்கள் மீண்டும் வருவார்களா என்ற சந்தேகம் இருந்தது. சிலி நட்டின் அயராத உழைப்பால் 33 பேர் மறுபிரவி பெற்றார்கள். நேற்றைய தினம் இரவு 10.30 லிருந்த பி.பி.சி, ஸ்கை நியூஸ், சி.என்.என் 24 மணிநேரமும் இந்த சுரங்க தொழிளாலர்களை மீட்பதை காட்டினார்கள். என்ன ஒழுக்கம், உலகமே வியந்து பாராட்டியது. இதை பார்க்கும் போது இந்தியவின் காமென்வெல்த் விளையாட்டின் இந்தியர்கள் செய்த தில்லுமுலுகள், சலோ என்ற எண்ணம் , நான் பெறியவனா நீ பெரியவனா என்ற அடிதடி தான் கண்முன்னே வந்தத்து. சிலி க்கு வாழ்த்துகள். இந்தியா எப்போது இதுமாதிரி வரும் ?
By Appan
10/14/2010 3:05:00 AM
Hatsoff to Chile Govt.
By mdhandapani
10/14/2010 2:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக