ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

இலடாக்கின் மறுபக்கம்...

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_79290420130831194252.jpg 
இலடாக்கின் மறுபக்கம்...


இலடாக்
நம் நாட்டின் வடக்கு எல்லையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குட்பட்ட தனி மாவட்டமாக விளங்குகிறது.
சீனாவின் ஊடுருவல் காரணமாக கடந்த மாதம் முழுவதும் நம் ஆட்சியாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்திய மலைப்பிரதேசம்.இந்தியா- பாக்.,கிற்கு இடையே நடைபெற்ற பல போர்களிலும், 1962ல் நடைபெற்ற சீனா போரின்போதும் முக்கிய பங்கு வகித்த பூமியாகும்.
மாவட்ட தலைநகரான லே மற்றும் கார்கில் ராணுவ மண்டலமாக அறியப்பட்டுள்ளது
காஷ்மீர் மாநிலத்தின் உயர்ந்த பீடபூமியாகும். (உயரம் சுமார் 9,800 அடி)
இந்தோ ஆரியர் மற்றும் தொல்குடி திபேத்திய வம்சத்தினர் இங்கு வாழ்கின்றனர், இவர்கள் பேசும் மொழி திபேத்திய மொழியாகும்.
விவசாயம் தவிர்த்து இங்கு சுற்றுலாதான் பிரதானமாக கருதப்படுகிறது. மலையேற்றம், ஆற்றுப்பயணம், பனிச்சறுக்கு போன்ற சாகச விளையாட்டுகளுக்காக நிறைய பேர் உலகம் முழுவதும் இருந்து இங்கு வருகின்றனர்.
வருடத்திற்கு சுமார் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். ஜூன் முதல் அக்டோபர் வரை அருமையான சீசனாகும்.
நீண்ட மலைத்தொடரின் அழகை காணவும், சாகச பயணங்கள் செய்யவும் வரக்கூடிய பயணிகள் கூடுதலாக இங்குள்ள ஷேய்மடம், சாந்தி ஸ்தூபம் போன்ற இடங்களை பார்த்துவிட்டு பின் இங்குள்ள புகழ் பெற்ற காட்டெருதுகளுடன் படம் எடுத்துக் கொண்டு திரும்பி விடுகின்றனர்.
இங்கு கறுப்பு கழுத்து கொக்கு, குள்ள வாத்து, பனிக்காக்கை, சிவப்பு அலகுள்ள காக்கை, நீல ஆடு, திபேத்திய காட்டு கழுதை, மறிமான், மற்றும் பனிச்சிறுத்தை என்று சுமார் 225 உயிரினங்கள் உள்ளன என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாகும்.
உண்மையில் இது "வைல்டு லைப் போட்டோகிராபிக்கு' ஏற்ற ஊராகும். இதன் காரணமாக இங்கு சென்ற சென்னை புகைப்படக் கலைஞர்கள் அடங்கிய குழுவில் இடம் பெற்றிருந்த வைல்டு லைப் போட்டோகிராபர் ரமணன் பத்மநாபன் தனது கேமிராவில் பதிவு செய்து வந்துள்ள படங்களை நமக்கு வழங்கியுள்ளார்.
அந்த படங்களை பார்க்க சிவப்பு பட்டையில் போட்டோ கேலரி என்ற பகுதியை கிளிக் செய்யவும்.
- எல்.முருகராசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக