First Published : 23 Jul 2011 04:00:06 AM IST

சென்னை, ஜூலை 22: முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பாக வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினர் மதுரையில் ஆகஸ்ட் 17-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர். ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அக் கட்சி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மாசிலாமணி, துணைப்பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ல் திருநெல்வேலியில் திறந்த வெளி மாநாடு நடத்தப்படும். முல்லைப் பெரியாறில் தமிழக உரிமைக்காகவும், கேரள அரசின் அக்கிரமப் போக்கைத் தடுக்கவும் மதுரையில் ஆகஸ்ட் 17-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் வைகோ தலைமையில் நடத்துவது என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள்


By பாஞ்சை வேந்தன்
7/23/2011 8:58:00 AM
7/23/2011 8:58:00 AM


By ராஜா@மதுரை
7/23/2011 5:26:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *7/23/2011 5:26:00 AM