செவ்வாய், 24 ஏப்ரல், 2012

don't vote for congress, says maharattira farmer in his suicide note

 "காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க': தற்கொலை செய்து கொண்ட விவசாயி கடிதம்

தினமலர்

மும்பை: மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி, "காங்கிரசுக்கு ஓட்டு போடாதீர்கள்' என கடிதம் எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்து கொண்டார்.

மகாராஷ்டிர மாநிலம், விதர்பா பகுதியை சேர்ந்தவர் கஜானன் கோதிகார்,45. சமீபத்தில், இவர் டிராக்டர் வாங்கியிருந்தார். இதற்கான கடனை, அவர் திருப்பி செலுத்தவில்லை. அதுமட்டுமல்லாது, மகள் திருமணத்திற்கு போதிய பணம் இல்லாததால் கவலையடைந்திருந்தார். இதற்கிடையே, அவர் நேற்று, பூச்சி மருந்தை குடித்து, தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்னதாக, அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "இந்த நாட்டை காங்கிரஸ் அரசு நாசமாக்கி விட்டது. காங்கிரசோ, அதன் தோழமைக் கட்சியான தேசியவாத காங்கிரசோ, விவசாயிகள் விஷயத்தில் அக்கறை செலுத்தவில்லை. எனவே, இந்த கட்சிகளுக்கு ஓட்டு போடாதீர்கள்' என குறிப்பிட்டுள்ளார். இந்த விவசாயியை தற்கொலை செய்வதற்கு தூண்டியதாகக் கூறி, அரசு மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என, சிவசேனா தலைவர் பால்தாக்கரே வற்புறுத்தியுள்ளார்.

காங்கிரஸுக்கு வாக்களிக்காதீர்கள்: மகாராஷ்டிர விவசாயியின் தற்கொலை குறிப்பு

தினமணி  First Published : 23 Apr 2012 03:43:39 PM IST


யாவத்மால், ஏப்.23: மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் 45 வயதான பருத்தி விவசாயி ஒருவர் கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்வதற்கு முன் அவர் எழுதிவைத்த கடிதத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.விவசாயியான கஜானந்த் கோத்தீகர் என்பவர் டிராக்டர் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால் பருத்தி விலைகள் மிகவும் குறைவாக இருந்ததால் டிராக்டருக்காக வாங்கிய 1 லட்ச ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. தனது இளைய மகளுக்கான திருமண ஏற்பாடும் அவரை மேலும் கடனில் ஆழ்த்தியது. இதனால் கடிதம் எழுதிவைத்துவிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டார்.தனது தற்கொலை குறிப்பில் பருத்திக்கு நல்ல விலைகிடைக்க மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் துயரம் குறித்து கவலைப்படாத காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசுக்கு அடுத்தமுறை வாக்களிக்காதீர்கள் என்று பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.விதர்பா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 5 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து இதுவரை 325 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்

இது உண்மை இனி யாரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று பொதுமக்கலை சொல்லுங்க
By பேச்சிமுத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக