ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

12-08-2009: யேர்மனியில் நடைபெற்ற மலேசியத்தூதரங்களை நோக்கிய ஆர்ப்பாட்ட ஊர்வலம்

Germany-Malaysian-Embassy (1)மலேசியா அரசு சிறிலங்காஅரடன் இணைந்து மேற்கொண்ட ஐனநாயகத்திற்கு எதிரானநடவடிக்கையைக் கண்டித்தும், வவுனியாத் தடுப்புமுகாம்களில் உள்ள தமிழ்மக்களை அவர்களது சொந்த இடங்களில்குடியமர்த்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனக்கோரியும் யேர்மனி பேர்லின் நகரில் அமைந்துள்ள மலேசியத்தூதரகம் மற்றும் பிராங்போட் நகரில் அமைந்துள்ள மலேசியத்துணைத் தூதரகம் என்பவற்றை நோக்கி நேற்று யேர்மன்வாழ் தமிழ்மக்களால் கண்டன ஊர்வலங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பலநூற்றுக்கணக்கான மக்கள்கலந்து கொண்ட இவ் ஊர்வலங்களில் மலேசிய நாட்டின் நடவடிக்கையைக் கண்டித்து பாதாதைகள் தமிழ் மக்களால் தாங்கிச் செல்லப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக