திங்கள், 9 ஜூலை, 2012

சிறுநீரை க் குடிக்கவைத்து ச் சிறுமிக்கு த் துன்புறுத்தல்

சிறுநீரை க் குடிக்கவைத்து ச் சிறுமிக்கு த் துன்புறுத்தல்

First Published : 09 Jul 2012 03:07:42 AM IST


சாந்திநிகேதன் (மேற்கு வங்கம்), ஜூலை 8:÷மேற்கு வங்க மாநிலத்தில் தூங்கும்போது படுக்கையில் சிறுநீர் கழித்த 5-ம் வகுப்பு சிறுமியை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்த பெண் விடுதிக் காப்பாளர் மீது போல்பூர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  சாந்திநிகேதனில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பள்ளியின் விடுதியில் இச்சம்பவம் நடைபெற்றது.  படுக்கையில் சிறுநீர் கழிக்கும் தவறான பழக்கத்தை மாற்றுவதற்காக இதைச் செய்ததாக விடுதி காப்பாளர் கூறியுள்ளார். சிறுநீர் கழிக்கப்பட்டிருந்த படுக்கை விரிப்பைப் பிழிந்து சிறுமியின் வாயில் கட்டாயப்படுத்தி அவர் ஊற்றியதாக விசாரணையில் தெரியவந்தது.  இந்தச் சம்பவம் குறித்து குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அளிக்க முடிவு செய்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக