சனி, 22 ஆகஸ்ட், 2009

இந்தியாவைச் சேர்ந்த சுகாதார நிபுணருக்கு சர்வதேச விருது



லண்டன், ஆக. 21: இந்தியாவைச் சேர்ந்த சுகாதார நிபுணரும், "சுலாப்' சுகாதார இயக்க நிறுவனருமான பிந்தேஸ்வர் பதக், 2009 ஆம் ஆண்டுக்கான பெருமைமிகு "ஸ்டாக்ஹோம் வாட்டர்' என்ற சர்வதேச விருதைப் பெற்றுள்ளார். சுற்றுச்சூழல் சேவைக்கான இந்த விருது நோபல் பரிசுக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. ஸ்டாக்ஹோம் நகரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில், பிந்தேஸ்வர் பதக்கிற்கு இந்த விருதை சுவீடன் இளவரசர் கார்ல் பிலிப் வழங்கினார். இந்த விருதைப் பெற்றுக் கொண்ட பிறகு, பிந்தேஸ்வர் பதக் பேசியது: முறையான சுகாதார வசதியை அளிப்பதன் மூலம் அனைவரும் குறிப்பாக, பெண்கள் கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் வாழ முடியும். சிசு மரணத்தையும் குறைக்க முடியும். சுத்தமான தண்ணீரும், சுகாதாரமும் கிடைத்தால் ஒட்டுமொத்த சமுதாயத்தின் உடல்நலம் மேம்பாடு அடையும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக