செவ்வாய், 2 நவம்பர், 2010

தமிழ்த் திரைப்படங்களுக்கு விதிகளை மீறி வரிவிலக்கா?: அரசு விளக்கம்


சென்னை, நவ.1: திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை முடிவுசெய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழு முடிவுசெய்யும் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக விளக்கம் அளித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு மட்டுமே, கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அரசின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.  அந்த அடிப்படையில் கூடுமானவரையில், பெயர்ச் சொல்லாகவாவது படத்தின் பெயர் தமிழில் அமைந்துள்ள திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.  உதாரணங்கள்: 'சிவாஜி',  'ஏகன்', 'பாஸ் (எ) பாஸ்கரன்', 'கோவா', 'எந்திரன்' போன்ற திரைப்படங்களாகும்.  ஆனால், இந்தத் துறையில் அறிமுகமாகி, படங்களின் தயாரிப்பாளராகவும் அல்லது படங்களுக்கு இயக்குநராகவும்,         கதை-உரையாடல் எழுதுபவராகவும் வளரத் தலைப்பட்டுள்ள சில கலைஞர்கள்; கேளிக்கை வரிவிலக்குக்கான அரசின் நிபந்தனைகளைப் புரிந்து கொள்ளாமலும், அல்லது வேண்டுமென்றே திட்டமிட்டு, திரைப்படத் தலைப்புகளில் அறவே தமிழ்மொழி அல்லாத பெயர்களைச் சூட்டுவதும்; அவற்றுக்குக் கேளிக்கை வரிவிலக்கு உண்டென்று பிரச்சாரம் செய்வதும்; அதனடிப்படையில், இரண்டு தரப்பினர் விவாதித்துக் கொண்டு, அவர்களில் ஏதோ ஒரு தரப்பினர்க்கு, இந்த வரிவிலக்கு விவகாரத்தில் அரசு துணை இருப்பது போன்ற ஒரு செய்தியை  அரசியல் நோக்குடன் வெளியிட்டு வருவதும் இப்பொழுது வழக்கமாக ஆகத் தொடங்கியுள்ளது.திரைப்படங்களுக்குத் தமிழில் பெயரிடப்பட்டிருக்கிறதா  அல்லது திரைப்படங்களுக்கு இடப்பட்டுள்ள தலைப்புக்கான பெயர்கள் கூடுமானவரையில் தமிழில் உள்ளதா என்பதை முடிவு செய்து அறிவிக்க தமிழக அரசின் வணிகவரித் துறைச் செயலாளர், தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஆகிய அதிகாரிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.  அக்குழுவின் சார்பில் முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பதற்குமுன்பு, சில படங்களுக்கு அந்த விதிகளை மீறி, வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வருகின்ற செய்திகளுக்கு அரசு பொறுப்பல்ல.  அந்தக் குழு ஒப்புக் கொள்ளாத எந்தவொரு பெயரையும் திரைப்படங்களுக்கு வைத்து வெளியிடப்படுமேயானால், வரிவிலக்கு பற்றி கூறுவதற்கு அந்த படத் தயாரிப்பாளர்களுக்கு உரிமை கிடையாது என்பதையும் அவர்கள் முழு வரியையும் செலுத்தியே ஆகவேண்டும் என்பதையும்  இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.  தமிழக அரசு வழங்கும் வரிவிலக்கு பற்றி மட்டுமே இந்த விளக்கமாகும். எந்தவொரு படத்தையும் வெளியிடுவதற்கான அனுமதியை மத்திய அரசின் தணிக்கை துறைதான் வழங்கும் என அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

மேலும் கேளிக்கை வரி விலக்கு அளிப்பதாயின் கட்டணச்சீட்டுகளில அதைச் சேர்க்காமல் கட்டணைத்தைக் குறைத்து அதன் பயன் பார்க்கும் மக்களுக்குப் போய்ச்சேர வேண்டும். அவ்வாறில்லாமல் பொது மக்களிடம் கேளிக்கை வரி பெற்றுக் கொண்டு அதைத் தமிழ் என ஏமாற்றும் திரையாளர்கள் பெற வசதி செய்யும் ஏற்பாடு மோசடி அல்லவா? அதனை உடனே நிறுத்த வேண்டும். (இவ்வாறு சொல்வதால் தினமணி இச்செய்தியை நிறுத்தக் கூடாது.) அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/2/2010 3:37:00 AM
அரசின் நிலைப்பாடுமிகமிகத் தவறு என்பதை இவ் விளக்க அறிக்கையே விளக்குகிறது. <கூடுமானவரையில், பெயர்ச் சொல்லாகவாவது படத்தின் பெயர் தமிழில் அமைந்துள்ள திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு வருகிறது> என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்பழகன், அறிவழகன், மதியழகன், நெடுஞ்செழியன் என்றெல்லாம் தமிழ்ப் பெயர் சூட்டி புரட்சி செய்த இயக்கத்திற்குச் சொந்தக்காரர்கள் தமிழ்ப் பெயர் அல்லாதவற்றிற்குப் பெயர்ச சொல் என்ற அடிப்படையில் வரி விலக்கு அளிப்பது எவ்வாறு பொருந்தும்? மேலும் அரசின் நோக்கம், கூடுமானவரையில் தமிழில் உள்ளதா என்பதை முடிவு செய்வது என்பதிலிருந்தே வேண்டியவர்க்குக் கனிவு காட்டவே கூடுமானவரையில் எனச் சேர்க்கப்பட்டுள்ளது என்பது புரிகின்றது. மேலும் கேளிக்கை வரி விலக்கு அளிப்பதாயின் கட்டணச்சீட்டுகளில அதைச் சேர்க்காமல் கட்டணைத்தைக் குறைத்து அதன் பயன் பார்க்கும் மக்களுக்குப் போய்ச்சேர வேண்டும். அவ்வாறில்லாமல் பொது மக்களிடம் கேளிக்கை வரி பெற்றுக் கொண்டு அதைத் தமிழ் என ஏமாற்றும் திரையாளர்கள் பெற வசதி செய்யும் ஏற்பாடு மோசடி அல்லவா? அதனை உடனே நிறுத்த வேண்டும். (இவ்வாறு சொல்வதால் தினமணி இச்செய்தியை நிறு
By Ilakkuvanar Thiruvalluvan
11/2/2010 3:36:00 AM
தமிழில் பெயர் வைப்பதால் மட்டும் தமிழ்மொழி எய் வளர்க்க முடியாது. கருப்பு பணத்தை மாற்ற இது ஒரு மார்க்கம்.
By sundar
11/1/2010 10:14:00 PM
aiyoooooooo............................WHAT WILL HAPPEN TO THIS STATE...........WHAT A FOOLISH RULE IS THIS???? WHO WILL TALK TO THEM???? PUBLIC!!! CAN NOT YOU DO SOMETHING ABOUT THIS??? GOVT COULD GET GOOD INCOME FROM THE CINEMA MEDIA, GOVT. IS LOOSING SO MUCH INCOME BY GIVING TAX EXEMPTION TO THE CINEMA JUST FOR THE SAKE OF TAMIL NAME...THAT TAX INCOME CAN BE USED FOR WELFARE SCHEMES....what is this govt doing? is there no public social service organisation, who can fight for the right cause??? NO SOCIAL ORGANISATION IS THERE IN TAMIL NADU TO FIGHT FOR THE GOOD CAUSE???????govt is loosing so much income from this tax exemption.....directly and indirectly govt is taxing the middle class people, but giving exemption to the rich people...........what a foolish rule is this? is this THUKLAM RAJYAM?
By MIDDLE CLASS PEOPLE
11/1/2010 8:30:00 PM
வ குவாட்டர் கட்டிங் இது தமிழ் பெயரா? ஒருவேளை இந்த படத்திற்கு வரி விளக்கு அளிக்கப்படாவிட்டால் அந்த துறை அதிகாரியின் பதவிக்கு எந்த ஆபத்தும் வராது என்று முதல்வரால் உறுதி கூற முடியுமா?? வாய் கிழிய தமிழ்,தமிழ் என்றும் பெயர்பலகைகள் தமிழிலில் வைக்கவேண்டும் என்று கூறும் முதல்வர், ரெட்ஜைன்ட், க்லவ்ட் நைன், போன்ற குடும்ப நிருவனங்களின் பெயர்கள் தமிழில் எந்த அகராதியில் இருந்து கிடைத்த பெயர்கள் என்பதை கூற முடியுமா? பாவம் உயிரினங்கள் அசைவம் சாப்பிடாஹஈர்கள் என்று ஒருர்வன் வீட்டில் குழியை அடைத்து வைத்துவிட்டு வாய்கிழிய சொற்பொழிவு ஆற்றியதுபோலதான் உள்ளது?? இந்த வரிவிலக்கால் யார் குடும்பத்திற்கு லாபம், இந்த வரி விளக்கால் கிடைக்கும் பணம் எங்கு செல்கிறது, இந்த வரி விளக்கால் யாருக்கு நஷ்டம்? என்பதை மக்களுக்கு வெளிச்சம்மிட்டு காட்டும் பொறுப்பு தினமணிக்கு உள்ளது ..
By tamizhinian
11/1/2010 5:34:00 PM
In spite of DINAMANI's open canvassing on absurdity of giving tax-breaks in the name of TAMIL ( an absurd rule that says if title is in Tamil, film is eligible for tax-rebate) Govt. is relentless. The exchequer is losing valuable money. If one displays 'TAMIL VAZHGA' neon-board or if films have Tamil titles ( they should have but a clear order to adhere to rules will do- no tax-rebates) will TAMIL get promoted? I curse only my FATE for seeing TN pushed to all unbearable absurdities. This is exactly what the scatter-brained/ puppy-brained/blank-headed idiots will do if given the handles to rule. UZHAR-SANDHAI where no one will go, SAMATVAPURAM where none required, re-do all parks bridges with fancy drawings! & so on.
By ASHWIN
11/1/2010 5:32:00 PM
கண்ணதாசன் ஒரு குடிகாரன். போதையில் உளறுபவன். அவர் எம்ஜியாரை பற்றியும், ஜெயலலிதாவை பற்றியும் மட்டமாக பேசியும், எழுதியும் உள்ளார்.
By K Rajan
11/1/2010 5:23:00 PM
Tamil Nadu is not Gujarat which has a able Chief mInister like Modi. Tamil nadu has a loafer who came to madras without ticket and who goes behind women. You cannot expect anything from Karunanidhi. Read Kannadasan's Vana vaasam to know more about this loafer with 5 + wives and concubine
By Observer
11/1/2010 4:51:00 PM
திரைப்படஙளுக்கு வரி விலக்கு தேவைதனா? திரைப்படங்ளின் பெயரை மட்டும் தமிழில் வைத்தால் போதுமா? திரைப்படங்களில் அருவருக்கத்தக்க வசனங்களை எல்லாம் திணித்துவிட்டு வரிவிலக்கு பெற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். வரி விலக்கின் நோக்கம் எந்த வகையிலும் நிறைவேறாத நிலைதன் தொடர்கிறது. தற்போது வரி விலக்கு பெற்று ஓடிக்கொண்டிருக்கும் எந்திரன் படத்தின் டிக்கெட் 1000 ரூபாய் வரை விற்கப்படுள்ளதாக தெரிகிறது. கொள்ளை லாபம் சம்திக்கும் சினிமாக்காரங்களுக்கு வரி விலக்கு அளிப்பதால் தமிழ் நாட்டுக்கு, தமிழுக்கு எந்த பயனும் ஏற்படபோவதில்லை என்பதுதான் உண்மை. இனிமேலாவது அரசியல்வாதிகள் சினிமாக்கரங்களை காக்கா பிடிக்காமல் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதை ரத்து செய்யவும்.
By Meenakshisundaram
11/1/2010 12:56:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
meel padhivu: மேலும் கேளிக்கை வரி விலக்கு அளிப்பதாயின் கட்டணச்சீட்டுகளில அதைச் சேர்க்காமல் கட்டணைத்தைக் குறைத்து அதன் பயன் பார்க்கும் மக்களுக்குப் போய்ச்சேர வேண்டும். அவ்வாறில்லாமல் பொது மக்களிடம் கேளிக்கை வரி பெற்றுக் கொண்டு அதைத் தமிழ் என ஏமாற்றும் திரையாளர்கள் பெற வசதி செய்யும் ஏற்பாடு மோசடி அல்லவா? அதனை உடனே நிறுத்த வேண்டும். (இவ்வாறு சொல்வதால் தினமணி இச்செய்தியை நிறுத்தக் கூடாது.) அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvanar Thiruvalluvan 11/2/2010 3:37:00 AM இவ்வாறு சொல்லியும் தினமணி கருத்தை எடுக்கலாமா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/2/2010 5:32:00 PM
Meel padhivu: அரசின் நிலைப்பாடுமிகமிகத் தவறு என்பதை இவ் விளக்க அறிக்கையே விளக்குகிறது. <கூடுமானவரையில், பெயர்ச் சொல்லாகவாவது படத்தின் பெயர் தமிழில் அமைந்துள்ள திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு வருகிறது> என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்பழகன், அறிவழகன், மதியழகன், நெடுஞ்செழியன் என்றெல்லாம் தமிழ்ப் பெயர் சூட்டி புரட்சி செய்த இயக்கத்திற்குச் சொந்தக்காரர்கள் தமிழ்ப் பெயர் அல்லாதவற்றிற்குப் பெயர்ச சொல் என்ற அடிப்படையில் வரி விலக்கு அளிப்பது எவ்வாறு பொருந்தும்? மேலும் அரசின் நோக்கம், கூடுமானவரையில் தமிழில் உள்ளதா என்பதை முடிவு செய்வது என்பதிலிருந்தே வேண்டியவர்க்குக் கனிவு காட்டவே கூடுமானவரையில் எனச் சேர்க்கப்பட்டுள்ளது என்பது புரிகின்றது. By Ilakkuvanar Thiruvalluvan 11/2/2010 3:36:00 AM அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/2/2010 5:31:00 PM
THE DEAD ALIEN NEESHA PASHA SANSKRIT ALSO MUST BE STOPPED FOR USING TO NAME THAMIL FILMS AND THE DIALOGUES MUST BE 90% TAMIL, IF THE CONDITIONS MET, TAMILNADU CAN GIVE TAX RELIEF TO THE THAMIL FILMS NOT TO ENTHIRAN LIKE ENGLISH FILMS WITH SOME TAMIL DIALOGUES. THE BODY - WHO DECIDE THIS - MUST BE INDEPENDENT THAMIL SCHOLORS NOT BY THE CROOK DMK RUN BY THE CROOKED KARUNANITHI
By AMARAN
11/2/2010 12:36:00 PM
எஹன் என்பது வடமொழி .எந்திரன் என்பதும் வடமொழி. படதிர்க்கும் பெயருக்கும் சம்பந்தம் இருக்க வென்டும் ஆரசியல்லெ இது எல்லாம் ச்கஹஜமப்பா
By Aslam
11/2/2010 9:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக