ஞாயிறு, 27 மே, 2012

வீழ்ந்த தமிழினம் வீறு கொண்டெழவே


வீழ்ந்த தமிழினம் வீறு கொண்டெழவே தமிழக இளைஞர் எழுச்சிப்பாசறையின் முள்ளிவாய்க்கால் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம்

வீழ்ந்த தமிழினம் வீறு கொண்டெழவே தமிழக இளைஞர் எழுச்சிப்பாசறையின் ஏற்பாட்டில் நேற்று(26.05.2012) மாலை சென்னை ம.கோ.இரா. சந்தையில் முள்ளிவாய்க்கால் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழர்கள் ஒன்றுபட்டாலே ஈழம் விடுதலை அடையும்: மல்லை சத்யா
தமிழர் அமைப்புகள் வேற்றுமைகளை நீக்கி ஒன்றுபட்டு போராடினாலே தமிழீழத்தை அடிமைச்சிறையிலிருந்து விடுவிக்க இயலும் என்று மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்கள் நேற்று சென்னையில் நடைபெற்ற தமிழக இளைஞர் எழுச்சிப்பாசறை பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
அவரது உரையினை கீழ்க்காணும் இணைப்பில் காணவும்


எழுச்சிப்பாசறையின் முள்ளிவாய்க்கால் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம்


2009 ன் முன்னர் ஈழவிடுதலைக்கு ஆதரவாக தமிழக மக்கள் இருந்தோம். இன்றோ ஈழ விடுதலைக்கு தோளோடு தோள் கொடுக்க வேண்டும் நாம், தமிழர் அமைப்புகள் அனைத்தும் ஒன்றுபட்டு வலிமையாக ஈழ விடுதலைக்கு நாம் குரல் கொடுப்போம் என்று தமிழக இளைஞர் எழுச்சிப்பாசறை தோழர் அருண்சோரி தெரிவித்துள்ளார்.


அன்று இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் எழுந்தனர். இன்று முத்துக்குமாரன் இறப்பின் மூலம் தமிழக மாணவர்கள் எழுந்துவருகின்றனர் என்று தமிழ்த்தேச மாணவர் இயக்க தோழர் எழிலன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cqORpQqojkA



தமிழீழம் பற்றிய இந்தியாவின் கொள்கையை மாற்ற தமிழக தமிழர்கள் முயற்சிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழக இளைஞர் எழுச்சிப்பாசறை “வீழ்ந்த தமிழினம் வீறுகொண்டெழவே” என்ற இந்தப் பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம் என்று தோழர் ஆகாச முத்து வரவேற்புரையாற்றினார்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=iTRUfCuoz_8





தமிழர்களுக்கு எதிராக இந்தியப்பேரரசு செயல்படுகிறது என்பதை மக்கள் உணர வேண்டும், உணர்ந்தால்தான் தமிழீழ விடுதலையை நாம் வென்றெடுக்க இயலும் என்று தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் தோழர் தமிழ் நேயன் தெரிவித்துள்ளார்.
இவரது உரையின் காணொளி:
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=NZkiix39k34




“இலங்கையிலிருந்து இந்தியா மீது விரைவில் சீனா போர்தொடுக்கும் அப்பொழுதும் தமிழன் தான் சாவான். சீனா இலங்கையில் தளம் அமைக்கிறது. இந்தியா இன்னும் வேடிக்கைப்பார்த்துக்கொண்டே இருக்கிறது” என்று தமுமுக தோழர் எஸ்.எஸ். ஆரூண் ரசீப் தெரிவித்துள்ளார்.
இவர் உரையின் காணொளி:

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=zIGM0HiyB0Y




வரலாற்றில் ஒருமுறை கூட ஈழத்தமிழர்கள் மத்தியிலிருந்து தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்படுகிறார்களே அதை நாங்கள் கண்டிக்கிறோம் என்ற குரல் வந்ததே கிடையாது என்று நேற்று சென்னையில் நடைபெற்ற தமிழக இளைஞர் எழுச்சிப்பாசறை பொதுக்கூட்டத்தில் தமிழ்த்தேசியப் பொதுவுடைமைக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
இவர் உரையின் காணொளி

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=mX-S2qZe1sY

முள்ளிவாய்க்காலில் முடிவுற்றது விடுதலைப்போர் மட்டுமே அன்றி விடுதலைப்போராட்டமல்ல. விடுதலைப்போர் நடைபெறாதபொழுது விடுதலைப்போராட்டம் தொடர்ந்து ஒவ்வொரு வடிவில் நடைபெற்றுக்கொண்டே இருக்கும் என்று தமிழர் தேசிய விடுதலை இயக்க தோழர் தியாகு தனது உரையில் தெரிவித்துள்ளார்.
இவர் உரையின் காணொளி:







நன்றியுரை:
தோழர் மணிகண்டன்

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=eKUHytn-Kzg





tiep_26052012_periyarthalam-1

 

tiep_26052012_periyarthalam-1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக