வியாழன், 19 ஆகஸ்ட், 2010

தமிழகத்துக்கு உகந்த கட்சியாக காங்கிரஸ் செயல்படவில்லை: கார்த்தி சிதம்பரம்


சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பர
சென்னை, ஆக. 18: தமிழகத்துக்கு உகந்த அரசியல் கட்சியாக காங்கிரஸ் கட்சி செயல்படவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வருத்தம் தெரிவித்தார்.சென்னை புரசைவாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் சாதனை விளக்கக் கூட்டத்தில் அவர் பேசியது:மாவோயிஸ்ட் பிரச்னை, காஷ்மீர் பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை, பள்ளிகளுக்கான கல்வி கட்டணப் பிரச்னை போன்ற சர்ச்சைக்குரிய பிரச்னைகளில் கருத்து தெரிவிக்காமல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி விலகி நிற்கிறது. அதனால் காங்கிரஸின் நிலை மக்களுக்கு தெரிவதில்லை.இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து காங்கிரஸ் கட்சி அதிகமாக பேசாததால் தமிழர்களுக்கு எதிரான கட்சி என்பதுபோல பிரசாரம் செய்கிறார்கள். ஆனால், இலங்கைத் தமிழர்களுக்காக பல தியாகங்களை செய்த கட்சி காங்கிரஸ் மட்டுமே. 1987-ல் ஏற்பட்ட ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்றிருந்தால் தமிழர்களுக்கு சுயாட்சி கிடைத்திருக்கும். அதனை விட்டுவிட்டு ஆயுதப் போராட்டம் நடத்தியதால் தமிழர்களுக்கு அழிவு ஏற்பட்டது. வரப்போகும் தேர்தல்களில் கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியை இழக்கப் போகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மாவோயிஸ்ட்டுகள் என்ற பெயரில் பழங்குடி மக்களை திசைதிருப்பி ஆயுதங்கள் மூலம் அரசாங்கத்தை கைப்பற்ற நினைக்கிறார்கள். "வளர்ச்சி இல்லை' அதனால் ஆயுதம் ஏந்துகிறார்கள் என்று மாவோயிஸ்டுகளை எழுத்தாளர்கள் ஆதரிக்கிறார்கள். அமைதி இருந்தால் தான் வளர்ச்சி ஏற்படும் என்பதை அவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள். தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் பல்வேறு நல திட்டங்கள் மத்திய அரசின் நிதி உதவியுடன் தான் செயல்படுத்தப்படுகின்றன. உதாரணமாக தமிழகத்தில் ஓடும் சொகுசு பஸ்கள் அனைத்தும் மத்திய அரசின் ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டதாகும். இது பற்றி காங்கிரஸ்காரர்கள் மக்களிடம் பிரசாரம் செய்யாததால் மாநில அரசு பெயரை தட்டிச் செல்கிறது. அதற்காக நான் திமுகவைக் குறைகூறவில்லை. நாம்தான் நமது சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.முன்னாள் எம்.பி. வள்ளல்பெருமான், சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே. சிரஞ்சீவி  உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

என்றைக்குத்தான் காங்கிரசுக்கட்சி தமிழ்நாட்டிற்கு ஏற்ற கட்சியாகச் செயல்பட்டுள்ளது? பிற மாநிலக் காங்கிரசார் தங்களை மலையாளிகளாகவும் தெலுங்கர்களாகவும் கன்னடர்களாகவும் மராத்தியர்களாகவும் வங்காளிகளாகவும் குசராதியர்களாகவும் இந்தி மொழியினராகவும் மொழிவழித் தேசிய அடையாளத்துடன் செயல்பட்டும் மாநில உரிமைகளுக்காகக் கட்சி வேறுபாடின்றிக் குரல் கொடுத்து மத்தியக் காங்கிரசைத் தம் வழிக்கு இழுத்தும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். இங்கோ மத்திய அடிமையாகத் திகழ்கிறார்கள். ஈழத் தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று விட்டு இன அழிப்பு முயற்சிக்கு இன்றும் துணை நின்று கொண்டு தியாகம் செய்ததாகக் கதை யளப்பதை நிறுத்தி மண்ணின் மைந்தர்களாக் காங்கிரசு செயல்படாதவரை அதற்குத் தமிழ் நாட்டில் எதிர்காலம் இல்லை. உலகத்தமிழர் நலனுக்காக் காங். திருந்தும் வாய்ப்பில்லை. எனவே தமிழ் தமிழர் நலன் காக்கப்பட அக்கட்சி மறைந்தொழிவதே நன்று. மத்திய அரசு நிதியுதவியில் காங்கிரசு அரசுகள் செய்யாதவற்றைத் தமிழக அரசு செய்யும் பொழுது அச்சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் அவர்கள்தாம் என்பதையும் காங். உணர வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/19/2010 6:22:00 AM
சபாஷ் குமார.
By krishnaswami
8/19/2010 6:11:00 AM
சர்ச்சைக்குரிய பிரச்னைகளில் கருத்து தெரிவிக்காமல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி விலகி நிற்கிறது. காரணம் உங்களுக்குள்ள ஈகோ பிரச்சினைதானே. முதலில் நீங்கள் ஒற்றுமையாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தலைவராக வேண்டும் என்ற எண்ணத்தையும் விட்டு விட்டு, கட்சி வளர கவனம் செலுத்துங்கள்.கோஷ்டி சேரவேண்டாம். கூட்டு முயற்சியில் பாடுபடுங்கள். எத்தனையோ மத்திய அரசுத்திட்டங்களை நிதி உதவியை ஏன் அந்தந்த மாநில அரசுகள் பயன் படுத்துவது இல்லை. தமிழகம் ஏதோ பாதி கொள்ளை அடித்தாலும், மீதியை செலவு செய்கிறதா இல்லையா?(உங்களுக்கும் அதில் லாபம் வருவதாலதானே நீங்கள் யாரும் இதுவரை வாயை திறந்தது இல்லை!)ஏன் அதைக்கண்டு பொறாமை பட வேண்டும்? இனியாவது உங்கள் கட்சி கட்டுக்கோப்பாக வளரும் என்ற எண்ணம் உண்டா?
By குமரா
8/19/2010 5:58:00 AM
A VERY BIG NATIONAL PARTY HAS GOT ALMOST ZERO IN RUNNING THE PARTY IN TAMILNADU;;KARTHIK'S DESIRE IS GREAT; WILL IT COME TRUE ?
By rangaraj
8/19/2010 5:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *+++++++++

பஞ்சாயத்து பண்ண வந்தவன், தன்னை கூப்பிட்டு வந்தவனின் எதிரியிடம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, உதவி கேட்டவனை அடித்த கதை எங்காவது நடந்தது உண்டா? தமிழனைக் காப்பாற்ற வந்த இந்திய அரசு, இலங்கை அரசுடன் ஒப்பந்தம் போட்டுகொண்டு தமிழனை தாக்கியது எந்த ஊர் நியாயம்? அதைவிடக் கேவலமானது, விடுதலைப்புலிகளுக்கு பிரேமதாசா ஆயுத உதவி செய்தது, IPKF உடன் போராட. கடைசியில் இந்தியா யாருக்காக இலங்கையில் யுத்தம் நடத்தியது? இந்திய வெளியுறவுக்கொள்கை உலகநாடுகளின் கேலிக்கு ஆளாகியது தான் உண்மை. இன்றும் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை தவறான பாதையில் தான் செல்கிறது. இலங்கை, பர்மா (மியான்மர்) போன்ற மனிதத்தை மிதிக்கின்ற நாடுகளுக்கு துணை போகிறது. மதுரைக்காரன்
By மதுரைக்காரன்
8/19/2010 11:11:00 PM
கார்த்திக் அவர்கள் செய்தி தாள்கள் படிக்கும் பழக்கம் அற்றவர் என்பது அவரது மேடைப்பேட்சில் இருந்து தெரிகிறது. மாவோயிஸ்டுகள் யார் மார்க்சிஸ்டுகள் யார் என்ற வித்யாசம் கூட தெரியாமல் பேசுகிறார் கார்த்திக். மேற்கு வங்கத்தில் மம்தா பநேர்ஜீயை தவிர்த்து அகில இந்திய அளவில் எந்த ஒரு அரசியல் கட்சியும் மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததில்லை. மாவோயிஸ்ட் இயக்கம் கார்த்திக் அவர்களது உள்துறை அமைச்சர் தந்தை சிதம்பரத்தால் தடை செய்யப்பட்ட இயக்கமாக பிரகடனபடுத்த பட்டுள்ளது என்பதை அவருக்கு தெரியவில்லை போலும். கார்த்திக் போன்ற செல்வாக்கான அரசியல் தலைவர்களுக்கு பல விழாக்களில் அரசியல், சமூகம், மற்றும் இலக்கியம் சார்ந்த நூல்கள் பரிசாக வழங்க பட்டு வருகின்றனர் அதை அவர் தலைக்கு வைத்து தூங்குகிறார் போலும்! கார்த்திக் அவர்களே இந்த அறியாமையின் அரங்கேற்றத்தை இனியும் தொட்ரவிடமால் பார்த்து கொள்வீர்களாக !
By தமிழ் கிறுக்கன்
8/19/2010 5:53:00 PM
Dear Thiru Karthi, Congress Party has never behaved as a party of Tamil Nadu, after Sri. Kamaraj. Following are the evidences. - Smt Indira Gandhi's Congress in 1971, did not contest a single assembly constituency for a bargain on a large share of Praliamentary seats. Was it fair? - Sri Rajiv Gandhi's Peace treaty for Lankan problem was fraudulently implemented in favour of Sinhalese. IPKF faught against Tamils instead of brokering peace with them. IPKF plotted to kill Prabhakaran, a signatory for peace treaty. Was it right? - Congress banned LTTE as a terrorist organisation, and forced other countries also to do likewise. But did they develop/support any other tamils group in its place? Was it fair to orphan Tamils this way? - An LTTE supporter plotted to kill Rajiv Gandhi. Is it fair to take your revenge on all Srilankan Tamils (a-la Sikh Massacre in New Delhi)? - When Congress had a very good chance of fighting assembly electiona alone along with the support of Rajnikanth, it
By Nagarajan
8/19/2010 4:23:00 PM
மாவோயிஸ்ட்க்கு ஆதரவாக பேசுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் சொன்னீங்க? கார்த்திக் : "ம்.. அது போன மாசம்"
By சிர்ப்பு நடிகர் வடிவேலு
8/19/2010 2:51:00 PM
LONG LIVE KALAIGER AYYA! LONGLIVE THANGABALU!
By SUBBU IYER
8/19/2010 2:00:00 PM
மனிதருள் மாணிக்கம் நேருவின் கட்சிகாரர் திரு.கார்த்திக் இங்ஙனம் பேசுவது நம்து இந்திய பண்பாட்டின் அடையாளமான மனிதநேயம் எங்கே? என்னுடைய பேச்சை கேட்கவில்லை அதனால நீங்கள் அழிந்து போங்கள்.ஈழத் தமிழர்களே நீங்களும் சேர்ந்து அழிந்து போங்கள்.அதனால்தான் ஆயுத உதவியும் செய்தோம்.(நல்ல மனப்பாங்கு)நமது பாரத நாட்டின் பண்பாடு,காலாசாரம் இந்து மதத்தின் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருக்கிறது.அதன்படி மன்னிக்கும் குணம்,கஷ்ட்டதில் இருப்பவருக்கு உதவும் ஒரு COMPASSION உணர்வு உங்களுக்கு இல்லை.ஆனால், இதன்மூலம் நாங்கள் ஆட்சி செய்யவிலை BUSINESS தான் பண்ணுகிறோம் என்று ஒத்துக்கொண்ட உங்கள் நேர்மையை பாரட்டுகிறேன்.
By Nallan
8/19/2010 1:51:00 PM
இலக்குவனார் திருவள்ளுவனின் கருத்தும், வீரகணபதியின் கருத்தும் மிகவும் சரியானவை.
By K Rajan
8/19/2010 1:00:00 PM
காங்கிரஸ் என்ற கட்சியில் இருப்பதற்காக முதலில் வெக்கப்படவேண்டும். தமிழகத்தில் இருந்து கொலைகார காங்கிரஸ் கட்சியை துடைத்து தூர எறிய வேண்டும். காங்கிரஸ் தமிழி ன விரோத கட்சி. அதில் இருப்பபோர் துரோகிகளே.
By Unmai
8/19/2010 9:02:00 AM
Highly idiotic people, These people can't be changed. Throw them in dustbin. Can live in only Day Dreams. Congress can never come to power in Tamil Nadu.
By DS
8/19/2010 8:59:00 AM
காங்கிரஸ் நண்பர்களே! தனிதத்ு நின்றால் ஒரு வார்டில் கூட தமிழ்நாட்டில் ஜெயிக்க முடியாது. மானங்கெட்ட திமுகவும், அறிவுகெடட் அதிமுகவும் உங்களை கைவிட்டுவிட்ட நாறிப்போய்டுவிங்க. தயவு செய்து திமுகவும், அதிமுகவும் பாமகவை கைவிடுவது போல் இரண்டு முறை தைரியாமாக ஒதுக்கி விடுங்க. இந்த தமிழ்நாட்டு காங்கிரஸை பீத்க்கண்ணாடிப்போட்டுத்தான் தேடனும்.தயவு செய்து சிந்தியுங்கள் திமுகவும்,அதிமுகவும். ந்னறி
By ஆண்டவன்
8/19/2010 8:30:00 AM
Adei Adei.. don't tell lot of lies da... Even GOD can't tolerate this... You people are the murderes da... How many people were killed because of you? Then one more thing? How you did control you laugh while talking this? Your party is not only unfit to TN, even for entire India.. Please correct your statements...
By Sarav
8/19/2010 7:48:00 AM
மத்திய அரசு நிதி மத்திய அரசு நிதி சொல்லுறீங்களே..மத்திய அரசு என்ன சகார பாலைவனத்திலா இருக்கிறது. மத்திய அரசில் திமுகவும் அங்கம் என்பதை மறந்து விட்டீர்களா? மேலும் அதிமுக இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்திருக்கிறது. அப்போதும் மத்திய அரசும் இருந்திருக்கிறது. அப்போது எல்லாம் எந்த உருப்படியான திட்டமும் தமிழகம் பெற வில்லையே ஏன்? காரணம் அதிமுக அரசின் கையலாகாத நிலை. திமுக அரசுதான் உறவுக்கு கைகொடுக்கிறது, அதே சமயம் உரிமைக்கும் குரல் கொடுத்து நல்ல நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வருகிறது. அதனால்தான் தமிழ்நாடும் வளர்ச்சிப்பாதையில் வெற்றிநடை போடுகிறது. திமுக அரசு பெயர் வாங்கிறது என்றால் செய்கிறார்கள் பெயர் வாங்கிகிறார்கள். இதில் பொறாமைபட வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை.
By வீரகணபதி
8/19/2010 7:34:00 AM
"ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்றிருந்தால் தமிழர்களுக்கு சுயாட்சி கிடைத்திருக்கும்". டேய் முட்டாள் கார்த்திக் இதற்கு பதில் சொல்லடா ஏன் இலங்கை தமிழர் ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை ஏற்றக வேண்டும்? நான் சொல்லுகிறேன் "நீ காங்கிரஸ் கட்சி விட்டு ஓடி போய்விடு" என்றால் நீ ஓடி போய்விடுவாயா.. அப்படி ஓடவிட்டால் நான் உன்னை அடிக்கலாமா... என் பேச்சை கேட்டகாமல் அப்படி அடி வாங்கியபின் நீ என் பேச்சை கேட்டு இருந்திருந்தால் அடி வாங்கமால் தப்பித்து இருக்கிலாம் என்று நான் சொல்லாமா.... முட்டாள் கார்த்திக் தமிழ் மக்களை "முட்டாள்" என்று நினைக்க வேண்டாம்...
By appavi
8/19/2010 6:44:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக