செவ்வாய், 24 ஏப்ரல், 2012

பன்றியோடு சேர்ந்த கன்றுக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.

பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் வித்தியாசம் தெரியாத பீரிஸ் இழைத்த இராஜதந்திரத் தவறு – கொழும்பு ஊடகம்

prof_-g_l_peiris
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் வித்தியாசம் தெரியாமல்- செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், தடுமாறியது இராஜதந்திர வட்டாரங்களில் மிகவும் கேலிக்குரிய விவகாரமாகப் பார்க்கப்படுகிறது.
அண்மையில் பலஸ்தீன அதிபர் அப்பாசுடன் கொழும்பு வந்திருந்த பலஸ்தீன வெளிவிவகார அமைச்சருடன் இணைந்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், தன் பக்கத்தில் பலஸ்தீன வெளிவிவகார அமைச்சரை வைத்துக் கொண்டே, “மதிப்புக்குரிய இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் றியாட் அல் மலிகி, மதிப்புக்குரிய இஸ்ரேல் தூதுவர் …..“என்று வரவேற்கத் தொடங்கினார்.
அப்போது அவருக்கருகில் இஸ்ரேலிய வெளிவிகார அமைச்சரோ, தூதுவரோ இருக்கவில்லை.
பலஸ்தீன விவகார அமைச்சரும் தூதுவரும் தான் உடனிருந்தனர்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிசின் இவ்வாறு கூறியதும் பலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் மற்றும் தூதுவரின் முகம்கள் சிவந்தன.
ஒன்றுக்கு இரண்டு முறை இஸ்ரேல் என்று அடுத்தடுத்து பீரிஸ் கூறியது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், பீரிஸ் மிகச் சாதாரணமாக “மன்னிக்கவும்“ என்று கூறிவிட்டுத் தொடர்ந்து பேசினார்.
பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் குறைந்தபட்ச வித்தியாசத்தைக் கூட உணராமல், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் மிகப்பெரிய இராஜதந்திரத் தவறை இழைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று விமர்சித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக