ஞாயிறு, 9 ஜூன், 2013

இலங்கை வீரர்களுக்குப் பயிற்சி: திருப்பி அனுப்பிட முதல்வர் மடல்

இலங்கை வீரர்களுக்கு ப் பயிற்சி: திருப்பி அனுப்பிட  த.அமைச்சருக்கு முதல்வர் செயலலிதா மடல்

இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதற்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிததத்தில், கடந்த மே 27-ம் தேதி முதல் இரு இலங்கை அதிகாரிகளுக்கு நீலகிரி மாவட்டம், வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் இந்திய ராணுவம் பயிற்சி அளித்து வருவதாகாக தெரிகிறது. இவ்விவகாரம் தொடர்பாக தமிழக அரசு ஏற்கெனவே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அதனையும் மீறி மத்திய அரசு இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளித்து வருகிறது.
எனவே, இது உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மேலும் அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக