செவ்வாய், 23 அக்டோபர், 2012

இந்திய அமைதிப்படைக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள்: விரைவில் தீர்ப்பு

காங்கோவில் பணியாற்றிய இந்திய அமைதிப்படைக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள்: விரைவில் தீர்ப்பு
காங்கோவில் பணியாற்றிய இந்திய அமைதிப்படைக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள்: விரைவில் தீர்ப்பு
புதுடெல்லி, அக்.23-

1997 - 1999 ம் ஆண்டு வரை காங்கோ நாட்டில் உள் நாட்டுப் போர் நடைபெற்றது. அங்கு அமைதியை நிலைநாட்ட ஐ.நா. சபை தலைமையின் கீழ் பணியாற்ற இந்திய அமைதிப்படையின் 4000 ராணுவ வீரர்கள் சென்றனர். கடந்த 2007 - 2008 ம் ஆண்டு அனுப்பப்பட்ட 6 சீக்கியப் பட்டாளியன்கள் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பின்னர் இது குறித்து விசாரணை நடத்த பிரிகேடியர் தலைமையின் கீழ் ஒரு கலோனல் விசாரிக்க ஐ.நா. உத்தரவிட்டது. இந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணை முடிவடைந்த நிலையில், அது குறித்து தீர்ப்பை கலோனல் விரைவில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், 2010 ம் ஆண்டு மேஜர் ஒருவர் காங்கோவில் உள்ள ஒரு ஹோட்டலில், பாலியல் தொழிலாளர்களுடன் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக