வெள்ளி, 18 டிசம்பர், 2009

அருணா சாய்​ரா​முக்கு இசைப்​பே​ர​றி​ஞர் விருது



சென்னை, ​​ டிச.17: தமிழ் இசை சங்​கத்​தின் சார்​பில் இசைக்​க​லை​ஞர் அருணா சாய்​ரா​முக்கு "இசைப்​பே​ர​றி​ஞர் விருது' வழங்​கப்​ப​டு​கி​றது.​இது ​கு​றித்து தமிழ் இசை சங்​கத்​தின் தலை​வர் முன்​னாள் நீதி​பதி பு.ரா.கோகு​ல​கி​ருஷ்​ணன்,​​ மதிப்​பி​யல் செய​லர் ஏ.சி.முத்​தையா ஆகி​யோர் நிரு​பர்​க​ளி​டம் கூறி​ய​தா​வது:​​ தமிழ் இசை சங்​கத்​தின் சார்​பில் குர​லிசை வல்​லு​னர்​கள்,​​ கருவி இசை வல்​லு​னர்​கள்,​​ ஓது​வார்​க​ளில் சிறந்த ஒரு​வரை தேர்ந்​தெ​டுத்து ஆண்​டு​தோ​றும் இசைப்​பே​ர​றி​ஞர் விருது வழங்​கப்​பட்டு வரு​கி​றது.​ இந்த ஆண்​டிற்​கான விருது இசைக்​க​லை​ஞர் அருணா சாய்​ரா​முக்கு வழங்​கப்​பட உள்​ளது.​​டிசம்​பர் 21}ம் தேதி ராஜா அண்​ணா​மலை மன்​றத்​தில் மாலை 6 மணிக்கு நடை​பெ​றும் 67}ம் ஆண்டு இசை விழா​வின் தொடக்க விழா​வில் உச்ச நீதி​மன்ற நீதி​பதி பி.சதா​சி​வம் கலந்து கொண்டு விருதை வழங்கி கௌ​ர​விக்​கி​றார்.​​ இந்த விரு​து​டன் இசைப்​பே​ர​றி​ஞர் பட்​டம்,​​ பொற்​ப​தக்​கம்,​​ வெள்​ளிப்​பேழை மற்​றும் ராஜா சர் அண்​ணா​மலை செட்​டி​யா​ரின் மகள் லட்​சுமி ஆச்​சி​யின் ரூ.10 ஆயி​ரம் பொற்​கி​ழி​யும் வழங்​கப்​ப​டும்.​​பண் இசை ஆராய்ச்சி கூட்​டம்:​​ கடந்த 60 ஆண்​டு​க​ளாக பண் இசை ஆராய்ச்​சிக் கூட்​டம் ஒவ்​வொரு ஆண்​டும் டிசம்​பர் 22}ம் தேதி முதல் 25}ம் தேதி வரை நடை​பெற்று வரு​கி​றது.​இதில் தமி​ழ​கத்​தைச் சேர்ந்த 50}க்கும் மேற்​பட்ட ஓது​வார்​க​ளும்,​​ கருவி இசை​யா​ளர்​க​ளும்,​​ குர​லி​சை​யா​ளர்​க​ளும்,​​ தமிழ் அறி​ஞர்​கள்,​​ பல்​க​லைக்​க​ழ​கப் பேரா​சி​ரி​யர்​க​ளும் கலந்து கொள்​கின்​ற​னர்.​பண் இசைப் பேர​றி​ஞர் விருது:​​ பண் ஆராய்ச்​சி​யின் மணி விழா​வான ​(60}ம் ஆண்டு)​,​​ இந்த ஆண்​டில் "பண் இசைப் பேர​றி​ஞர் விரு​தினை' முதன்​மு​றை​யாக தேவார திரு​வா​சக வல்​லு​ந​ரான முத்​து​கந்​த​சாமி தேசி​க​ருக்கு வழங்​கப்​ப​டு​கி​றது.​ டிசம்​பர் 22}ம் தேதி ராஜா அண்​ணா​மலை மன்​றத்​தில் தொடங்​கும் பண் ஆராய்ச்சி கூட்​டத்​தில் இந்த விருது வழங்​கப்​ப​டும் என்று தெரி​வித்​த​னர்.
கருத்துக்கள்

சிறந்த பிற மொழிப் பாடகர் என்பதற்காக அரசியல் செல்வாக்கால் இவருக்கு விருது கொடுப்பதால் தமிழிசைக்கே அவமானம்! அவமானம்! அவமானம்! அரசில் செல்வாக்கு மிக்க அருணா சாயிராம் வேறு அமைப்பின் சார்பில் எத்தகைய உயர்ந்த விருதைப் பெற்றாலும் ஏற்கத் தக்கதே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/18/2009 4:52:00 AM

அருணா சாயிராம் சிறந்த இசைவாணர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், மரக்கறி உண்போர் பேரவை சார்பில் சிறந்த இறைச்சி சமைப்போருக்கு விருது கொடுத்து ஊக்குவிப்பதுண்டா? வள்ளலார் பேரவை சார்பாக கோட்சேக்கு விருது கொடுத்தால் என்ன சொல்வது? தமிழிசைச் சங்கம் தமிழிசை வாணருக்கு மட்டுமே விருது கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும். ஏதோ சில தமிழ்ப்பாடல்களும் பாடுகிறார் என்பதற்காக பிற மொழிப்பாடல்களையே பரப்பி வரும் அருணா சாயிராமிற்கு விருது வழங்குவது முற்றிலும் சரியல்லல. தமிழ்நாட்டு அரசின் இசைக்கல்லூரிகளுக்கு அறிவுரையாளராக இருக்கிறாரே என எண்ணலாம். பதவியேற்ற இத்தனை ஆண்டுகளில் ஏதோ விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில விழாக்களுக்ககுத்தான் வந்துள்ளாரே தவிர தனக்குரிய கடமையைச் சிறிதும் ஆற்றியதில்லை. மேலும் தமிழ் நாட்டிலேயே இல்லாமல் - ஏன், இந்தியாவிலேயே இல்லாமல்- தனக்குரிய மதிப்பூதியத்தை வாங்கி மோசடி செய்து வருகிறார். சிறந்த பிற மொழிப் பாடகர் என்பதற்காக அரசியல் செல்வாக்கால் இவருக்கு விருது கொடுப்பதால் தமிழிசைக்கே அவமானம்! அவமானம்! அவமானம்! அரசில் செல்வாக்கு மிக்க அருணா சாயிராம் வேறு அமைப்பின் சார்பில் எத்

By Ilakkuvanar Thiruvalluvan
12/18/2009 4:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக