ஞாயிறு, 24 மார்ச், 2013

தமிழகத்தை த் தாண்டாத ஈழ ச்சிக்கல்: காரணம் யார்?

தமிழகத்தை த் தாண்டாத ஈழ ச்சிக்கல்: 
காரணம் யார்?
ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் மத்திய ஆளும் கூட்டணியில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. ஆனால், தமிழகத்தைத் தாண்டி, நாட்டின் பிற பகுதிகளுக்கு ஈழப் பிரச்னை செல்லவில்லை. டில்லியில், லோக்சபா சபாநாயகர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், இது வெளிச்சத்துக்கு வந்தது.
பார்லிமென்டில், ஈழம் தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, லோக்சபா சபாநாயகர் மீராகுமார், கூட்டினார். கூட்டத்தில், ஈழப் பிரச்னைக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதே தவிர, ஆதரவு கிடைக்கவில்லை. பா.ஜ., - சமாஜ்வாதி, - பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள், "தனியொரு நாட்டிற்கு எதிராக, பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது. இலங்கையில், நடந்தது இனப் படுகொலை எனக் கூற முடியாது' என, தெரிவித்தன. சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள், "காங்கிரசுக்கும், - தி.மு.க.,வுக்கும் இடையிலான பிரச்னையை, அவர்கள் இருவரும் பேசித் தீர்க்காமல், அனைத்துக் கட்சி கூட்டத்தை எதற்குக் கூட்டினீர்கள்' என, பெரும் கோபத்தை வெளிப்படுத்தியது. இந்நிலையில், ஈழப் பிரச்னையை, தமிழகத்தைத் தாண்டி, தேசிய பிரச்னையாக கொண்டு செல்ல முடியாததற்கு யார் காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, ஈழப் பிரச்னையில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம்; பல போராட்டங்களை நடத்தியுள்ளோம் என, தன் முதுகை தானே தட்டிக் கொள்ளும் தி.மு.க., தமிழகத்தைத் தாண்டி இப்பிரச்னை செல்வதற்கு என்ன செய்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். லோக்சபாவில், கூட்டணிக் கட்சிகளைக் கொண்டு ஈழத் தீர்மானத்தை நிறைவேற்றினாலும், ராஜ்யசபாவில் போதிய ஆதரவில்லை. தீர்மானம் தோற்றுவிடும் என, கூறிவிட்டு விலகி நின்றதற்கான காரணத்தையும், காங்கிரஸ் கூற வேண்டும் என, தமிழக மக்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. நாட்டில் உள்ள பிற கட்சிகளிடம் ஈழப் பிரச்னையை எடுத்துச் சென்று ஆதரவைத் திரட்டாதது, தேசிய அளவில், கருத்தொற்றுமையை உருவாக்காதது ஆகியவற்றுக்கு, தமிழக கட்சிகளே பொறுப்பாளிகள் என்றும், மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு உள்ளது. இதற்கிடையே, ஈழப் பிரச்னை குறித்து பொதுக் கருத்தை ஏற்படுத்தும் வகையில், தமிழ் எழுத்தாளர்களோ, ஆர்வலர்களோ தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக, ஆங்கிலம், இந்தி போன்ற பொது மொழிகளில் பிரசாரம் செய்யவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.
-  சிறப்பு ச் செ ிர், ிர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக