புதன், 18 ஏப்ரல், 2012

INIYAVAN 70 :இனியவன் எழுபது

‘இலக்கிய வீதி’ எனும் அமைப்பின் மூலம் பல இலக்கியவாதிகளை உருவாக்கியும் பல படைப்புகளை வெளியிட்டிருக்கும் இலக்கிய வீதி இனியவனுக்கு எழுபது வயது நிறைவடைவதற்கும் வாணியம்பாடி முத்தமிழ் மன்றத்தின் சார்பில் இனியவனுக்கு வழங்கப்பட்ட  ‘செம்மொழிச் செம்மல்’ எனும் விருது பெற்றமைக்கும் அவருக்கு பாராட்டரங்கம் நடத்தப்பெற்றது. சென்னை  ஒய்.எம்.சி.எ (YMCA) கட்டிடத்தில் 17.04.2012  அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்த அறிஞர்களும் இலக்கியவாதிகளும் கலந்து கொண்டனர்.

 நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் இனிமையான சொற்களால் அனைவரையும் வரவேற்றார்,தொடர்ந்து தென்காசிக் கவிஞரான ராஜா மரக்காயர் அவர்கள் கவிதையின் மூலம் இனியவனுக்கு வாழ்த்துமடல் வாசித்து பாராட்டினார் ,


அவரைத் தொடர்ந்து  நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய  முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பன் அவர்கள்  மனமார்ந்த பாராட்டுகளை வழங்கினார்.

கார் நாற்பது, களவழி நாற்பது, ஏர் எழுபது என இலக்கிய நூலகளுக்கு வழங்கும் தலைப்பைப் போன்று இனியவன் விழாவுக்கு தலைப்பு பொருத்தமாக அமைந்திருப்பதை சுட்டிக்காடினார். மேலும் இனியவனுடைய பண்பு நலன்களைப் பற்றி கூறும்போது  சங்க இலக்கியப் பாடலகளில்  வரும் தலைவனின் குணத்தோடு ஒப்பிட்டு அவர்களுக்கிடையிலான ஆழ்ந்த நட்பை வெளிப்படுத்தி பாராட்டினார்.

அடுத்து, ‘பாராட்டுபவர் எக்காலத்திலும் பாராட்டப்பெறுவார்’ எனும் பாராட்டுரையோடு தொடங்கிய  முனைவர் தெ.ஞானசுந்தரம் அவர்கள் இனியவனுடைய இலக்கியத் திறனை பாராட்டிப் பேசினார்.  தாராபரதி, மலர்மகன், பல்லவன், ஐசுவர்யன், சொற்கேளான் போன்றோரை இலக்கிய உலகத்திற்கு அறிமுகப்படுத்திய   ‘இனியவனுடைய வீடு  இலக்கியத் தொட்டி’ என்பதை விவரித்துப் பேசினார்.

கவிஞர் ஈரோடு தமிழன்பனும் இலக்கியவாதிகள்  பலரை உருவாகியதாயுள்ளம் கொண்ட  இனியவனை
பெருமிதத்தோடு பாராட்டினார். மலர்மகனின் கவித்துவமான வாழ்த்துமடல் அனைவரின் கைத்தட்டல்களையும் பெற்றது,மேலும் இந்த பாராட்டரங்கத்திற்கு பேராசிரியர் அவ்வை நடராசன், இலக்குவனார் திருவள்ளுவன், கவிஞர் முத்துலிங்கம், இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் உள்ளிட்ட பெருமக்களும் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பக்த்வச்சலத்தின் நன்றியுரையைத் தொடர்ந்து  அரங்க விழா நாயகன் இனியவனுடைய ஏற்புரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

http://www.natpu.in/?p=23700

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக