சனி, 19 டிசம்பர், 2009

பொங்​க​லுக்​குள் சினிமா இல்​லாத புதிய சேனல்



விழுப் ​பு​ரம்,​​ ​ டிச.​ 18: ​ ​ சினிமா இல்​லாத நியூஸ் பிளஸ் என்ற புதிய சேனல் வரும் பொங்​க​லுக்கு செயல்​ப​டத் தொடங்​கும் என்று இந்​திய சமூக நீதி இயக்​கத்​தின் நிறு​வ​னர் பேரா​சி​ரி​யர் எம்.எஸ்ரா சற்​கு​ணம் தெரி​வித்​தார்.​இது குறித்து இவர் விழுப்​பு​ரத்​தில் வெள்​ளிக்​கி​ழமை நிரு​பர்​க​ளுக்கு அளித்த பேட்டி:​சி ​னிமா இல்​லாத புதிய சேனல் வரும் பொங்​க​லுக்​குள் தொடங்க உள்​ளோம்.​ இந்த சேன​லில் செய்​தி​கள் மற்​றும் மக்​க​ளுக்கு தேவை​யான,​​ அறிவை பெருக்​கிக் கொள்​ளக்​கூ​டிய தக​வல்​கள் வழங்​கப்​ப​டும்.​கி ​றிஸ்​த​வம் தொடர்​பான நிகழ்ச்சி தின​மும் 4 மணி நேரம் ஒளி​ப​ரப்​பா​கும்.​ இதற்கு விழுப்​பு​ரத்​தைச் சேர்ந்த பிர​பா​கர் ஜெய​ராஜ் நிர்​வாக இயக்​கு​ந​ராக இருப்​பார் என்றார்.​ ​பேட்​டி​யின்​போது இந்​திய சமூக நீதி இயக்​கத்​தின் ஒருங்​கி​ணைப்​பா​ளர் பிர​பா​கர் ஜெய​ராஜ் உட​னி​ருந்​தார்.
கருத்துக்கள்

பண்பாட்டைச் சீரழிக்கும் திரைப்படங்களைத் தவிர்ப்பதற்காகத் தொடங்கப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசையாகத் தெரியவில்லை. திரைப்படம் முதலானவற்றை வெறுக்கும் உணர்வு கொண்ட கிறித்துவ சமயப் பிரிவினர் பரப்புரைக்காகத் தொடங்கப்பட்டதாகத்தான் தெரிகின்றது. தமிழ்ப்பெயர் அல்லாத அலைவரிசைகளைத் தொடங்கத் தமிழ் நாட்டில் தடை விதிக்க வேண்டும். சன்,கே, என்றெல்லாம் ஆளும் குடும்பத்தினர் வைத்துள்ள பெயர்களை மாற்றினால்தான் தமிழ் வாழும். சமயப் பரப்புரைகளுக்கு இடம் கொடு்த்து விட்டுப் பின்னர் கட்டாயச் சமய மாற்றம் எனக் கரடியாய் கத்தினாலும் பயன் இல்லை என்பதையும் உணர வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/19/2009 4:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக