திங்கள், 2 நவம்பர், 2009

இலங்கை பிரச்னைக்குத் தீர்வு: கருணாநிதி தலையிட ஆனந்தசங்கரி வலியுறுத்தல்



கொழும்பு, நவ. 1: இலங்கை இனப் பிரச்னைக்குத் தீர்வு காண தமிழக முதல்வர் கருணாநிதி தலையிட வேண்டும் என தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் வி.ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: இந்தியாவில் உள்ளது போல அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தால் பெரும்பான்மையான தமிழர்களுக்கு ஓரளவு திருப்தி ஏற்படும். திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழு அண்மையில் இலங்கை முகாம்களின் நிலைமையை நேரில் கண்டறிந்தது. இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை குழுவினர் விரைவில் சந்திக்க உள்ளனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதிகாரப் பகிர்வுக்கு இலங்கை குழுவை சம்மதிக்க வைக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு நீங்கள் (கருணாநிதி) அழுத்தம் கொடுக்க வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரண உதவியைப் பெற்றுத் தரவும் முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

இந்திய அரசின் அழுத்தங்களுக்கு அடிபணிவதுதான் தமிழக அரசின் நோக்கமே யன்றி மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்பது அன்று. இவ்வாறிருக்க இந்த மடல் யார் சொல்லி வந்தது என்று ஊகிக்கலாம். ஆனால், இந்த நாடகம் ஏன் அரங்கேற்றப்படுகிறது என்று விரைவில் தெரிந்துவிடும். அமைதிச் சான்றாளர்களாக/ மௌன சாட்சிகளாக இவற்றைப் பார்ப்பதைத் தவிர நாம் வேறு என்ன செய்யப் போகிறோம்? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/2/2009 3:43:00 AM

இரண்டு நாயும் சேர்ந்துள்ளது இணி தமிழர்களுக்கு நல்லதுதான் எண்டா ஆனந்தசங்கரி நி போய் ராஜபக்சேவுடன்தான் இருக்கா எண்டா நாயே நி ராஜபக்சேவுட்ட சொல்லமாட்டயா பச்னச துறேகிகாள்

By usanthan
11/2/2009 1:38:00 AM

one of the site cakled tamilmanam says that now some of the srilankan terrorist try to make lot of problems in India.One Mr.Sabesan openly says that they have to help all the anti Indian movement like mavoist and do the possible things to do harm to unity of our India. Atleast now the proLTTE leaders ,Tamil people,Indian Govt should be awake and do the proper measure and understand that these srilankan Tamil never love India they only use Tamil sentiment for their purpose. We Indian should be always think our mother land is first.We always love unity in diversity. Jai Hind! Indian

By Indian
11/2/2009 1:24:00 AM

நான் படையிலே போகும்போதும் பதவியோடு போகவேண்டும் உடன்பிறப்பே. காவேரி காய்ந்தால் எனக்கு என்ன? பெரியாறு போனால் எனக்கு என்ன? தமிழக மீனவன் மடிந்தால் எனக்கென்ன? இலங்கைத்தமிழன் இறந்தால் எனகென்ன? தமிழன் எக்கேடு கேட்டல் எனக்கென்ன? என் மக்கள் (ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, மாறன்) நன்றாக ச்விச்ஸ் வங்கி கணக்கோடு சுபிட்சமாக இருந்தால் அதுபோதும் எனக்கு. தேர்தல் என்று வந்தி விட்டால், அடித்த பணத்தை அள்ளிவீசி வெற்றிவாகை சூடிவா உடன்பிறப்பே. என் கொள்கை என்னவென்று கோபப்பட்டும் கேட்டிடாதே உடன்பிறப்பே. நான் பாடையிலே போகும்போதும் பதிவோடு போகவேண்டும். தமிழன் எக்கேடு கேட்டால் எனக்கென்ன? நான் பாடையிலே போகும்போதும் பதிவோடு போகவேண்டும் உடன்பிறப்பே

By tamizhargal
11/2/2009 12:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக