சனி, 22 டிசம்பர், 2012

எழுத்தாளர் செல்வராசின், "தோல்' புதினத்திற்குச் சாகித்ய அகடமி விருது


எழுத்தாளர் செல்வராசின், "தோல்'  புதினத்திற்குச்  சாகித்ய அகடமி விருது

புதுதில்லி: இந்தாண்டுக்கான சாகித்ய அகடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில், திருநெல்வேலியை சேர்ந்த எழுத்தாளர், டி.செல்வராஜ் எழுதிய, "தோல்' என்ற நாவலுக்கு, விருது கிடைத்துள்ளது. இந்திய மொழிகளில், வெளியாகியுள்ள கதை, நாவல்களில் சிறந்த படைப்புகளை உருவாக்கிய எழுத்தாளர்களுக்கு, ஆண்டுதோறும் சாகித்ய அகடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.இந்தாண்டு, 24 இந்திய மொழிகளில் இருந்து, கவிதை நூல்கள் 12, சிறுகதை 4 , நாவல்கள் 4 மற்றும் சுயசரிதை, விமர்சனம் பிரிவில் தலா ஒரு நூல்கள் தேர்வு பெற்றுள்ளன.தமிழில் திருநெல்வேலியை சேர்ந்த, டி. செல்வராஜ் எழுதிய, "தோல்' நாவல், விருதுக்கு தேர்வு பெற்றுள்ளது.
தமிழில் சிறந்த நூலை தேர்வு செய்யும் குழுவில், பேராசிரியர் கே.வி. பாலசுப்ரமணியன், அப்துல் ரகுமான், சா.கந்தசாமி ஆகியோர், இடம் பெற்று இருந்தனர்.செல்வராஜ் திண்டுக்கல்லில் வழக்கறிஞர் பணியாற்றி வருகிறார்.திண்டுகல்லை சுற்றி செயல்படும் தோல் பதனிடும் தொழிலை மையமாக வைத்து, "தோல்' நாவலை எழுதியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக