புதன், 15 செப்டம்பர், 2010

மீனவர் பிரச்னை: ஜப்பான் தூதருக்கு சீனா சம்மன்


பீஜிங், செப்.15- மீனவரை விடுவிப்பது தொடர்பான பிரச்னையில் விளக்கம் கேட்பதற்காக ஜப்பான் தூதருக்கு சீனா 5-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
இருநாடுகளின் இடையே சர்ச்சைக்குரிய கடல் பகுதியில், ஜப்பான் படகுகள் மீது மோதியதாக சீன மீன்பிடி படகு ஒன்றின் கேப்டனை  ஜப்பான் கைது செய்துள்ளது.
இது சட்டவிரோதமான கைது என்று சீனா குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் லீ ஸென்மின் நேற்று ஜப்பான் தூதர் உச்சிரோ நிவாவை நேரில் வரவழைத்து புகார் கூறினார். மீனவரை உடனே விடுதலை செய்து சீனாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், மீண்டும் ஜப்பான் தூதரிடம் விளக்கம் கேட்பதற்காக 5வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துக்கள்

சீனா இறை யாண்மை உள்ள நாடு. எனவே தன் நாட்டு மீனவரிடம் தவறு இருந்தாலும் காப்பாற்றுகிறது. இந்திய இறையாண்மையோ சிங்களத்திடம் அடகு வைக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக மீனவர்கள் நூற்றுக்கணக்கில் மடிந்தாலும் சிங்களம் பக்கமே நிற்கிறது. தமிழ் மக்களுக்கு மட்டும் உரிமையில்லை என்ற எண்ண வேண்டா. இந்திய அரசும் அடிமை அரசாகத்தான் உள்ளது. எனினும் தமிழர்களைக் காவு கொடுத்துக் குளிர் காய்கிறது. வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/15/2010 5:09:00 PM
Now the Indian Government and State Government shall think deeply on harrassment and death of fisherman in coastel area of southern part of India by Srilanka navy. We can not become developed country until unless ensure of safety of citizen of India in homeland and abroad. All Eropian and American states are very careful and strict on safety on their citizen except India.
By Karthick
9/15/2010 5:05:00 PM
Chaina u ku avan makkal mukkiyam. So INdianuku no problem
By jass
9/15/2010 4:56:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக