வியாழன், 17 டிசம்பர், 2009

மனித உரிமை மீறா​தீர்:​ இலங்​கைக்கு அமெ​ரிக்கா எச்​ச​ரிக்கை



வாஷிங் ​டன்,​​ டிச.16:​ இலங்​கை​யில் நடை​பெ​றும் மனித உரிமை மீறல் நட​வ​டிக்​கை​க​ளுக்கு முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும் என்று இலங்கை அரசை அமெ​ரிக்கா வலி​யு​றுத்​தி​யுள்​ளது.​ முகாம்​க​ளில் உள்​ள​வர்​களை அவர்​க​ளது இடத்​தில் குடி​ய​மர்த்​து​மாறு ராஜ​பட்ச அரசை அமெ​ரிக்கா கேட்​டுக் கொண்​டுள்​ளது.​​ ​ ​ மனித உரி​மை​கள் மீறப்​ப​டக்​கூ​டாது என்று இலங்கை அரசை தொடர்ந்து வலி​யு​றுத்தி வரு​கி​றது.​ அத்​து​டன் பத்​தி​ரிகை சுதந்​தி​ரம் காக்​கப்​பட வேண்​டும் என்​றும் தமி​ழர்​க​ளி​டம் உப​யோ​க​மான பேச்​சு​வார்த்தை நடத்தி தமி​ழர்​கள் மற்​றும் பிற சிறு​பான்மை இனத்​த​வ​ரி​டையே ஒற்​று​மையை ஏற்​ப​டுத்த முயல வேண்​டும் என வலி​யு​றுத்​தி​ய​தாக வெளி​யு​ற​வுத்​துறை துணை அமைச்​சர் பி.ஜே.​ குரோலி தெரி​வித்​தார்.​​ ​ சமீ​பத்​தில் தெற்கு மற்​றும் மத்​திய ஆசி​யா​வுக்​கான அமெ​ரிக்க வெளி​யு​ற​வுத்​துறை இணை அமைச்​சர் ராபர்ட் பிளேக் இலங்​கை​யில் சுற்​றுப் பய​ணம் மேற்​கொண்​டி​ருந்​தார்.​ அப்​போது இடம்​பெ​யர்ந்த மக்​களை விரை​வாக அவர்​க​ளது சொந்த இடங்​க​ளுக்கு அனுப்ப வேண்​டும் என்​றும் இலங்​கை​யில் அமைதி திரும்ப விரை​வான முயற்​சி​கள் எடுக்க வேண்​டும் என்​றும் வலி​யு​றுத்​தி​ய​தாக குரோலி தெரி​வித்​தார்.
கருத்துக்கள்

அமெரிக்காவே! நீ சிங்களத்திடம் அடி பணிவதால் வல்லரசும் அல்ல! தமிழர்களின் படுகொலைகளுக்குக் காரணமாக இருந்தமையால் நல்லரசுமல்ல! மனிதநேயம் மிகுந்த அமெரிக்கர்களே! உங்கள் அரசின் போக்கை மாற்றித் தமிழ ஈழத்திற்கு விரைவில் ஏற்பளிக்கச் செய்யுங்கள்! தம் நாட்டிற்கு வேண்டிய மறுவாழ்வுப் பணிகளைத் தமிழ் ஈழ அரசு செய்து கொள்ளும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/17/2009 3:34:00 AM

இதுவரை நடைபெற்ற மனிதப் படுகொலைகளுக்கு எதிராக எந்நடவடிக்கையும் எடுக்காமல் கிணற்றுத்தவளையாகக் கத்திக் கொண்டு மனிதஉரிமைக் காவலனாக அமெரிக்கா நடித்தது போதும். நாளும் பொழுதும் ஈவிரக்கமின்றிப் படுகொலைகளும் வதைகளும் புரிவோனிடம் ஒற்றுமையாக இருக்குமாறு உயிரிழந்தோர் குடும்பத்தாரிடமும் உறுப்பிழந்தோரிடமும் வதைபடுவோரிடமும் அறிவுரை கூறுவதுதான் மனித நேயமா? சீனாவின் பக்கம் சாயும சி்ங்களத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காகப் போலியாக மிரட்டிப் கொ்ணடிராமல் ஏதும் நடவடிக்கை எடுக்க இயலும் என்றால் எடுக்க வேண்டும். இல்லையேல் தமிழக அரசியல்வாதிகள் போல் அறிக்கை விட்டு ஏமாற்றாமல் அமைதி காக்க வேண்டும். கொலைகாரக் கும்பலைத் தண்டிக்காமல் அக்கும்பலால் வன்கொடுமைக்கு ஆளான குடும்பத்தாருக்கு மறுவாழ்வு தருமாறு கோரிக்கை விடுவது நகைப்பிற்குரியது அல்லவா? அமெரிக்காவே! நீ சிங்களத்திடம் அடி பணிவதால் வல்லரசும் அல்ல! தமிழர்களின் படுகொலைகளுக்குக் காரணமாக இருந்தமையால் நல்லரசுமல்ல! மனிதநேயம் மிகுந்த அமெரிக்கர்களே! உங்கள் அரசின் போக்கை மாற்றித் தமிழ ஈழத்திற்கு விரைவில் ஏற்பளிக்கச் செய்யுங்கள்! தம் நாட்டிற்கு வேண்டிய மறுவாழ்வுப்

By Ilakkuvanar Thiruvalluvan
12/17/2009 3:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக