சனி, 7 நவம்பர், 2009

தமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்: சிங்களப் பேராசிரியர்

எழுதியவர்மீனகம் on November 5, 2009
பிரிவு: சிறப்புச்செய்திகள்

tamil_lettersதமிழ்மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர் என்று சிங்களப் பேராசிரியர் சுசரித்த கம்லத் தெரிவித்துள்ளார். யாழ்பல்கலைக்கழக விரிவுரையாளர் சுவாமிநாதன் கலை அமைப்பிற்காக மொழிபெயர்ப்பு செய்த யாழ்ப்பாணத்தின் மனச்சாட்சி என்ற சிங்கள நூலின் வெளியீட்டு விழா பொரளையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 1977ஆம்ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறையில் சிங்களவர்கள் எவரும் தமிழ்மக்களால் தாக்கப்படவில்லை என்று உறுதிபட எடுத்துரைத்தார்.

தமிழ்மொழி மிகப்பெரியதோர் பழமைவாய்ந்த மொழி. இன்று உலக நாடுகள் அனைத்திலும் பேசப்படும் ஒரு மொழியாக உள்ளது. தமிழ் மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர் என்றும் தெரிவித்துள்ளார்.

(Visited 272 times, 38 visits today)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக