வியாழன், 10 மே, 2012

இறுதிப் போர் நடந்தபோது தஞ்சம் அடைந்ததாக கூறப்படும் 1 1/2 லட்சம் ஈழத் தமிழர்கள் கதி என்ன?

இறுதிப் போர் நடந்தபோது தஞ்சம் அடைந்ததாக கூறப்படும் 1 1/2 லட்சம் ஈழத் தமிழர்கள் கதி என்ன?: புதிய குற்றச்சாட்டு
இறுதிப் போர் நடந்தபோது தஞ்சம் அடைந்ததாக கூறப்படும் 1 1/2 லட்சம் ஈழத் தமிழர்கள் கதி என்ன?: புதிய குற்றச்சாட்டு
கிளிநொச்சி, மே.10-
 
ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டது இனப் படுகொலையே எனும் குரல்கள் வலுத்துவருகிறது. 2008-ம் ஆண்டு கிளிநொச்சி, முல்லைத் தீவில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை புள்ளி விவரத்துக்கும், இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட 2009-ம் ஆண்டு வன்னிப் போரில் இருந்து வெளியேறியவர்களின் மக்கள் தொகை புள்ளி விவரத்துக்கும் இடையில் காணப்பட்ட இடைவெளி வித்தியாசத்தினை அடிப்படையாக வைத்து 1,46,679 தமிழர்களின் நிலை என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து இலங்கை மீது பல சர்வதேச நாடுகள் கேள்வி எழுப்பியுள்ளன. ராஜப்பு ஜோசப்பு என்பவர் தகுந்த ஆவணங்களுடன் முன்வைத்த இவ்விஷயம் பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் கவனத் தினைப் பெற்றிருந்ததோடு, பல நாடுகள் இது தொடர்பாக தங்களது கருத்துக்களை வெளியிட்டிருந்தன. இதேவேளை ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில், 2009-ம் ஆண்டில் 5 மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

1 கருத்து:

  1. இனப்படுகொலை பற்றிய கேள்விகள் முடிவது எப்போது? கொலை வெ றியர்களும் கொலைக்கூட்டாளிகளும் நடுத்தெருவில் சாகடிக்கப்படும் தண்டனை பெறுவது எப்போது? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

    பதிலளிநீக்கு