திங்கள், 13 செப்டம்பர், 2010


தனிமனிதர் எவரும் தமிழைவிட பெரியவரில்லை: நிதியமைச்சர் க. அன்பழகன் பேச்சு
First Published : 12 Sep 2010 11:56:46 AM IST


புதுக்கோட்டை, செப். 11:  தனிமனிதர் எவரும் தமிழைவிட பெரியவரில்லை என்றார் நிதியமைச்சர்  க. அன்பழகன்.  புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு திமுக இலக்கிய அணிச் செயலரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ரா.சு. கவிதைப்பித்தனின் கவிதை நூலை வெளியிட்டு மேலும் அவர் பேசியது:  ""மொழிகளுக்கு எல்லாம் ஆதிமொழியாக தமிழ் திகழ்கிறது. வடமொழியிலிருந்தே மொழிகள் பிறந்தன என்றும் வடமொழியின் துணையின்றி தமிழ் மொழி இயங்காது என்றும் கூறப்பட்ட பொய், புரட்டுகளையெல்லாம் பொய்யாக்கி, தமிழ் மொழி தனித்தியங்கும் வலிமையுடையது என மொழி அறிஞர்கள் நிரூபித்ததால் இன்று செம்மொழியாகத் திகழ்கிறது தமிழ்.   தனி மனிதர் எவரும் தமிழைவிட பெரியவரில்லை. நாமெல்லாம் தமிழன் என்ற பெருமையையும் திராவிடன் என்ற உணர்வையும் கட்டிக் காக்க வேண்டும்.  தற்காலக் கவிதைகளைப் படிக்க முடிவதில்லை: கவிதைகளை விரும்பிப் படிப்பவன் நான். பாரதியார், பாரதிதாசன் கவிதைகளைப் படிக்கும்போது ஒரு வரியைக்கூட விட முடியாது. ஆனால், தற்போது வெளிவரும் கவிதைகள் அப்படி இல்லை. நாலு வரி படித்தால் அதற்கு மேல் படிக்க முடிவதில்லை.  சிறப்புமிக்க ஒரு மொழியை நாம் பெற்றுள்ளோம். அதைக் கையாளும்போது வரலாற்று பிரக்ஞை தேவை. மொழியால் வாழும் கவிஞர்களுக்கு, தங்கள் கவிதைகள் மூலமாக சமுதாயத்தைச் சீர்திருத்தும் ஆற்றல் தேவை.  கவிஞர்கள் எண்ணத்தில் உதிக்கும் கருத்துகள் நல்லவையாக இருந்தால் அவை மக்களை நல்வழிப்படுத்தும். எதிர்மறையாக இருந்தால், கவிதையும் தடம் புரளும்; அதைப் படைத்தவரும் நிலைக்க முடியாமல் காலத்தால் அடித்துச் செல்லப்படுவார். இதை உணர்ந்து கவிஞர்கள் செயல்பட வேண்டும்'' என்றார் அன்பழகன்.  முன்னதாக கவிதை நூலை அவர் வெளியிட, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் பெற்றுக்கொண்டார்.   விழாவுக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ். ரகுபதி தலைமை வகித்தார்.
கருத்துக்கள்

எம்.ஜி.ஆர், ஜெயா ஆட்சிக் காலங்களில் தமிழுக்காக, தமிழ் இனத்திற்காக தங்கள் கவிதைகளில் கனல் கக்கிய மேத்தா, வைரமுத்து, அப்துல் ரகுமான் உள்ளிட்ட பல கவிஞர்கள் இன்று கிடைக்கும் மேடைகளில் எல்லாம் அரச குடும்பத்தினரை துதி பாடும் புலவர்கள் போல் மாறிவிட்ட கொடுமை கண்டு சீறியுள்ளார், இனமானப் பேராசிரியர்.
By சிங்களன்
9/12/2010 11:55:00 PM
Anbazhagan has at last revealed his inner opinion on poems written as prose by so called poets.
By K.Thirumalairajan
9/12/2010 8:27:00 PM
மலையாளியோ தெலுங்கரோ அல்லது கன்னடரோ தான் திராவிடர் என்று கூறுவதில்லை. சென்னை மாகானம் இருந்தபோது இவை அணைத்தும் ஒன்றாக இருந்தது திராவிடம் என்ற சொல் பயன்பாடு சரி. ஆனால், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிவதை அது தடுக்க முடிவயவில்லை, மலையாளி தெலுங்கர் மற்றும் கன்னடரிடம் இன உணர்வை தோற்றுவிக்க வில்லை. மொழி உணர்வே தனி மாநிலங்களுக்கு வழிவகை செய்தது. தமிழ்நாட்டில் திராவிடம் தமிழரை பிற மொழிகாரர்கள் ஏமாற்றி ஆளவே அது உதவியது உதவுகிறது. உங்களுக்கு இன உணர்வு இருந்திருந்தால் ஈழத் தமிழர்களை படுகொலைக்கு உடைந்தையாக இருந்திருப்பீர்களர்? ஈழத்தமிழர் வேறு நாம் வேறு என்றுதானே கோவை தேர்தல் கூட்டத்தில் பேசினார் இவர். திரவாவிடனாக இல்லாமல் தமிழனாக இருந்தால் இனப்படுகொலை நடந்தேரியிருக்குமா? திராவிடம் என்பது ஏய்த்து பிழைக்கவே!
By Unmai
9/12/2010 5:05:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக