புதன், 25 செப்டம்பர், 2013

முழுக் கவ­னத்­துடன் செயல்­ப­டுவேன்!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_81151620130924210033.jpg


முழு க் கவ­னத்­துடன் செயல்­ப­டுவேன்!

கால்­நடை மருத்­துவ த் தேர்வில், 8.68 கிரேடிங் பாய்ன்ட்கள் பெற்று, கவர்னர் ரோசய்­யா­விடம், 24 தங்க பதக்­கங்கள் பெற்ற,  இராசேசுவர் குமார் யோகி: நான், ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்­டத்தின், பாட்டன் கிரா­மத்தை சேர்ந்­தவன். தந்தை ஜக்­மோகன், ராஜஸ்­தானில் தொழில் செய்­கிறார். பள்ளி நாட்­களில், நேரம் கிடைக்கும் போதெல்லாம் தந்­தையின் தொழிலில் உத­வி­யதால், இரவு நேரங்­களில் மட்­டுமே, படிப்பில் கவனம் செலுத்த முடிந்­தது. என் சிறு வய­தி­லி­ருந்தே, படிக்கும் போது, படிப்­பிலும், விளை­யாடும் போது, விளை­யாட்­டிலும் என, செய்யும் செயலில் முழு கவனம் செலுத்­துவேன். கால்­நடை மருத்­துவம் படிப்­ப­தற்­காக, அகில இந்­திய அளவில் நடை­பெற்ற, நுழைவு தேர்வு எழு­தினேன்.
அதன் மூலம், நாமக்­கல்லில் உள்ள, கால்­நடை மருத்­துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறு­வனத் தில், இள­நிலை கால்­நடை மருத்­து­வத்தில், பி.வி.எஸ்.சி., பட்ட படிப்பில் சேர்ந்தேன். பல்­க­லையில் படிக்கும் போதே, அமெ­ரிக்­காவில் உள்ள, மிக்­சிகன் ஸ்டேட் யுனி­வர்­சிட்­டியில், ஏழு வாரங்கள் தங்கி, இன்­டர்ன்ஷிப் செய்யும் வாய்ப்பை, நன்கு பயன்­ப­டுத்­தினேன்.
தமிழ்­நாடு கால்­நடை மருத்­துவ அறி­வியல் பல்­கலை கழக பட்டப் படிப்பில், 8.68, கிரேடிங் பாயின்ட்கள் பெற்று, பல்­கலை கழக அளவில் முத­லிடம் பெற்றேன். மேலும், பல்­கலைக் கழக பட்­ட­ம­ளிப்பு விழாவில், தமி­ழக கவர்னரிடம், 24 தங்க பதக்­கங்கள் பெற்று சாதித்தேன். விழாவில் பங்­கேற்ற அனை­வரும், கர­வொலி எழுப்பி பாராட்­டி­யது, மன­திற்கு மகிழ்ச்­சி­யையும், முன்­னேற வேண்டும் என்ற உந்­து­த­லையும் தந்­தது.
தற்­போது, பல்கலை­யி­லேயே, கிராஜுவேட் அசிஸ் ­டென்ட்­டாக பணி­யாற்­றிய பின், ராஜஸ்தான் செல்ல விரும்­பு­கிறேன். ஏனெனில், என் சொந்த மாநில விவ­சா­யிகள் மற்றும் கால்­நடை வளர்ப்­போ­ருடன் பணி­யாற்றி, நேரடி அனு­பவம் பெற வேண்டும். அது, என் பிற்­கால கால்­நடை ஆராய்ச்­சிக்கு உதவும். கால்­நடை வளர்ப்பு தொடர்­பான விழிப்­பு­ணர்வை, விவ­சா­யி­க­ளிடம் ஏற்­ப­டுத்­து­வதே, என் அடுத்த இலக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக