சனி, 23 ஜூலை, 2011

Vaiko hunger strike on 17th August for mullai-periyaaru problem: முல்லைப் பெரியாறு சிக்கல்: 17- இல் வைகோ உண்ணா நோன்பு

முல்லைப் பெரியாறு பிரச்னை: 
17-ல் வைகோ உண்ணாவிரதம்

First Published : 23 Jul 2011 04:00:06 AM IST


சென்னை, ஜூலை 22: முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பாக வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினர் மதுரையில் ஆகஸ்ட் 17-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர்.   ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அக் கட்சி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மாசிலாமணி, துணைப்பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.   கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:   அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ல் திருநெல்வேலியில் திறந்த வெளி மாநாடு நடத்தப்படும். முல்லைப் பெரியாறில் தமிழக உரிமைக்காகவும், கேரள அரசின் அக்கிரமப் போக்கைத் தடுக்கவும் மதுரையில் ஆகஸ்ட் 17-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் வைகோ தலைமையில் நடத்துவது என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  
கருத்துகள்

ஆகஸ்ட் 17 அன்று தமிழகத்தின் தார் சாலைகள் அனைத்தும் மதுரை நோக்கி திரும்பட்டும்.
By பாஞ்சை வேந்தன்
7/23/2011 8:58:00 AM
வைகோ என்றால் ஈழப்பிரச்சினைப்பத்தி மட்டும் தான் பேசுவார் என்று ஒரு கூட்டம் அவதூறு பரப்பிக்கொண்டு திரிகிறது. முல்லை பெரியாறு அணைக்காக விடாமல் போராட்டம் நடத்தியவர்கள் அய்யா பழ.நெடுமாறனும், வைகோவும் தான். மஞ்சத்துண்டுக்காரனோ, அவன் மகன் தொடைநடுங்கியோ ஒரு தடவை கூட பெரியாறு அணைக்காக போராட்டம் நடத்தியது இல்லை. தமிழருக்காக என்றும் போராடும் வைகோ அவர்கள் தன்னிகரற்ற தலைவராக விரைவில் உயர்வார்.
By ராஜா@மதுரை
7/23/2011 5:26:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக