வெள்ளி, 6 செப்டம்பர், 2013

புதிய மின்வாரியக் கட்டண முறை

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_79686020130905232428.jpg

 புதிய மின்வாரியக் கட்டண முறை

புதிய இ.பி., பில்லிங் சிஸ்டம்!
ஜி.எஸ்.எம்., நெட்வொர்க் மூலம், தானியங்கி முறையில் மின் அளவை கணக்கிட்டு, கட்டணம் வசூலிக்கும், இ.பி., பில்லிங் சிஸ்டம் உருவாக்கிய, மாணவி கீதா
: நான், புதுச்சேரியை சேர்ந்தவள். மயிலம் பொறியியல் கல்லூரியில், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படிக்கிறேன். மின்சார வாரியம், வாடிக்கையாளர்களின் மின் மீட்டரிலிருந்து மின் அளவை கணக்கிட்டு, அதற்கான கட்டணத்தை வசூலிப்பதற்கு, பல கஷ்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இவ்வசூல் முறையால், பொது மக்களும் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். மின்சார வாரியம் மற்றும் பொது மக்களின் பணியை எளிமையாக்க, தானியங்கி முறையில் மின் அளவை கணக்கிட்டு, கட்டணம் வசூலிக்கும், இ.பி., பில்லிங் முறையை, நண்பர்கள் உதவியுடன் உருவாக்கினேன். பயன்பாட்டில் உள்ள டிஜிட்டல் இ.பி., மீட்டரில், கூடுதலாக, மொபைல் போனில் பயன்படுத்தும், சிம் கார்ட், மைக்ரோ கன்ட்ரோலர் சிப், ரிலே சுவிட்ச், பஸ்சர் அலாரம் ஆகியவற்றைப் பொருத்தினேன். மின் மீட்டரின் நெட்வொர்க்கை, இ.பி., அலுவலகத்தில் உள்ள, நெட்வொர்க் சர்வருடன் இணைத்தேன். இ.பி., அலுவலக சர்வர் மூலம், அன்று எந்த பகுதி மின் மீட்டரில், மின் அளவை கணக்கிட வேண்டுமோ, அதற்கு, ஜி.எஸ்.எம்., நெட்வொர்க் மூலம் தகவல் அனுப்பினால், உடனே, மீட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் மின் அளவை, துல்லியமாக தெரிவிக்கும். சர்வர், அத்தகவல் மூலம், மின் கட்டணத்தை கணக்கிட்டு, வாடிக்கையாளரின் மொபைலுக்கு கட்டணம் குறித்த தகவலை, எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பும்.
வாடிக்கையாளர், தன் வங்கி கணக்கு எண்ணை, இ.பி., அலு வலகத்தில் முறைப்படி சமர்ப்பித்தால், வாடிக்கையாளர் சம்மதத்துடன், வங்கி கணக்கிலிருந்து சரியான மின் கட்டணம், "டெபிட்' செய்யப்படும். இப்புதிய தொழில்நுட்பத்தால், சில மணி நேரத்திலேயே, மின் அளவு கணக்கிடப்பட்டு, வாடிக்கையாளரிடமிருந்து கட்டணமும் வசூலித்து விடலாம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டணம் செலுத்தாதவரின், மின் இணைப்பு தானாக துண்டிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக