வெள்ளி, 18 டிசம்பர், 2009

ஞ்​சம் புகுந்த தமி​ழர்​களை குடி​ய​மர்த்த ஒப்​பந்​தம்:​ ஆஸ்​தி​ரே​லியா முடிவு



மெல் ​போர்ன்,​​ டிச:​17: ஆஸ்​தி​ரே​லி​யா​வில் தஞ்​சம் புகுந்த இலங்​கைத் தமி​ழர்​களை குடி​ய​மர்த்த நியூ​சி​லாந்து,​​ கனடா,​​ நார்வே நாடு​க​ளு​டன் ஒப்​பந்​தம் செய்ய உள்​ள​தாக தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.​ இதற்​காக அமெ​ரிக்​கா​வி​டம் உதவி கோரப்​பட உள்​ள​தா​கத் தெரி​கி​றது.​ கடந்த அக்​டோ​பர் மாதம் ஆஸ்​தி​ரே​லி​யா​வின் கடல்​ப​கு​தி​யில் தஞ்​சம் கோரி 78 இலங்​கைத் தமி​ழர்​க​ளு​டன் வந்த படகு கவிழ்ந்​தது.​ இதில் வந்த 78 பேரை​யும் ஆஸ்​தி​ரே​லிய கடற்​ப​டை​யி​னர் காப்​பாற்​றி​னர்.​ இவர்​க​ளைக் குடி​ய​மர்த்​து​வ​தற்கு நியூ​சி​லாந்து,​​ கனடா,​​ நார்வே நாடு​கள் ஆர்​வம்​காட்டி வரு​கின்​றன.​ ஆஸ்​தி​ரே​லி​யா​வில் புக​லி​டம் கோரி பட​கில் வரும் இலங்​கைத் தமி​ழர்​க​ளின் எண்​ணிக்கை சமீ​ப​கா​ல​மாக அதி​க​ரித்து வரு​கி​றது.​ கடந்த செவ்​வாய்க்​கி​ழ​மை​கூட ஆஷ்​மோர் தீவில் 55 பேரு​டன் வந்த படகு கடற்​ப​டை​யி​ன​ரால் தடுத்​து​நி​றுத்​தப்​பட்​டது.​ ​ பட​கில் வந்​த​வர்​கள் ஆஸ்​தி​ரே​லி​யா​வில் தஞ்​சம் புக வந்​த​தா​கத் தெரி​வித்​த​னர்.​ அவர்​கள் கிறிஸ்​து​மஸ் தீவில் தங்க வைக்​கப்​பட்​டுள்​ள​னர்.​ ​ இது​போல் இந்​தாண்​டில் மட்​டும் 55 பட​கு​கள் இலங்​கைத் தமி​ழர்​க​ளு​டன் வந்​துள்​ளன.​ இப்​ப​ட​கு​க​ளில் வந்​த​வர்​க​ளின் எண்​ணிக்கை 1498 என்று ஆஸ்​தி​ரே​லி​யா​வின் குடி​யேற்​றத்​துறை செய்​தித்​தொ​டர்​பா​ளர் தெரி​வித்​தார்.​ இவர்​க​ள​னை​வ​ரும் ஆஸ்​தி​ரே​லி​யா​வில் போலீஸ் பாது​காப்​பு​டன் கூடிய அக​தி​கள் முகா​மில் தங்​க​வைக்​கப்​ப​டு​வர்.
கருத்துக்கள்

மனித நேயம் மிக்க

ஆசுதிரேலியா அரசிற்குப் பாராட்டுகள்.

தமிழ் ஈழம் உரிமையுடன் திகழவும்

தன் ஒத்துழைப்பை நல்கட்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By ilakkuvanar thiruvalluvan
12/18/2009 7:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக