ஞாயிறு, 6 மே, 2012

அறநெறிப் பாடல் பயிற்சிப் பட்டறை தொடக்கவிழா

அறநெறிப் பாடல் பயிற்சிப் பட்டறை தொடக்கவிழா(ஒளிப்படங்கள் )

நா.மோகன்ராசு
நட்பு இணைய இதழ் : பதிவு செய்த நாள் : 05/05/2012


தமிழ்க்காப்பு கழகம் சார்பில் சிறுவர்சிறுமியருக்குத்  திருக்குறள் முதலான நீதி நெறிப்பாடல்களை பயிற்றுவிக்கும் அறநெறிப் பாடல் பயிற்சிப் பட்டறை  (03  05  2012) அன்று தொடங்கப்பட்டது. தாய்த்தொழில்நுட்பகுழும  மேலாண் இயக்குநர் திரு . அண்ணாமலை அவர்கள் தலைமை தாங்கிப் பேசினார்.
ஒருங்கிணைப்பாளர் திரு நா.மோகன்ராசு வரவேற்புரை ஆற்றினார். திருமதி ஈரோடு தமிழ்ச்செல்வி, திரு அசய்கார்த்திக், திரு ச.முத்துகிருட்டிணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்   பட்டறையின நோக்கம், பயன் முதலியன பற்றிச் சிறப்புரை ஆற்றித் தொடக்கி வைத்தார். சாந்தோம் மேனிலைப்பள்ளித் தமிழாசிரியர் திரு எலியட்சு வாழ்த்தி நிறைவுரை ஆற்றினார். திரு குமார் நன்றி நவின்றார்.

மே 3 முதல் 18  ஆம் நாள் வரை பதினைந்து நாட்கள்  நடக்கும் இப்பயிலரங்கம்  காலை 8 மணி முதல் 10 வரை  நடைபெறும்.  இறுதி நாளன்று மாணவர்களை மேடையேற்றி அவர்களுடைய திறமையை வெளிக்கொணர்ந்து சான்றிதழும் வழங்கப்படும் . மாணவர்கள் கோடை விடுமுறையை நன்கு பயன்படுத்திகொள்ளவும்  அவர்களுடைய தமிழார்வத்தை வளர்க்கும் விதமாகவும்  மனப்பயிற்சித் திறனை மேம்படுத்தும் நோக்கிலும் அறநெறியில் வாழச் செய்ய வழிகாட்டவும் இப்பயிலரங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக