சனி, 9 அக்டோபர், 2010

சென்னை சென்ட்ரல்- மதுரை வாராந்திர சிறப்பு ரயில்


சென்னை, அக். 8: சென்னை சென்ட்ரல்- எழும்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (எழும்பூர் வழி) சேவை இயக்கப்பட உள்ளது.  இந்த ரயில் (0653) சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 11, 18, 25 மற்றும் நவம்பர் 1, 8 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமைகளில்) இரவு 9.50-க்கு புறப்பட்டு, மறு நாள் காலை 8.50 மணிக்கு மதுரைக்கு சென்று சேரும்.  மறுமார்க்கத்தில் இந்த வாராந்திர சிறப்பு ரயில் (0654) மதுரையில் இருந்து அக்டோபர் 12, 19, 26 மற்றும் நவம்பர் 2, 9 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமைகளில்) மதுரையில் இருந்து இரவு 9.10-க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.10 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.  இந்த ரயில் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் வழியாகச் செல்லும்.  இன்று முன்பதிவு:  இந்த ரயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு சனிக்கிழமை தொடங்குகிறது.
கருத்துக்கள்

செய்தியைச் சரியாக வெளியிடவும். தலைப்பையும் முதல் வரியையும் படித்தாலே தவறு புரியும். செண்டிரலில் இருந்து புறப்பட்டு நேரடியாக எழும்பூர் வரவும் வாய்ப்பு உள்ளதா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/9/2010 5:11:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக