தில்லியில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளி்ல் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்கிறது. பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 67 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அனிதா தங்கப் பதக்கம் வென்றார். இதையடுத்து, இந்தியா இதுவரை 19 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.இன்று நடந்த மகளிர் வில்வித்தைக் குழுப் போட்டியில் இந்திய மகளிரணி தங்கப் பதக்கம் வென்றது. இந்த நிலையில், 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் ககன் நரங், இம்ரான் ஹசன் இணை மேலும் ஒரு தங்கப் பதக்கத்தை வென்றது. இந்தக் குழு முந்தைய காமன்வெல்த் சாதனையையும் முறியடித்தது.இன்று, 25 மீட்டர் அதிவிரைவு கைத்துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்திய வீரர் விஜய்குமார் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.மேலும், மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் அல்கா தோமர் தங்கப் பதக்கம் வென்றார்.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/9/2010 5:02:00 AM
10/9/2010 5:02:00 AM


By kk
10/8/2010 6:10:00 PM
10/8/2010 6:10:00 PM


By bala
10/8/2010 1:39:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/8/2010 1:39:00 PM