சனி, 30 ஏப்ரல், 2011

A.C.Sanmugam about War crimes of singalam: இலங்கையுடனான தூதரக உறவை முறித்துக் கொள்ள வேண்டும்: ஏ.சி.சண்முகம்

பலரும்  கூறும் நலல கருத்து. ஆனால், இந்திய அரசு  தன் சார்பாக நடத்தப்பட்ட  இனப்பபடுகொலைகளுக்கு எவ்வாறு எதிரான நடவடிக்கை எடுக்கும்? எய்தவன் இருக்கஅம்பை நோவானேன்? காங்.அரசை அகற்ற நாடு தழுவிய போராட்டத்தை நடத்துங்கள். கொலைகார அரசு அகன்றால் அனைத்துக் குற்றவாளிகளும் தண்டிக்கப் பெறுவர். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
 
 
இலங்கையுடனான தூதரக உறவை முறித்துக் கொள்ள வேண்டும்: ஏ.சி.சண்முகம்

First Published : 30 Apr 2011 02:50:32 AM IST


சென்னை,ஏப்.29: தமிழின படுகொலையைக் கண்டிக்கும் வகையில் இலங்கையுடனான தூதரக உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்று புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:  இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் இதுவரை மெüனம் காத்துவந்த மத்திய அரசு இனியேனும் விழித்திட வேண்டும். உலக அரங்கில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள இலங்கையின் அதிபர் ராஜபட்சவின் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்தத் தமிழின படுகொலையைக் கண்டிக்கும் விதமாக இலங்கை அரசுடனான தூதரக உறவை முறித்துக் கொள்ளவேண்டும். இதுவரை இலங்கைக்குச் செய்துவரும் பொருளாதார உதவிகளையும் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்

1 கருத்து: