திங்கள், 25 ஜூன், 2012

செல்லூர் இராசுவின் மகன் மரணம்

அவர் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கல்கள். காலங்கடந்த பயணங்களையும் மிகு விரைவையும் தவிர்ப்பின் குடும்பத்திற்குத் துயரம்தரும் சூழல் எழாது என்பதை அத்தகையோர் உணர வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

செல்லூர்  இராசுவின் மகன் மரணம்: செயலலிதா இரங்கல்

First Published : 25 Jun 2012 03:34:38 PM IST

Last Updated : 25 Jun 2012 04:19:29 PM IST

சென்னை, ஜூன்.25: கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மகன் தமிழ்மணி நேற்று சாலைவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மரணத்தால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் செல்லூர் ராஜூவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக