ஞாயிறு, 15 ஜனவரி, 2012

new year promise: ponkal greetings

திருவள்ளுவர் புத்தாண்டில் மேற்கொள்வோம்
பொங்கல் சூளுரை

வாழ்க தழிழ்மொழி; வளர்க குறள்நெறி
உழவர் திருநாள்; புலவர் பெருநாள்
மக்கள் மகிழ்நாள்; வண்டமிழ்ப் பொங்கலில்
எடுக்கும் சூளுரை இன்தமிழ் போற்றலே
பொங்குக பாலே! பொலிக நல்வளம்!
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரந்து வையகம்
குறள்நெறி போற்றிக் கூடி வாழ்கவே.
குறன்நெறி மலரவும் குடியர சோங்கவும்
ஆற்றுவோம் தொண்டே அனைவரும் வம்மின்;
போற்றுவோம் இறையை; பொங்குக இன்பமே.

 - பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
 குறள்நெறி (இதழ் 1 மலர் 1) தை2,1995:15.1.1964


நன்றி : நட்பு
http://ebook.natpu.in/index.html

--

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக