ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

''தமிழின் பெருமைகளை அறிந்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்''

''தமிழின் பெருமைகளை அறிந்தால்
 தன்னம்பிக்கை அதிகரிக்கும்''
 
  தினமணி
First Published : 30 Sep 2012 02:13:58 AM IST

Last Updated : 30 Sep 2012 02:36:58 AM IST

நிகழ்ச்சியில் பேசுகிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். உடன், பத்மா சேஷாத்ரி பள்ளிகளின் நிறுவனர் மற்றும் டீன் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி.
சென்னை, செப். 29: தமிழின் பெருமைகளை மாணவர்கள் அறிந்து கொண்டால் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார்.கல்வியின் விழுமியங்களை மேம்படுத்துவது குறித்த நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளின் முதல்வர்கள், தாளாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேசியது: கல்வி ஒருவருடைய சுய மரியாதையை வளர்க்கிறது. வாழ்வில் முன்னேற்றத்தையும் ஒழுக்கத்தையும் வழங்குகிறது. கற்பித்தல் என்பது கடவுளை வழிபடுவது போன்றது. இதனை ஆசிரியர்கள் சேவையாக செய்ய வேண்டும்.ஒரு முழுமையான மனிதனை உருவாக்கும் புனிதமான இடம் பள்ளியும் கல்லூரியும்தான். வெறும் தகவல்களை மட்டும் மாணவர்களுக்கு வழங்காமல், அவர்களின் திறமைகளை வளர்க்க வேண்டும். புத்தகத்தில் இருப்பதை தவிர பல விஷயங்களை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். தமிழ் மொழி: ஜப்பானிய மொழியில் தமிழ் சொற்களின் தாக்கம் அதிகம் உள்ளது. இதேபோல, தென் அமெரிக்க நாடான பெருவுக்கு சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னரே திராவிடர்கள் சென்றுள்ளனர் என்பது போன்ற தகவல்களை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்.இதனால் மாணவர்களுக்கு மொழியின் மீதான மதிப்பு அதிகரிக்கும். மொழியின் மீதான மதிப்பு அதிகரித்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதன்மூலம், அவர்கள் சொந்த காலில் நிற்கமுடியும் என்றார் அவர். கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருப்பதாலேயே வன்முறை எண்ணங்கள் அதிகரிக்கின்றன. வன்முறை என்பது பிறப்பில் இருந்து வருவது இல்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக