செவ்வாய், 3 செப்டம்பர், 2013

கச்சத்தீவு : அனைத்துக் கட்சிக் கூட்டம்: பாரதிய சனதா

கச்சத்தீவு : அனைத்து க் கட்சி க் கூட்டம்: 
பாரதிய சனதா 
http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_794718.jpg
"கச்சத்தீவு, இலங்கைக்கு ச் சொந்தமானது எனக், கூறுவதை, ஏற்க முடியாது. இதுபற்றி விவாதிக்க, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்' என, பா.ஜ., கோரியுள்ளது.

"ராமேஸ்வரம் அருகேயுள்ள கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது. அதை, திரும்பப் பெறும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, முதல்வர் ஜெயலலிதா, சுப்ரீம் கோர்ட்டில், மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

கேள்விக்கே இடமில்லை:

இந்த மனு, சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில், பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், "கச்சத்தீவு இந்திய அரசால், இலங்கைக்கு வழங்கப்படவில்லை; அதனால், அதை மீட்பது என்ற கேள்விக்கே இடமில்லை' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தமிழக மக்களுக்கு, குறிப்பாக, மீனவர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் பலவும், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.இந்நிலையில், ராஜ்யசபாவில் நேற்று, இந்தப் பிரச்னையை, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்கள் பெரிய அளவில் எழுப்பினர்.

ராஜாவுக்கு சொந்தம்:

அப்போது, நடந்த விவாதத்தின் போது, அ.தி.மு.க., - எம்.பி., மைத்ரேயன் பேசியதாவது:கச்சத்தீவு என்பது, ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமானது. இதை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் எல்லாம், இன்றும் தெளிவாக உள்ளன.கடந்த, 1974ல், கச்சத்தீவை தாரை வார்ப்பது தொடர்பாக, அப்போதைய வெளியுறவு அமைச்சர் தினேஷ்சிங், பார்லிமென்டில் பேசும்போது, "இந்தியாவின், ஒருங்கிணைந்த அங்கமே கச்சத் தீவு' என, கூறியிருந்தார்.இதுதொடர்பாக, அப்போது நடைபெற்ற விவாதத்தில் பங் கேற்று பேசிய, முன்னாள் பிரதமர் வாஜ்பாயும், "இது ஒப்பந்தமே அல்ல. இலங்கையிடம், இந்தியா அடையும், சரணகதி படலம்; கச்சத் தீவை ஒப்படைப்பது, முற்றிலும் தவறானது' என, தெரிவித்து உள்ளார். இவை எல்லாமே, பார்லிமென்ட் ஆவணங்களில் இன்றளவும் உள்ளன.இலங்கையில், தமிழர்கள், கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கபட்ட விவகாரம், தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்கும் பிரச்னை, கச்சத்தீவை மீட்கும் விவகாரம் என, அத்தனையிலும், தமிழகத்திற்கு விரோதமான போக்கையே, மத்திய அரசு மேற்கொள்கிறது. இதற்கு, வரும் தேர்தலில், காங்கிரசோடு கூட்டணி சேரும், எந்த கட்சிக்கும், தமிழக மக்கள் கடுமையான பாடம் புகட்டுவர்.இவ்வாறு மைத்ரேயன் பேசினார்.

இலங்கைக்கு சொந்தமா?


பா.ஜ., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது:
கச்சத்தீவு, இலங்கைக்கு சொந்தமானது என, மத்திய அரசு திரும்ப திரும்ப கூறுகிறது. இதை, நிச்சயமாக ஏற்க முடியாது. கச்சத்தீவு, நம்நாட்டோடு ஒருங்கிணைந்த அங்கம். அதை, நம்நாட்டிடமிருந்து பிரித்து பார்க்க முடியாது. தமிழக மீனவர்கள் மீது, தாக்குதல் நடத்துவதற்கு அடிப்படையாக, கச்சத்தீவு விவகாரம் உள்ளதால், இதுபற்றி விவாதிக்க, உடனடியாக, அனைத்துக் கட்சி கூட்டத்தை, மத்திய அரசு கூட்ட வேண்டும்.இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

தாக்குதல்:



தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேசியதாவது:தமிழக மீனவர்கள், தொடர்ச்சியாக தாக்கப்படுகின்றனர். ராமேஸ்வரத்திற்கும், இலங்கை தலைமன்னாருக்கும் இடையே, வெறும், 20 மைல்களே உள்ளன. இதில்போய், சர்வதேச கடல் எல்லைக் கோடு வகுப்பதும், அதை தாண்டி மீன் பிடிக்க செல்லக் கூடாது என, கூறுவதும், ஏற்க முடியாதது.தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு, முற்றுப்புள்ளி வைக்க, கச்சத்தீவு விவகாரத்திற்கு தீர்வு காண, வேண்டும். இதுதொடர்பாக, தி.மு.க., சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இவ்விஷயத்தில், மத்திய அரசு, உரிய கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு கனிமொழி பேசினார்.

- நமது டில்லி நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக