புதன், 4 நவம்பர், 2009

இலங்கை அகதிகளுக்குக் குடியிருப்பு உள்ளிட்ட வசதிகள்: ராமதாஸ் வலியுறுத்தல்



சென்னை, நவ.3: இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு சமத்துவபுரங்கள் போன்று புதிய குடியிருப்பு வசதிகள் செய்துதர தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சுமார் 1 லட்சம் இலங்கைத் தமிழர்கள் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இலங்கையில் போர் முடிந்துவிட்டாலும் தமிழர்கள் அச்சத்தோடுதான் வாழ வேண்டி உள்ளது. எனவே அகதிகளை இங்கிருந்து அனுப்புவது அவர்களுக்குப் பாதகமாகவே முடியும்.இந்நிலையில் அகதிகளின் இழிந்த வாழ்வைப் போக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அமைச்சர்கள் அகதிகள் முகாம்களை இருமுறை பார்த்து அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். எனினும் நிலைமை கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடச்செய்வது போலத்தான் இருக்கிறது. ஈழத் தமிழ் அகதிகள், தாங்கள் உயிர் பிழைக்க அனுமதி தந்துள்ள மண்ணில் அரசுக்கு எதிராகப் போராடிப் பெற முடியாத நிலையில் உள்ளனர். ஈழத்தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் மானியமும், உணவும் போதுமானதாக இல்லை. இந்த அவலநிலையைப் போக்க அவர்களுக்கு வழங்கப்படும் மானியங்களை உயர்த்த வேண்டும். அவர்களின் கல்வி, பொருளாதார மேம்பாட்டுக்கு சிறப்பு நிதிஉதவியுடன் தனி வாரியம் அமைக்க வேண்டும்.தலாய்லாமாவின் தலைமையில் சீனாவிலிருந்து வெளியேறி இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள திபெத்தியர்கள் நமது நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் சுதந்திரத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இந்தியாவில் அவர்களுக்கான குடியிருப்புகள் பல உள்ளன. அங்கு அவர்கள் ஆரோக்கியமான சூழலில் வாழ்கின்றனர். அதோடு ஒப்பிடும்போது இலங்கை அகதி முகாம்களில் உள்ள குடியிருப்புகள் மிகவும் மோசமானவை. இலங்கை அகதி முகாம்களுக்கு சென்று பார்ப்பதைவிட திபெத்தியர்களின் முகாம்களுக்குச் சென்று பார்த்து அதுபோன்ற வசதிகளைச் செய்துகொடுக்க அரசு முன்வர வேண்டும். சமத்துவபுரங்கள் போன்று புதிய குடியிருப்புகள் அமைத்து இலங்கைத் தமிழ் அகதிகளைக் குடியமர்த்த வேண்டும்.இலங்கைத் தமிழர்களை 6 மாதங்களுக்கு மேல் முகாம்களில் அடைத்து வைக்காமல் குடியிருப்புகளுக்கு மாற்ற வேண்டும். அனைவருக்கும் நிலையான குடியிருப்பு அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். தொழில் தொடங்கவும், வங்கிக் கடன் பெறவும் சுதந்திரம் வழங்க வேண்டும். கல்வியில் எல்லா சலுகைகளும் தொடர்ந்து நீடிக்க வேண்டும். வசதி குறைந்தவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் ஆகியவற்றை அரசே செலுத்த வேண்டும். கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் இலங்கைத் தமிழ் மக்களும் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

புலம் பெயர்ந்து வந்த தமிழர்களுக்கு முகாம்கள் என்ற பெயரில் கொத்தடிமைச் சிறைச்சாலைகள் அமைப்பதைவிடவும் குடியிருப்பு என்ற பெயரில் ஊருக்கு வெளியே ஒதுக்கித் தள்ளி வைப்பதைவிடவும் அவர்கள் விரும்பியவாறு வாழ்வதற்குரிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். எந்தத் தடையுமின்றிக் கல்வியைத் தொடரவும் தொழிலை நடத்தவும் வாய்ப்புள் தர வேண்டும். ஆனால் மத்திய அரசின் அடிமையான தமிழக அரசு இதனைச் செய்யாது. ஏதோ இப்போதுதான் புதிதாக இலங்கைத் தமிழர்களும் ஈழத் தமிழர்களும் தமிழ்நாட்டில் குடியேறி வந்துள்ளது போல் அவசரக் கூட்டம் போட்டு நிதி ஒதுக்குவதில் இருந்தே இதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம். முதலில் வீடற்று நாடற்று உறவற்று உணர்வற்று வந்துள்ள அவர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும். அவர்கள வாழ்வு முறையை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். பிற எல்லா உதவிகளும் அடைத்து வைத்து உரிமையைப் பறிக்கும் கடுங்காவல் தண்டனைகளே என்பதை அரசும் அரசியல் வாதிகளும் மக்களும் உணர வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/4/2009 3:04:00 AM

முகவரி தொலைந்தவர்களிற்கெல்லாம் முகவரி கொடுக்கும் தினமணி! இன்னுமா இந்த நபருக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கின்றது. ஏன் தமிழ்நாடு ஜாதிக்கட்சி இல்லாத இடமாக மாறுவதில் தினமணிக்கு உடன்பாடு இல்லையா?

By Ravi
11/4/2009 1:57:00 AM

Dear Saru, Most of the dirty Tamil politicians play double role in Srilankan Tamil issues.We respect our Tamil brothers and sisters of Tamil nadu always.

By cholan
11/4/2009 12:55:00 AM

Why. peace has returned to Srilanka. These people must be sent back. Ramadass trying to invite trouble to tamilnadu. It should not be allowed.

By B sivanesan
11/4/2009 12:05:00 AM

Hello Abdul and Cholan, It is none of your business to talk about Tamilnadu/Indians politicians as you are an outsider, I hope. Further, there is no wrong in calling them as Agathigal in English it means refugee. All over the world these people are seeking and calling themselves as refugee only. If you are calling them as Srilankan Tamils it means they are came to India in legal visa. If we call them REFUGEE they may get privilege from the Govt. otherwise they will be treated badly.

By Charu, Toronto, CANADA
11/3/2009 11:07:00 PM

who wants this stupids mercy bleddy he is always openning his mouth cast based person should keep quit and mum himself.media people shouldn;t give importence to this kind of idiots

By thamilnaadan
11/3/2009 11:06:00 PM

ஆம் இலங்கை தமிழர்கள் என்று அழைப்பதுதான் முறை வாய்கிழிய கத்தும் அரசியல் வியாபாரிகளுக்கு நல்ல சூடு

By thamilan
11/3/2009 11:00:00 PM

I am agreed with you Mr.Abdul.We like to thank all our Tamil brothers and sisters of Tamil Nadu.PLEASE KICK OUT SOME DIRTY TAMIL POLITICIANS FROM TAMIL NADU.

By cholan
11/3/2009 6:34:00 PM

இலங்கை *அகதிகள்* என்பது கடுஞ்சொல்லாக தெரியவில்லையா? ஈழத் தமிழர்கள் என்று அழைக்க மனமில்லாவிட்டாலும், குறைந்தபட்சம் நாம் அவர்களை *இலங்கைத் தமிழர்கள்* என்றாவது அழைக்கலாமே ?! தேர்தல் நேரத்தில் மட்டும் அவர்கள் நமது தொப்புள்கொடி உறவுகள் அது இது என்று தொண்டை நரம்பு கிழிய கிழிய கத்துகிறோம். அவதிப்பட்டுக் கொண்டு இருக்கும் அவர்களுக்கு நம்மால் உதவத்தான் முடியவில்லை. குறைந்தபட்சம் நமது கடுஞ் சொற்களையாவது நாம் தவிர்க்கலாமே ?!

By abdul.com - dubai
11/3/2009 5:57:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக