செவ்வாய், 9 ஜூலை, 2013

காவல் படையில் மருத்துவப் பணி

காவல் படையில் மருத்துவப் பணி




இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கு என்றே பிரத்யேகமாக நிறுவப்பட்டதுதான் பி.எஸ்.எப்., எனப்படும் பார்டர் செக்யூரிடி போர்ஸ் ஆகும். இந்த படை இந்திய பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய படைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு 1965 முதல் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்தப் படைக்கு என்றே பிரத்யேகமான மருத்துவமனைகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் பாரா மெடிக்கல் காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள்: எல்லைப் பாதுகாப்புப் படையின் பாரா மெடிக்கல் பதவிக்கு எஸ்.ஐ., (ஸ்டாப் நர்ஸ்) - குரூப் பி பதவியில் 5 இடங்களும், ஏ.எஸ்.ஐ.,(பார்மஸிஸ்ட்)-குரூப் சி பிரிவில் 35 இடங்களும், ஏ.எஸ்.ஐ.,(ஓ.டி., டெக்னீசியன்) - குரூப் சி பிரிவில் 9 இடங்களும் நிரப்பப்படுகின்றன.
வயதுவரம்பு: பி.எஸ்.எப்.,பில் மேற்கண்ட பதவிகளுக்கான அதிகபட்ச வயது ஸ்டாப் நர்ஸ் பிரிவுக்கு 30-க்குள் இருத்தல் வேண்டும். இதர இரண்டு பிரிவுகளுக்கு 25-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: ஸ்டாப் நர்ஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 விற்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு நர்ஸிங் பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பை முடித்து மத்திய அல்லது மாநில நர்ஸிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பார்மஸிஸ்ட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் ப்ளஸ்டூவிற்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு பார்மஸியில் பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆப்ரேஷன் டெக்னிக் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் இதே போல் பிளஸ் 2 படிப்பு முடித்து அதன் பின்னர் ஓ.டி.,யில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
உடற்தகுதிகள்: இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் குறைந்த பட்சம் 165 செ.மீ.,ரும், பெண்கள் 150 செ.மி.,யும் பெற்றிருக்க வேண்டும். முழுமையான உடல் தகுதிகளை இணைய தளத்தைப் பார்த்து அறிந்து கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்: பி.எஸ்.எப்.,பின் துணை மருத்துவ பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.50/-க்கான டி.டி.,யை 15 மண்டலங்களில் ஏதாவது ஒன்றில் மாற்றத்தக்க வகையில் எடுத்து அனுப்பலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bsf.nic.in/doc/recruitment/r49.pdf  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.07.2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக