திங்கள், 24 ஜனவரி, 2011

Birth annivesary of Nethaji Subash chandira bose: இன்று சுபாசு சந்திரபோசு பிறந்த நாள்


பழைய கட்டுரை அவ்வாறே வெளியிடப்பட்டுள்ளது. எனவேதான் இக்கட்டுரையில்  முகர்சி ஆணையம் தன் அறிக்கையை 2005 நவம்பரில் வெளியிடும் என உள்ளது. அந்த ஆணையம்  18.08.1945 அன்று  தேசத்தலைவர் சுபாசு சந்திர போசு இறக்கவில்லை என அறி்க்கை அளித்தது. ஆனால், இந்திய அரசு அந்த அறிக்கையை ஏற்கவல்லை.  பைசியாபாத் நகரில் வாழ்ந்து வந்த  கும்நாமி பாபா என்பவர்தான் போசு எனச் சொல்லப்பட்டது.  அவரது பிறந்த நாள்  போசு  பிறந்த நாளான 23.01. இல் கொண்டாடப்பட்டதாலும், அவர் திரை  மறைவில் இருந்தே காட்சியளித்ததாலும் அவரது  உருவ அமைப்பு, கண்ணாடி முதலானவை போசு அவர்களுடன் ஒத்துப் போனதாலும்  அவரது வீட்டில் போசு குடும்பப் படங்கள் இருந்தமையாலும் அவ்வாறு நம்பப்பட்டது. அவரும்  1985 இல் மறைந்துவிட்டார்.  மேலும் இவ்வாணையத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட சாநவாசு ஆணையமும் கோசுலா ஆணையமும்  போசு இறப்பை உறுதி செய்திருந்தும் அவற்றையும் மத்திய அரசு ஏற்கவில்லை.  இவர் வழியில் நாட்டு விடுதலைக்குப் பாடுபடும் தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்  விரைவில் வெளிவந்து போராட்டத்தை முன்னின்று நடத்தி வெற்றி காண்பார். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 

இன்று சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள்

329220814Bose
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (ஜனவரி 23, 1897 – ஆகஸ்டு 18, 1945) இந்திய சுதந்திரப் போடட்டத் தலைவர். இரண்டாம் உலக போர் சமயத்தில் வெளிநாடுகளில் போர் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டிஇந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்.
இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு சன்னியாசியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆம் வருடம் ஆகஸ்டு 14 முதல் செப்டம்பர் வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போல் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்து வரும் முகர்ஜி கமிஷன், தன் இறுதி அறிக்கையை 2005 நவம்பரில் வெளியிடும் என்று தெரிகிறது.
சுபாஷ் சந்திர போஸ் 1897 ஆம் வருடம் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில்லுள்ள கட்டாக் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஜானகிநாத் போஸ். போஸ் ராகின்சேவ் காலேஜ் ஸ்கூல் – கட்டாக், ஸ்காடிஷ் சர்ச் ஸ்கூல், கல்கட்டா மற்றும் பிட்ஷ்வில்லியம் காலேஜ் ஆகிய இடங்களில் படித்தார். 1920 இல் இந்திய மக்கள் சேவை படிப்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர் இந்தியாவிலேயே நான்காவதாக வந்தார். எனினும் ஏப்ரல் 1891 இல் மதிப்புமிக்க இந்திய மக்கள் சேவையிலிருந்து வெளியேறிய அவர் இந்திய சுதந்திர போரட்டத்தில் பங்கேற்றார்.
}
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக