புதன், 16 ஜனவரி, 2013

மனத்தை மாற்றும் திறன் நிறத்துக்கு உண்டு!

சொல்கிறார்கள்

மன த் தை மாற்றும் திறன் நிறத்துக்கு உண்டு!


சென்னை, அறிஞர் அண்ணா இயற்கை இயன்முறை மருத்துவமனையின், யோகா மற்றும் இயற்கை நல மருத்துவ விரிவுரையாளர் தீபா: தூக்கமே இல்லாம கஷ்டப்படுறவங்க, லைட் நீல நிற விரிப்புகளை, பெட்ரூமில் பயன்படுத்தினா, தூக்கம் வரும்; சிவப்பு கலரை பயன்படுத்தினா, தூக்கம் வராம தொந்தரவா இருக்கும். மருத்துவமனைகளில், பச்சை கலர் பயன்படுத்துவாங்க. அதில், "ஆன்டிசெப்டிக் ப்ராப்பர்ட்டி' இருக்கு. "ஆபரேஷன் தியேட்டர்'ல, அறுவை சிகிச்சை நிபுணர்கள், பச்சை நிற ட்ரெஸ் போடுறதும், இதுக்குத் தான். மனநிலை பாதிக்கப்பட்டவங்க, இறுக்கமான மனநிலையில் இருப்பவங்களை, பசுமையான இடங்களுக்கு, அடிக்கடி கூட்டிட்டு போகச் சொல்வோம். இந்த பச்சை வண்ணம், மன அழுத் தத்தை, வெகுவா குறைக்கும். ஆரஞ்ச் கலரை பார்க்கும் போது, நம்மை அறியாமல் ஒரு சந்தோஷம் வரும். உடல்ரீதியா பார்த்தா, இந்த நிறம், தைராய்டு சுரப்பியை, "ரெகுலேட்' பண்ணும். தசை பிடிப்பு வலிகளை, "ரிலீவ்' பண்ணும். இதனால், பெண்களுக்கு, "பீரியட்ஸ்' தொந்தரவுகள் இருக்காது. மன அமைதியை கொடுக்கிற, ரொம்ப பாசிட்டவான கலர், நீலம். நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும். எல்லாவித உளவியல் சிக்கலுக்கும், நீல நிறம் பெஸ்ட். மருத்துவமனை படுக்கைக்கு, அதைத் தான் போடுகின்றனர். நீல நிறம் பிடிக்கறவங்க, ரொம்ப நேர்மையா இருப்பாங்க. சுய சிந்தனை, ஜாஸ்தியா இருக்கும். கோபப் பட மாட்டாங்க. வேலையில், அர்ப்பணிப்புத் திறன் இருக்கும். அவங்ககிட்டே, ஒரு, "பவர்' இருக்கும். லைப்ல, "கிளியர் டைரக்ஷன்'ல போறவங்க, இவங்க தான். இப்படித் தான் இருக்கணும்ங்கிற, கொள்கையோட இருப்பாங்க. அதுவே அதிகமாகும் போது, அவங்களுக்கே பெரிய அளவில் மன அழுத்தத்தை உருவாக்கும். இண்டிகோ கலர் பிடிச்சவங்க, "ராயலா' இருக்கணும்ன்னு நினைப்பாங்க. வெண்மை நிறம் பிடிக்கிறவங்க, அமைதியா இருப்பாங்க. மற்றவங்களை காப்பாத்தணும்னு நினைப்பாங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக