சனி, 23 ஜூலை, 2011

M.D.M.K. resolutions about genocide: தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த மதிமுக தீர்மானம்

சிங்கள அரசின் இனக்கொலைக் குற்ற  விசாரணை என்பதை ம.தி.மு.க தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதை வெளியிட்டு விட்டுப் போர்க்குற்ற விசாரணை எனச் சுருக்கலாமா?   போராட்டங்கள் வெற்றி பெற வாழ்த்துகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த மதிமுக தீர்மானம்

First Published : 22 Jul 2011 02:56:10 PM IST


சென்னை, ஜூலை.22: இலங்கையை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தி இந்தியாவிலும், உலக நாடுகளிலும் அதற்கு ஆதரவு திரட்டும் நோக்கத்தில் தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மதிமுக தீர்மானித்துள்ளது.மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் :*பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டெம்பர் 15 ஆம் தேதியன்று திருநெல்வேலியில் திறந்தவெளி மாநாடு.*அ.தி.மு.க அரசு, தன் போக்கை மாற்றிக்கொண்டு, சமச்சீர் கல்வியை, சமநிலைக் கல்வியை உடனடியாக நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.*தமிழக உரிமை காக்கவும், கேரள அரசின் அக்கிரமப் போக்கைத் தடுக்கவும், மதுரை மாநகரில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி உண்ணாநிலை அறப்போராட்டம்*சிங்கள ராணுவ வீரர்களுக்கு, தமிழகத்தில் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் பயிற்சியை நிறுத்த வேண்டும்.*சிங்கள அரசின் இனக்கொலைக் குற்றத்தை விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தி தலைநகர் தில்லியில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள்

அது அந்நாட்டு உள்விவகாரம். அதில் தலையிட இந்தியாவுக்கு தார்மீக உரிமையில்லை.
By sdfsdf
7/22/2011 10:31:00 PM
கட்சி தலைமை நஞ்சில் சம்பத் வசம் கொடுத்துவிட்டு வைகோ அவர்களே நீங்கள் தேசிய அரசியலுக் வருங்கால் ,உங்கள் போக்கு கட்சிக்கும் லாபம் இல்லை நாட்டுக்கும் லாபம் இல்லை வெறும் வீராவேசம் உதவாது அகில இந்திய கட்சிகளை அனுக்கி உக்க்திகளை வகுக்கவும். கட்சி மேலும் பலம் பெற செயல்படவும் திருமா, டாக்டர் அய்யா சீமான் நெடுமாறன் பாண்டியன் ராஜா எல்லோரும் என்னைந்து போராடவேண்டும். தனி ஆவர்த்தனம் யாருக்கும் பலன் தராது. நான் சொல்லுவதை கேட்ட்பீர்களா ?
By மனம் ஒடிந்த தமிழன்
7/22/2011 9:22:00 PM
Many of us read news and write our comments. No action or support to the one who wants to take our problems to the national level. Vaiko, Seemaan, Pazha Nedumaaran, Thamizharuvi Maniyan, Nallakannu are the great leaders to follow. They are not like other politicians who do it everything for the party and the family. As Tamils, we should stand united.
By Vadivel
7/22/2011 9:17:00 PM
டில்லியில் போயி கிழிக்க போறாராம்.மொதல்ல தமிழ் நாட்டுலே கிழிங்க.என்ன இப்போ முல்லை பெரியாறு,காவேரி,பாலாறு,பற்றி வாயே தொறக்கறது இல்லை.சிங்களர்களுக்கு எதிரான உங்கள் லடாயில் இது மறந்துவிட்டதா?அடுத்து உள்ளாட்சி தேர்தலிலும் கப்சிப்பா?கிழிஞ்சது கிஷ்ணாம்பேட்டை!!
By கே சுகவனம்
7/22/2011 6:20:00 PM
Welcome Mr. Vaiko. We support your dharna
By Meenakshisundaram
7/22/2011 5:34:00 PM
தேவையா இது ? உள்ளூர்லயே எவனும் ஒங்கள மதிக்க மாட்டேங்கறான். டில்லில போயி ஹிந்தில திட்டு வாங்கணுமா ? ரெண்டாவது டில்லி போலிஸ் பாபா ராம்தேவ் விஷயத்தில காட்டத்தில் இருக்கானுங்க. லத்தி ஒடயர வரைக்கும டிக்கிலையே அடிப்பானுங்க. அதுனால எது செய்தாலும் கொஞ்சம் கவனமா செய்ங்க.
By வெட்டி மாஸ்டர்
7/22/2011 5:19:00 PM
திரு வைகோ அவர்களே நீங்கள் இன்னமும் உங்கள் உக்தி களை சரிவர திட்டமிட்டு செயா தவறி வருகிறிர்கள்.முதலில் அனவைரையும் சேர்த்தி போராட முன்வாருங்கள் .நீங்கள் இன்னமும் ஆல் இந்திய தலைவர் ஆகவில்லை பரிதாபம் .எல்லா தேசிய கட்சுகளுடன் கலந்து உக்தி வகுக்கவும். இல்லாவிட்டால் புஷ்வானம் அக முடியும் உங்களை சீமான் முந்தி விட்டார் .நீங்கள் பின்னுக்கு போய்கொண்டு உள்ளீர்கள் கபீஎஸ்
By keebeeyees
7/22/2011 5:04:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக