ஞாயிறு, 25 அக்டோபர், 2009

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு: வள்ளுவர் படத்துடன் "இலச்சினை' வெளியீடு




சென்னை, அக். 23: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான இலட்சினை (லோகோ) சுனாமி பேரலைகள் சூழ திருவள்ளுவரின் படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் இதை முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
இதன் சிறப்பம்சங்கள் குறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
""கடல்கோள்களை எதிர்கொண்டு, காலவெள்ளத்தைக் கடந்து சீரிளமைத் திறத்தோடு தமிழ்மொழி திகழ்கிறது என்பதைக் குறிக்கும் வகையில் சுனாமி அலைகளும், திருவள்ளுவர் திருவடிகளில் சுருளும் அழகிய பின்னணியில் இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் தனது மூன்று விரல்களில் காட்டிக் கொண்டிருக்கும் வகையிலான சிலை இதில் இடம்பெற்றுள்ளது. அறம், பொருள், இன்பம் என அவர் காட்டிய முப்பாலைக் குறிப்பிடும் வகையில் மூன்று விரல்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
சிந்துவெளி நாகரிகச் சின்னங்கள்... உலகத் தொன்மையான நான்கு நாகரிகங்களில் திராவிட நாகரிகமாகிய சிந்துவெளி நாகரிகமும் ஒன்று.
அதன் சின்னங்களும், குறியீடுகளும் திருவள்ளுவர் சிலையைச் சுற்றியுள்ள மேல்வட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இலச்சினையில் ஏழு குறியீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏழு என்பது தமிழர்களுக்கு உரிய சிறப்பான எண்ணாகும்.
இந்த மாநாட்டின் எடுத்துரைக் குறிப்பாக (மோட்டோ) "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது அமைந்துள்ளது'' என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

எனினும் தமிழுக்கு மிகவும் பிற்பட்ட மொழியான சமற்கிருதம் முதலான சில மொழிகளுக்குச் செம்மொழி என்னும் தகுதி இருப்பதாகக் கூறி மத்திய அரசு பல்லாயிரக் கோடி கணக்கான தொகையைச் செலவழித்து வருகிறது முறைப்படி தமிழுக்கான செம்மொழித் தகுதயை ஏற்றதே முதல் செயல் என்றாலும் அதற்கு முன்பே சமற்கிருதம், அரபி, மொழிகளுக்கு மட்டுமல்லாமல் திபேத், சிந்தி. சிங்களம் முதலான மொழிகளுக்குக் கூட மத்திய அரசு கோடிகோடியாகச் செலவாழித்து வருகிறது. சமற்கிருதம், இந்தி முதலான மொழிகளுக்குச் செலவழிப்பதில் நூற்றில் ஒரு பங்குகூட நம் தமிழ் மொழிக்குச் செலவழிப்பதில்லை. மேலும், தெலுங்கு, கன்னடம் முதலான மொழிகளையும் இப்பட்டியலில் சேர்ப்பதற்காகச் செம்மொழித் தகுதிக்கான காலத்தை 2000 என்பதில் இருந்து தமிழக அரசின் ஒப்புதலுடன் 1500என மத்திய அரசு குறைத்துள்ளது. இது பற்றிய வழக்கு இருக்கும்பொழுதே மததிய அரசு தெலுங்கையும் செம்மொழியாக அறிவித்துள்ளது; கன்னடத்திற்கும் அறிவிப்பு வரப் போகிறது. இதுவும் ஓர் ஏமாற்று நாடகமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/25/2009 3:33:00 AM
திருப்பூர் முத்து அவர்களே ! முதல் மொழியான தமிழ் மொழி தொடக்கத்திலேயே செமமைத்தன்மையுடன் , சிறப்பும் சீரும் மிக்க பண்புகளுடன் செந்தமிழாக அமைந்தது. எனினும் தமிழுக்கு மிகவும் பிற்பட்ட மொழியான சமற்கிருதம் முதலான சில மொழிகளுக்குச் செம்மொழி என்னும் தகுதி இருப்பதாகக் கூறி மத்திய அரசு பல்லாயிரக் கோடி கணக்கான தொகையைச் செலவழித்து வருகிறது முறைப்படி தமிழுக்கான செம்மொழித் தகுதியை ஏற்றதே முதல் செயல் என்றாலும் அதற்கு முன்பே சமற்கிருதம், அரபி, மொழிகளுக்கு மட்டுமல்லாமல் திபேத், சிந்தி. சிங்களம் முதலான மொழிகளுக்குக் கூட மத்திய அரசு கோடிகோடியாகச் செலவாழித்து வருகிறது. சமற்கிருதம், இந்தி முதலான மொழிகளுக்குச் செலவழிப்பதில் நூற்றில் ஒரு பங்குகூட நம் தமிழ் மொழிக்குச் செலவழிப்பதில்லை. மேலும், தெலுங்கு, கன்னடம் முதலான மொழிகளையும் இப்பட்டியலில் சேர்ப்பதற்காகச் செம்மொழித் தகுதிக்கான காலத்தை 2000 என்பதில் இருந்து தமிழக அரசின் ஒப்புதலுடன் 1500 என மத்திய அரசு குறைத்துள்ளது. இது பற்றிய வழக்கு இருக்கும்பொழுதே மததிய அரசு தெலுங்கையும் செம்மொழியாக அறிவித்துள்ளது; கன்னடத்திற்கும் அறிவிப்பு வரப் போகிறது. இதுவும் ஓர்
By Ilakkuvanar Thiruvalluvan
10/25/2009 3:33:00 AM
காலனும் தீண்ட மறுக்கும் கயவன் இவன்.
By Nadoodi
10/24/2009 9:55:00 PM
அய்யா கனிமொழி சின்னத்தை போடுங்க! பார்க்கறதுக்கும் நல்ல இருக்கும்ல? அப்படியே தமிழும் வளரும்ள? தமிழர்களும் சந்தொசப்படுவங்கள்ள, என்ன சொல்றீங்க.
By Indian
10/24/2009 9:30:00 PM
செம்மொழி அந்தஸ்த்தால இன்னா சிறப்பா? இன்னாய்யா இப்பிடி கேட்டுபுட்டீரு?! மொதல்ல தமிழ்னா இன்னானு தெர்ஞ்சிக்கோ. தமிழ்னா, தலைவர்னு அர்த்தம். தலைவர்னா யாரூ....? தலைவர்னா கலைஞர்னு அர்த்தம். கலைஞர்னா யாரூ...? கலைஞர்னா கர்ணாநிதினு அர்த்தம். தமிழ் செம்மொழினா, கர்ணாநிதி செம்மையா இருக்கார்ன்னு அர்த்தம். செம்மையானா இன்னா அர்த்தம்..? தமிழ வச்சி, வயித்தயும், வயித்துக்கு கீழ இருக்கிறதயும் நல்...லா வளத்துக்கிறதுன்னு அர்த்தம். இப்போ புர்ஞ்சிதா? தமிழ் செம்மொழி ஆனா இன்னா பயன்னு? இன்னும் புரியலையா? இதுவே புரியலன்னா, உனக்கு எதுவுமே புரியாது போ! மரமண்ட!
By Murugadoss K
10/24/2009 5:42:00 PM
first chennai speak local tamil will be change then only use coimbatore tamil
By saravanan
10/24/2009 4:42:00 PM
EElathil thukka Geetham paadum pothu Ingey thuthi paadigal nadathum vizha itharku ori ilachinai. Yaarukkum ingu vetkam illai. Tamilargaley ungal thanmaanum eelathil pen maanamum engey ponathu- Varuthappadum vaalibar sangam
By samsun
10/24/2009 3:37:00 PM
தயவு செய்து தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள்,... செம்மொழி அந்தஸ்தால் தமிழ் மொழிக்கு என்ன சிறப்பு? இந்தியாவில் எந்தெந்த மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து உள்ளது? மற்ற மொழிகளில் இருந்து தமிழை எந்த அளவிற்கு உயர்த்தும் இந்த அந்தஸ்து? இதை சாதனை என்று கலைஞர் கூறும் அளவிற்கு சரியானதா? இது நீண்ட நாளாக என்னுடைய சந்தேகமாக உள்ளது.. தெரிந்தவர்கள் விளக்கமளிக்கவும்.. நன்றி இப்படிக்கு முத்து, திருப்பூர்.
By muthu
10/24/2009 12:14:00 PM
சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமா? அப்படி யென்றால் வடநாட்டினரும் தமிழரா? அல்லது தமிழன் வடநாட்டில் இருந்து இங்கே வந்தவனா? ஏதோ தமிழன் குமரிக்கண்டம் என்கிற தென்கோடியில் பிறந்ததாக பிதற்றியதெல்லாம் என்ன ஆனது? தமிழ் என்பதே திராவிடம் என்றால் பிறகு திராவிடம் என்று பீற்றும் கட்சிகள் தமிழ் எதிர்ப்பு கட்சிகளா? முதலில் வரலாற்று உண்மைகளை ஒப்புக்கொள்ள தமிழர்கள் பழக வேண்டும். தங்களைத்தாங்களே பெருமை பேசுவதை விட்டு உயரும் வழியை தேடவேண்டும். தமிழ் ஒரு இலக்கண மொழியே தவிர இலக்கிய மொழி அல்ல. அதேபோல் தமிழன் அடிமையாக வாழ்ந்த காலமே அதிகம். அதை மறைக்க "யாவரும் கேளிர்" என்று பசப்பல் வேறு. இலக்கியம் என்பது பெண்கள் உடலைப்பற்றி பாடுவதிலும், ஆள்பவனை போற்றுவதிலும், கடவுள் வாழ்த்து பாடி பிச்சை எடுப்பதிலும் இல்லை. ஒரு ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்க இயலாத ஒரு கூட்டம் தன் கலாச்சாரம் பற்றி பெருமை பேசுவது நியாயமல்ல. ஒரு தெலுங்கனை தந்தை என்று கொண்டாடும் கூட்டம் எப்படி தமிழ் இனமாகும்? சைவசித்தாந்தங்களை மறுக்கும் கூட்டம் எப்படி தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்றும்? சாராயம், ஆபாச வசனம், சினிமா, குடி கெடுக்கும் தொலைத்தொடர், சாதி எ
By sbala
10/24/2009 11:04:00 AM
அய்யய்யோ, இது ரொம்ப அநியாயம்!? மாநாட்டு இலச்சினையில திருவள்ளுவர் படமா?! எந்த ஆதாரத்துல திருவள்ளுவர் படத்த போட்டாங்க? அந்தாளு இருந்தாரா, இல்லையான்னே தெரியாது. எந்த காலேஜில படிச்சுட்டு வந்து திருக்குறள எழுதுனாரு? என்ன ஆதாரம் இருக்கு? அவருமட்டும்தான் அறிவாளியா? எங்க தலைவர் அறிவாளி இல்லையா? வாழும் வள்ளுவர், முத்தமிழறிஞர், ஐந்தமிழும் அரவணைக்கும் அறிவாளியான எங்க தலைவர் கலைஞர் படத்ததானே போடணும். இந்த நியாயத்த கேக்கறதுக்கு யாருமே இல்லயா இந்த ஒலகத்துல?!
By Murugadoss K
10/24/2009 10:13:00 AM
அய்யா! இலக்குவனாரே! இழவு வீட்டில் எப்படி உங்களால் பட்டி மன்றம் நடத்த முடிகிறது. அந்த துரோகி மக்களை ஏமாற்ற நாடகங்கள் நடத்திக் கொண்டிருக்கிறான். அந்த நாடகத்தில் இந்த காட்சி இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். விசயம் தெரிந்தவர்களே இப்படி இருந்தால் கயவன் கருணாவுக்கு இன்னமும் கொண்டாட்டம்தான்.
By நவீன் சென்னை
10/24/2009 8:21:00 AM
சிமன் அண்ணனுக்கு கொஞ்சம் ஒத்து உளைங்கள் ஈழ தமிழன் இதயங்கள் குமிறளுக்கு யார் எதை சொல்லியும் அறாப்பாடுத்த முடியாது .கொஞ்சம் சிமன் அண்ணனின் பேச்சு அறுதல் அளிக்கின்றது உன்மையில் தினமணி இணையதளத்தில் என் அண்ணன் சீமானின் செய்திகள் பிரசுரமாகுவது இல்லை உண்மையில் சீமான் எல்ல தமிழர்காக குரல் கோடுப்பவர் இவரின் செய்திகளுக்கு தினமணி இணையதளம் பிரசுரிக்க வேண்டும் இது வாசகர்களின் கருத்துஆகும் usanthan
By usanthan
10/24/2009 4:19:00 AM
திராவிடம் என்பது பிற்காலத்த அயலவர்களால் தமிழுக்கு இடப்பெற்ற பெயர். சிந்து வெளி நாகரிகம் தமிழ் நாகரிகம் என்று சொல்வதே அறிவியல், வரலாற்று அடிப்படையிலான உண்மையாகும். செம்மொழி மாநாடு நடத்தும் பொழுது கூடத் தமிழின் சிறப்பும் பெயரும் புறக்கணிக்கப்படுவது மிகவும் வருந்தத்தக்கது. இனிமேலாவது தமிழர் நாகரிகத்தைத் தமிழர் நாகரிகம் எனறே குறிக்க வேண்டுமேயன்றித் திராவிடர் நாகரிகம் என்று குறிக்கக்கூடாது. இவ்வாறு வரலாற்றுப்பிழை புரிவோர் மாநாட்டுக் குழுவில் இடம் பெற்றால் செம்மொழித் தமிழ் மாநாடு என்று நடத்துவதில் பொருள் இல்லை என்பதை உரியவர்கள் உணர வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2009 3:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக