வியாழன், 28 ஏப்ரல், 2011

புலிகளின் தளபதி இரமேசு சித்திரவதைக்குப் பின் சுட்டுக்கொலை?

இது போன்ற  கொடூரக் கொலைகளுக்குப் பொறுப்பு சிங்கள அரசு மட்டுமன்று; இந்திய அரசும் தமிழக ஆட்சியாளர்களும் அனைத்துக் கட்சிகளும்தான். தங்கள் பெருமையைக் காட்ட பல நேர மணிநேர ஊர்வலத்தையும் கூட்டத்தையும் கூட்டும்  இவர்களால் இனப்படுகொலைநடக்கும் முன்னரே தமிழக மக்களை ஒருங்கிணைத்துப் போராடி இவற்றைத் தடுத்திருக்க முடியுமே! இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்ட மன்ற உறுப்பினர்க்ளும் அவர்களது ௩ தலைமுறை குடும்பத்தினரும் தேர்தலில் போட்டியிடவும் அரசின் பதவிகளை  வகிக்கவும் தடை விதிக்க வேண்டும். உடந்தையாயிருந்த அதிகாரிகளின் சொ்த்துகளைப் பறிமுதல் செய்து தண்டிப்பதுடன் அவர்களது  3 தலைமுறையினர் ஆட்சிப் பொறுப்பில்  வருவதற்கும் தடை விதிக்க வேண்டும். சிங்களத் தலைவர்களையும் படைத்தலைவர்களையும் கூட்டுக் கொலையாளிகளாக இருந்த இந்தியத்தலைவர்களையும்
அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும்.  கடவுளே நடைப்பிணங்களாக உள்ள எங்களையும் மன்னியுங்கள.! 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


புலிகளின் தளபதி ரமேஷ் சித்திரவதைக்குப் பின் சுட்டுக்கொலை?

First Published : 28 Apr 2011 01:13:09 PM IST

Last Updated : 28 Apr 2011 01:54:15 PM IST

கொழும்பு, ஏப்.28:  விடுதலைப்புலிகளின் தளபதி ரமேஷ் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் சீருடை அணிந்து சுட்டுக் கொல்லப்பட்ட படம் போர்க்குற்ற ஆதாரப் படங்களில் இடம்பெற்றுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் தெரிவித்துள்ளன.ரமேஷ் ராணுவத்திடம் சரணடைந்த பின்னர் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படும் வீடியோவும், ராணுவ வாகனம் ஒன்றில் வைத்து விசாரிக்கப்படும் வீடியோவும் முன்னதாக வெளியாகி இருந்தன.எனினும் ரமேஷ் எங்கே என அவரது குடும்பத்தினர் விசாரித்தபோது அவர் குறித்து எதுவும் தெரியாது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நடேசன், புலித்தேவன் ஆகியோருடன் ரமேஷ் சேர்ந்தே சரணடைந்தார் என்றும் கூறப்பட்டது.இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள போர்க் குற்றப் படங்களில் ரமேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட படம் இடம்பெற்றுள்ளதாக இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் ரமேஷ் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கொடூரமான முறையில் அவர் கொல்லப்பட்டுள்ளது அந்த புகைப்படம் மூலம் தெரியவருவதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்

சீன்கள ராணுவ நாயே உன் அழிவு என் கையில்
By ராஜேஷ் trichy
4/28/2011 5:50:00 PM
பாருங்கள் இந்தக் கொடூரத்தை , இத்தாலிக்காரியின் பழிவாங்கும் வெறியால் தீயில் சுட்டு கருக்கப்பட்டு கொல்லப்பட்ட நடேசன் ,புலித்தேவன் படங்கள் வெளிவந்தது ,இப்போது ரமேஷின் சவக்கோலத்தைப் பாருங்கள் ! இங்கு இன்னமும் தி.மு.க . வையும் ,இனத்துரோகி ,ஈழம் கொன்றவனை ,நம்பிக்கை துரோகியை ,தன்குடும்ப மக்களுக்காக எம் தமிழ்க்குலம் கருவறுத்த கயவனை ,கருணாநிதியை ஆதரிப்பவர்களே என்ன செய்யப்போகிறீர்கள் ? இலங்கையில் மட்டுமா ? இங்கும் இவன் குடும்பம் ஒன்று சேர்ந்து வாழ மதுரையில் மூன்று பேரை பலி கொடுத்தார்களே ? கொலைகார ராஜபக்ஷேவை ," பிணவெறியன்" என்றும் , தமிழின துரோகி கருணாநிதியை "பண வெறியன்" என்றும் சீமான் சொல்வதில் என்ன தவறு ?
By பொன்முத்து
4/28/2011 5:30:00 PM
எப்படி ஈவிரக்கமின்றி பிற இயக்கத்தவர்களை இவரும் ஏனைய புலிகளும் சித்திரவதை செய்து அழித்தார்களோ அதே வழியில் தாமும் அழிந்தனர். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது முன்னோர் வாக்கு. நந்தன்.
By Nandan
4/28/2011 5:26:00 PM
போர்களின் பொது பின்பற்ற வேண்டிய எந்த ஒரு நடைமுறைகளையும் கொடியவன் ராஜபட்சே பின்பற்றவில்லை.
By venkatesan.k,vaiyapuri
4/28/2011 4:31:00 PM
RAJABHAKSAY AND HIS CRUIAL TEAM HAS TO ANSWER FOR THIS UNHUMAN ACT!
By RANGARAJMANGAL
4/28/2011 3:37:00 PM

சிங்கள ராணுவம், மிருகத்தை விடவும் மோசமாக நடந்துள்ளது. தனது நாட்டின் பிரஜைகளை, ஈவு, இரக்கம் இல்லாமல் கொன்று குவித்துள்ளது. யுத்த நெறிகளை மீறி, விடுதலை புலி தலைவர்களை சித்திரவதை செய்து கொன்றுள்ளனர். இந்த படுபாவ செயல்களுக்கு , இந்தியாவின் பங்கும் உள்ளது தான் வேதனை அளிக்கும் விஷயம். மத்தியில் ஆளும் சோனியா அரசும், தமிழ்நாட்டில் ஆளும் திமுக வும் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். தூதரக உறவுகளை துண்டிப்பதோடு, ஐ நா சபைக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழினம் அழிந்து போகுமோ என்ற அச்சம் இப்போது வந்திருக்கிறது.
By பி.டி.முருகன் திருச்சி
4/28/2011 3:21:00 PM
ரமேஷை ஓர் இராணுவ வாகனத்தில் வைத்து விசாரிக்கப்படும் வீடியோவை நானும் பார்த்தேன். அவருக்கு ஆங்கிலம் தெரியாததால், அவருக்கு தெரிந்த ஏதோ ஒருசில ஆங்கில வார்த்தைகளை வைத்து பதில் கூறினார். (அந்நிலையிலும்கூட மரண பயம் துளியும் இல்லாதாதுதான் அவரது உண்மையான வீரம்). மொழி தெரியாத ஒருவரை விசாரிக்கும்போது ஒரு மொழி பெயர்ப்பாளரை வைத்து விசாரிக்க வேண்டும் என்ற ஓர் அடிப்படை அறிவு - நாகரீகம் - பண்பு இல்லாதவர்களிடம் நாம் நீதியை எதிர்பார்ப்பது நமது அறிவீனம்.
By Abdul Rahman - Dubai
4/28/2011 1:48:00 PM
ரமேஷை ஓர் இராணுவ வாகனத்தில் வைத்து விசாரிக்கப்படும் வீடியோவை நானும் பார்த்தேன். அவருக்கு ஆங்கிலம் தெரியாததால், அவருக்கு தெரிந்த ஏதோ ஒருசில ஆங்கில வார்த்தைகளை வைத்து பதில் கூறினார். (அந்நிலையிலும்கூட மரண பயம் துளியும் இல்லாதாதுதான் அவரது உண்மையான வீரம்). மொழி தெரியாத ஒருவரை விசாரிக்கும்போது ஒரு மொழி பெயர்ப்பாளரை வைத்து விசாரிக்க வேண்டும் என்ற ஓர் அடிப்படை அறிவு - நாகரீகம் - பண்பு இல்லாதவர்களிடம் நாம் நீதியை எதிர்பார்ப்பது நமது அறிவீனம்.
By Abdul Rahman - Dubai
4/28/2011 1:47:00 PM
ஸ்ரீலங்காவின் அழிவு தமிழனின் சாபத்தால்!
By eerere
4/28/2011 1:39:00 P

1 கருத்து: