திங்கள், 6 செப்டம்பர், 2010

ப. சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய கருத்து: விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு


ஆமதாபாத், செப்.6- மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்த குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 25-ம் தேதி தில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது 'காவித் தீவிரவாதம்' என்கிற வார்த்தையை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பயன்படுத்தினார். இந்நிலையில், அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தைச் சேர்ந்த சுவாமி நிஜானந்த் தீர்த் என்பவர் ஆமதாபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
"காவி நிறம் என்பது இந்து மதம் மற்றும் துறவிகளின் அடையாளமாக உள்ளது. அது கடவுள், அமைதி, தியாகம் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்கிறது. 'காவித் தீவிரவாதம்' என்கிற வார்த்தையை பயன்படுத்தியதன் மூலம் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் லட்சக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவோரை தண்டிக்க வேண்டும்." என்று சுவாமி நிஜானந்த் தீர்த் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஆமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எம்.ஜி. தவே முன்னிலையில், அந்த மனு இன்று விசாரணைக்கு வந்ததது. இதில், சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள போஸீஸ் அதிகாரி விசாரணை நடத்தி 90 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கருத்துக்கள்

இந்தியக் கண்டத்தின் மண்ணின் மைந்தர்களை நசுக்கும் இந்தியப் பயங்கரவாதத்திற்கு எதிராக இருக்கும் ப.சி. எனத் தவறாகக் குறிக்கப் பெற்றதற்கு வருந்துகிறேன்.இந்தியப் பயங்கரவாதத்திற்கு எதிராக என்னும் இடத்தில் இந்தியப் பயங்கரவாதத்திற்குத் துணையாக என்று வாசிக்கவும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/6/2010 6:10:00 PM
பயங்கரவாதம் என்பது அருள்நெறி போற்ற வேண்டிய சமயங்களின் பெயராலும் நிகழ்கிறது. என்றாலும் பொதுவாகப் பயங்கரவாதம் என்றால் இசுலாம் மட்டுமே முன்நிறுத்தப்படுகின்றது. எனவே, பாபர் மசூதி இடிப்பு, கோத்ரா எரிப்பு, தலைவெட்டிக் கொண்டு வந்தால் பரிசு என்று அறிவிப்பு முதலானவற்றைக் கண்டு மனம் வெதும்பி ப.சி. அவர்கள் கூறியுள்ளார். அது தவறெனில் இந்து சமயத்தின் பெயரால் நடைபெற்ற வன்முறைகளை ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும். தமிழ் நாடடவர் முதன்மைப் பொறுப்பில் இருப்பதையும் அடுத்து இதைவிட மிகுதியான தலைமைப் பொறுப்பிற்கு வந்து விடுவாரோ என அஞ்சியும் தமிழ்நாட்டவர்க்கு எதிரானவர்கள் கிளர்ச்சி செய்கின்றனர். அதே நேரம், ஈழத்தமிழர்க்கு எதிரான இந்தியப் பயங்கரவாதத்திற்கு உறுதுணையாக இருக்கும் இந்தியக் கண்டத்தின் மண்ணின் மைந்தர்களை நசுக்கும் இந்தியப் பயங்கரவாதத்திற்கு எதிராக இருக்கும் ப.சி. இதைக் கூறியுள்ளதுதான் வியப்பு. அவ்வாறே அவர் அடுத்து காங்கிரசு பயங்கவாதம் குறித்தும் கூறினால் நன்று. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/6/2010 6:08:00 PM
. இந்த வழக்கில் இருந்து சிதம்பரம் தப்பிக்க ஒரு வழி இருக்கிறது அவர் ஒரு மன நோயாளி என மருத்துவ சான்றிதழை நீதிபதி இடம் காண்பிக்கலாம்.....
By வீர ஹிந்து முத்துபேட்டை ...
9/6/2010 5:50:00 PM
Ivana nalla uttru paarungal.... Avane than Onbathu paiyan... Ivanoda pecha en mathikanum
By Hindustan-Kuruvi
9/6/2010 5:46:00 PM
இங்கே கருணாநிதி பேசும் பேச்சுகளை அந்த நீதிமன்றம் கேட்டால் என்ன சொல்லுமோ? அதன் மரம் வெட்டி ராம தாஸ், தன் ஜாதிக்கரப்பயளுவளை ஜட்ஜ் ஆக்கி விட்டால் , கடு வெட்டி மற்றும் அவர்தம் கும்பலை விட்டு தமிழ் நாட்டை சூறை தேங்காய் போல் ஆகினாலும் வன்னிய நீதி மன்றம் ஒன்னும் செய்யாது. ஒரு வாரம் தொலை காட்சில் பார்த்த அட்டாக் பாண்டி கும்பலை ஒரு சின்ன கொழந்தை கூட அறிந்தும் ரௌடிபயல் மற்றும் அவன் முதலாளி அஞ்சாநெஞ்சன் வெள்ளை சட்டை போட்டு வெளியில் திரி கிறார்களே . கருணாநிதி தனது ஆட்களை மெதுவாக உயர் நீதி மன்றத்திலும் மற்றும் எல்லா நீதித் துறைஎளும் புகுதியதினால் தான்
By கோழி
9/6/2010 5:44:00 PM
தன தாயினை தானே இகழ்ந்து பேசியவரை தண்டிக்க முயற்சிப்பது விவேகமல்ல ! கொஞ்சம் தாயின் பெருமைகளை புனிதத்தை புரிந்து கொள்ள ஞானத்தை அருளலாம் ! அறியாமையில் கிடப்பவன் அரசன் என்றாலும் மந்திரியே என்றாலும் அவர்களின் பேச்சினைப் பொருட்படுத்தி பயன் இல்லை வருத்தப் படுவதில் பொருள் இல்லை !!! @ rajasji
By rajasji
9/6/2010 5:26:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக