திங்கள், 16 ஜனவரி, 2012

India's first female press photographer died : இந்தியாவின் முதல்ஒளிப்பட இதழாளர் காலமானார்

இந்தியாவின் முதல் புகைப்பட பெண் பத்திரிகையாளர் காலமானார்

First Published : 15 Jan 2012 06:59:36 PM IST


வடோதரா, ஜன.15: இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிகையாளரான ஹோமாய் வ்யாரவாலா தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 98.கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் படுக்கையில் இருந்துகீழே விழுந்து காயம் அடைந்த அவர் பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  இவரது கணவர் மானெக்‌ஷா வ்யாரவாலா 1970ல் இறந்துவிட்டார். 1913 டிசம்பர் 9 ல் பிறந்தவர் ஹோமாய். பார்சி குடும்பத்தைச் சேர்ந்த இவர் மும்பையில் வளர்ந்தார். 1942ல் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளைப் படம்பிடித்த இவர், பிரிட்டிஷ் இன்பார்மேஷன் சர்வீஸில் பணியில் இருந்தார்.ஜூன் 3ல் இந்தியப் பிரிவினை குறித்து நடந்த ஓட்டெடுப்பு, 1947 ஆக.15 அன்று சுதந்திர இந்தியாவின் முதல் கொடியேற்று வைபவம், மௌண்ட் பேட்டன் பிரபு விடைபெறும் நிகழ்வு, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் இறுதிச் சடங்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை தத்ரூபமாகப் படம்பிடித்தவர் இவர். இவருக்கு பத்ம விபூஷன் விருது கடந்த ஜனவரியில் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக