அனைவருக்கும் வணக்கம். வரும்  சித்திரை 11, 2047 / ஏப்பிரல் 24 இரவு 8:30 முதல் 9:30 வரை (கிழக்கு நேரம்)

இலக்கியக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும். அதோடு தங்கள் நண்பர்களுக்கும் இந்த நிகழ்வைப் பகிர்ந்து அவர்களும் பங்குபெற்றுப் பயனடையச்செய்யவும்.

சொற்பொழிவு:- “தொல்காப்பியத்தில் தமிழிசை”.
வழங்குபவர்: முனைவர் இராச.கலைவாணி

சித்திரை 11, 2047 / ஏப்பிரல் 24-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
Date:  Chithirai 11, 2047 April 24, Sunday at 8:30 pm ET
நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:30 மணிவரை [ET]
(கலந்துரையாடல் நேரம்: 20 மணித்துளிகள்)
பல்வழி அழைப்பு (By Conference Call)
Dial-in Number: (641) 715-3670
Access Code: 873905#

பேராசிரியர் முனைவர்  இராச. கலைவாணி கோயம்புத்தூர் அவினாசிலிங்கம் பல்கலைகழக இசைத்துறையில் 16 ஆண்டுகள் இணைப்பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்; தற்பொழுது மயிலாடுதுறையிலுள்ள ஏழிசை இசை ஆய்வகத்தின் இயக்குநராகப் பணியாற்றுகிறார்; சென்னையிலிருந்து பல்வழி அழைப்பு வழியாக நம்முடன் பேசவிருக்கிறார்.
    நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே இந்த இலக்கியக் கூட்டத்தில் பல்வழி அழைப்பின் வாயிலாகக் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம். அம்மா அவர்கள் தொடர்ந்து இசை ஆய்வுகள் நடத்தி வருகிறார்கள்.

www.youtube.com/watch?v=dBNaHIb-dc0

என்ற இணைப்பில் அம்மையாரின் சொற்பொழிவு கேட்கலாம்
நன்றி.   
பேரவை இலக்கியக்குழு
முத்திரை- வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை :muthirai_fetna,