வெள்ளி, 5 நவம்பர், 2010

தமிழக அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவோம்


தமிழக அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவோம்: இளைஞர் காங்கிரஸ்



சேலம்.​ நவ.​ 4: அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டும் பொறுப்பு இளைஞர் காங்கிரசுக்கு உள்ளதாக மாநிலத் தலைவர் யுவராஜா தெரிவித்தார்.மத்திய அரசின் சாதனைகளை விளக்கி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மேற்கொண்டுள்ள நடைபயணம் வியாழக்கிழமை ஆத்தூர் வந்து சேர்ந்தது.​ இதில் பங்கேற்ற மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா செய்தியாளர்களிடம் கூறியது:தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் மத்திய அரசின் பங்கும் உள்ளது.​ ஆனால் தமிழக அரசு அதனை வெளிப்படையாகச் சொல்வதில்லை.​ ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலும் அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது.​ இவ்வாறு சொல்லும்போது தவறுகளைச் சரி செய்து கொள்ள வேண்டும்.கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தாக்கல் செய்த சொத்துக் கணக்குடன்,​​ தற்போதைய நிலவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் உடனடியாக வெளியிட வேண்டும்.இந்திரா நினைவு தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டத்தில் பெயர் மாற்றம் செய்து எழுதி வருவது கண்டிக்கத்தக்கது.​ மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.​ எனவே,​​ எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் தனிப்பட்ட ஒருவரின் பெயரை விளம்பரப்படுத்தக் கூடாது.தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டண நிர்ணயம் செய்தது பாராட்டுக்குரியது.​ அதே சமயம் தனியாரை விட அதிக வசதிகளுடன் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தினால் இந்த பிரச்சினை வெகு எளிதாகத் தீரும் என்றார் அவர்.
கருத்துகள்

மத்திய அரசின் தவறுகளையும் குற்றங்களையும் சுட்டிக்காட்டும் துணிவும் நேர்மையும் இவர்களுக்கு இருக்கிறதா? ஈழத் தமிழர்களின் படுகொலையைச் சொன்னாலும் தமிழக மீனவர்கள் படுகொலையைச் சொன்னாலும் சிங்கள இறையாண்மைக்கு எதிரானது எனக் கூறி இனப் படுகொலையில் ஈடுபடும் காங்கின் கோர முகத்தைக் குறைந்தது தம் தலைமையிடமாவது சுட்டிக் காட்டும் வீரம் இவர்களுக்கு உள்ளதா? எங்கும ஊழல் ! அதிலும் ஊழல்! என்பதையே ஆட்சி நெறியாகக் கொண்டுள்ள காங்.கின் ஊழல் முகத்தை உலகிற்குக் காட்டும் தூய்மை எண்ணம் இவர்களுக்கு உள்ளதா? ஒரு வேளை தி.மு.க.வுடன் கூட்டணி நீடித்தாலும் இது போல் அப்பொழுதும் பேசும் துணிவு உள்ளதா? வினாக்கணைகளுடன் 
இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/5/2010 3:39:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முதல் 5 வாசகர் கருத்துகளில் இக்கருத்தையும் மேலும் 3 கருத்துகளையும் ஒரே நாளில் தெரிவு செய்த தினமணிக்குப் பாராட்டும் நன்றியும். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/5/2010 1:22:00 PM
There are people (Tamils) in Tamilnad and all over the world who just feel nausating or retching at the very word of Congress for what congress has done to Tamil community
By Jim Tolstoy
11/5/2010 9:04:00 AM
I salute you Ilakkuvanar Thiruvalluvan. If Tamils know as much as you know about congress we will have a better country and better state to live. Our people can go anywhere freely and live peacefully.
By Onion Miranda
11/5/2010 9:02:00 AM
If Tamils support congress I don't blame them because they think the congress is as good now as it was when our leader the most venerable Kamaraj and Jawaharlal were. This concept must go away from their hearts. The present youth must understand the congress now at the centre is the worst enemy of the Tamils. Don't be just carried away by the emotional speeches of the congress. Think of your race first.
By John Christopher
11/5/2010 8:44:00 AM
Send these people who speak for Congress for DNI. Find out if at all there is any Tamil blood in them. In spite of killing 70,000 Tamils and killing more than 2,000 fishermen who speak about congress in Tamilnad shamelessly. Where do we have freedom of speech in Tamilnad and India? If anyone speaks for the rights of the underprevileged and downtrodden, they are behind the bars under some law..Shut your mouth and don't talk about the good the congress has done and there is nothing to talk about
By Aishath Adam
11/5/2010 8:38:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக