செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

தன்னம்பிக்கை தளராத கிருட்டிணாராம்! - நலத்திட்டம் செயற்படுத்துவோர் நாண வேண்டும்!



"தன்னம்பிக்கை' தளராத கிருட்டிணாராம்

மதுரை:வயதான நிலையில், வறுமையில் தவித்தபோதும், நகரெங்கும் நடந்தே சுற்றி பிளாஸ்டிக் மாலைகள் விற்று வயிற்றை கழுவுகிறார் முதியவர் கிருஷ்ணாராம், 78.

திருநகர் அருகே தனக்கன்குளம் திருவள்ளுவர்நகர் மேட்டுக்காலனியில் வசிக்கும் அவரது மனைவி, பதினான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். குழந்தைகள் இல்லாததால் தனிநபராக வசிக்கிறார். திருநகர், திருப்பரங்குன்றம், மதுரை என பல பகுதிகளுக்கும் நடந்து செல்லும் அவர், பிளாஸ்டிக் பூமாலைகளை விற்கிறார். வயதானவர் என கருதி காசு, பணம் கொடுத்தாலும் வாங்க மறுக்கும் அவர், மாலைகளை வாங்கி உதவும்படி கூறுகிறார்.

அவர் கூறுகையில், ""தினமும் ரூ. 50 வரை கிடைக்கும். போதுமானதாக இல்லாவிட்டாலும், சமாளிக்கிறேன். வியாபாரம் ஆகாதபோது, சரிவர உணவு உண்ண முடியாமலும் போகிறது. முதியோர் உதவித் தொகை கேட்டு 2 ஆண்டுகளில் பலமுறை விண்ணப்பித்தேன். இன்னும் கிடைக்கவில்லை,'' என்றார்.

உதவித் தொகையை எதிர்பாராமல், தள்ளாத வயதிலும் "தன்னம்பிக்கையுடன்' வலம் வரும், கிருஷ்ணாராம் பாராட்டுக்குரியவரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக