சனி, 21 ஆகஸ்ட், 2010

ஆம்! ஆம்! ஆம்! வீரப் போராளி முத்துக்குமார் பெயரைத்தான் சூட்ட வேண்டும். தமிழ் மண்ணில் அயலவர் பெயர் சூட்டக் கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++++

சென்னை, ஆக 21-
நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பழமை வாய்ந்த சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு தமிழருக்காக தன் ஒப்பற்ற தன் இன்னுயிரை ஈந்த மாவீரன் தியாகி தமிழர் முத்துக்குமார் பெயர் சூட்ட வேண்டும்.
தமிழர் தம் இனமானம் காக்கவும், தன்மானம் மீட்கவும் தன் இன்னுயிரை ஈந்தவன் முத்துக்குமார். எந்த அரசியல் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் தமிழர் நலனுக்காக தன்னை அர்ப்பணித்தவன் முத்துக்குமார்.
தமிழ்நாட்டிற்கு தொடர் பற்றவர்கள் பெயரெல்லாம் தமிழ்நாட்டின் வீதியெங்கும் சாலையெங்கும் சூட்டப்பட்டுள்ள நிலையில் தியாகி முத்துக்குமார் பெயர் சூட்டப்படுவதே மிகப் பொருத்தமானது. ஆகவே முத்துக்குமார் பெயரைச் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு சூட்ட வேண்டும் என நாம் தமிழர் கோரிக்கை வைக்கின்றது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்திபோராடவும் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக