ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

கொழும்பில் வியாழனன்று தந்தை செல்வா நினைவுப் பேருரை

கொழும்பில் வியாழனன்று தந்தை செல்வா நினைவுப் பேருரை

chelvanayagam
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் ஏற்பாட்டில், பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில், தந்தை செல்வா நினைவுப் பேருரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தந்தை செல்வாவில் 35வது நினைவு நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நினைவுப் பேருரை வரும் வியாழக்கிழமை (26ம் நாள்) பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெறும்.
இந்த நிகழ்வில், ‘இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கான ஏற்பாடுகள் – வரலாறும் வருங்காலமும்‘ என்ற தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் நினைவுப்பேருரை நிகழ்த்தவுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்த நினைவுப்பேருரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக