வெள்ளி, 27 செப்டம்பர், 2013

தன்­னார்­வத்­ தொண்டு புரிந்தேன்.

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_81324420130926233939.jpg

தன்­னார்­வத்­துடன் சேவை செய்தேன்!

கிரா­மங்­களில், எய்ட்ஸ் விழிப்­பு­ணர்வை ஏற்படுத்­தி­ய­தற்­காக, 196 நாடு­களின் சர்­வ­தேச எய்ட்ஸ் மாநாட்டில் பங்­கேற்ற, நித்­தி­யா­னந்தம்: நான், கோவை மாவட்­டத்தை சேர்ந்­தவன். பள்­ளியில் படிக்கும் போதே, சேவை செய்­வதில் ஆர்வம். நண்­பர்கள் உத­வி­யுடன், 2002ல், தியான பொது
சேவை மையம் துவங்கி, பல சமூக சேவை­களை செய்து வரு­கிறேன். கோவையில் உள்ள, 450க்கும் மேற்­பட்ட கிரா­மங்­களில், எய்ட்ஸ் மற்றும் குடும்­பக்­கட்­டுப்­பாடு விழிப்­பு­ணர்வு பிர­சா­ரத்தை, சிறப்­பாக செய்தேன். மாவட்ட ஆட்­சியர் உத­வி­யுடன், இரு­பாலர் சுய­உ­தவி குழுவை ஏற்­ப­டுத்தி, 30 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்­டோ­ருக்கு தொழிற்­ப­யிற்சி தந்து, வேலை­வாய்ப்­பையும் ஏற்­ப­டுத்­தினேன். சில மருத்­து­வ­மனை­களை ஒருங்­கி­ணைத்து, இல­வச மருத்­துவ முகாம் மூலம், முழு உடல் பரி­சோ­தனை மற்றும் கண் பார்­வை­யற்­ற­வர்­க­ளுக்கு அறுவை சிகிச்­சை­களை செய்தோம். குஜ­ராத்தில் நடந்த பூகம்­பத்தின் போது, 5 லட்ச ரூபாய் மதிப்­பி­லான மருந்­து­களுடன், நாங்கள் ஒரு குழு­வாக சென்று, ஆறு மாதங்கள் தங்கி சேவை செய்தோம். தமி­ழ­கத்தில், சுனாமி அதிகம் பாதித்த நாகை மற்றும் வேளாங்­கண்ணியில் தங்கி, பாதிக்­கப்­பட்­ட­வர்கள் பசி­யாற, உண­வு­களை பங்­கிட்டு கொடுக்கும் கிரா­மப்­பு­றங்­களில், எய்ட்ஸ் விழிப்­புணர்வை சிறப்­பாக செய்­த­தற்கு, 2012ல் வாஷிங்­டனில் நடந்த, 196 நாடுகள் பங்­கேற்ற சர்­வ­தேச எய்ட்ஸ் மாநாட்டில், பங்­கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்­தது. இம்­மா­நாட்டில், ஹிலாரி கிளிண்டன், உலக வங்கி தலைவர் என, பலர் பங்­கேற்­றனர். இந்த ஆண்டு, நியூ­யார்க்கில் உள்ள ஐ.நா., சபையில் நடந்த
மாநாட்டில், எய்ட்ஸ் தொடர்­பாக, 450 கிரா­மங்­களில் நான் செய்த விழிப்­பு­ணர்வு பற்­றிய ஆய்வு கட்­டு­ரையை சமர்ப்­பித்தேன். அதன் கார­ணமாக, உலக எய்ட்ஸ் அமைப்பின், தன் னார்வ தொண்டு நிறு­வன அங்­கீ­காரம் பெற்ற பணி­யா­ள­ராகும் வாய்ப்பை பெற்­றது, பெரு­மை­யாக உள்­ளது. என் சேவையை பாராட்­டிய சேலம் கலெக்டர், சிறந்த இளைஞர் விருது வழங்­கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக